<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, December 31, 2004

அழுகை

உண்மை உணர்வுடன் உதவும் கரங்களை கீழ்தர விதத்தில் சீண்டி பார்பது நியாமற்றது, கண்டனத்துக்குரியது.

கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (CTBC-www.ctbc.com) பல்லாயிர கனடா தமிழர்களின் அன்பினையும், நம்பிக்கையையும் பெற்ற சுதந்திர வர்த்தக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம். அது சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்க்கு உதவும் முழுநோக்கோடு (மார்கழி/26/2004) காலை தொடக்கம் 3500 மேற்பட்ட (மார்கழி/28/2004-காலை வரை) மக்களின் சிறு சிறு துளியான பங்களிப்பை உள்வாங்கி, ஒருங்கிணைத்து, நேரடி அவசர உதவிக்கு கிடைக்க வழி செய்தது, தொடர்ந்து செய்கின்றது. கனடாவில் இருந்து சென்ற வைத்திய குழுவிற்கு தேவையான மருந்துகளுக்கு நிதி (www.tamildoctors.org); மட்டக்களப்பு ஆயர் மூலம் அங்கிருக்கும் மக்களுக்கும், தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகம்(www.troonline.org)் மூலமும், மற்றும் பல வழிகள் மூலமும் உதவி தொடர்கின்றது.

கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அதிபர் இளையபாரதி முன்நின்று விழி அயராமல், குரல் ஒயாமல், பல இடர்களை சமாளித்து கலைஞ்ஞர்கள், தொண்டர்கள், வர்த்தகர்கள் துணை கொன்டு இந்த அவசர நிதி சேகரிப்பலும், நேரடியாக பாதிகப்பட்டோர்களுக்கு போய்சேர்வதிலும் கவனமுடன் உழைக்கின்றனர்.

அப்படியிருக்க, கனடா உலகத்தமிழர் அமைப்பும் (www.worldtamils.com) (கனடாவில் புலிகளின் அதிகார பூர்வற்ற பிரதிநிதி), அதன் நேரடி ஆதரவை பெற்ற சகோதர வனோலியான கனடிய தமிழ் வானொலியும் (www.ctr24.com) தன் நேயர்கள் ஒலிபரப்பாளர்கள் மூலம் கீழ்தர விமர்சனங்களை முன்வைத்தது வேதனைக்குரியது.

"இலங்கை அரசிடம் நிதி போகபோகுது"
"இளையபாரதி பணத்தை சுருட்டி கொண்டு ஓடப்போகின்றார்"
"கிறீஸ்தப பாதர் மூலம் ஏன் நிவாராணம்?"

இப்படிபட்ட நேரடியியான மறைமுகமான தாக்கங்களை தாங்காமல் இளையபாரதி அவர்கள் (மார்கழி/26/2004-இரவு ~9:00) நிகழ்ச்சியில் கண்ணீீர் சிந்தி அழுதார். உதவிக்காக வைத்திய குழுவொன்றை வழிஅனுப்பிவிட்டு விளக்கம் அழித்தது கொண்டிருந்த வைத்தியர்கள் முன்நிலையில் இது நடந்தது.

உதவி வேண்டி அழும் மக்கள் அங்கே, உதவி செய்து அழும் உள்ளங்கள் இங்கே.

தோழர்களே: உங்களுக்கு கேள்விகள் சந்தேகங்கள் இருக்குமானால் நேரடியாக, பண்புடன் கேழுங்கள். ஆனால் பண்பற்ற மனிதம் அற்ற முறைகளில் தாக்காதீர்கள்.

இறையே:
அவர்கள் தம்மை அறியாமல் செய்யும் இச்செயலை மன்னித்து, உண்மையை உணர வைப்பீராக.

பி.கு:
இதன் பின்னர், இக்கட்டான இச் சூழலில் இப்படிப்பட்ட கீழ்தர விமர்சனங்களுக்கு மேலும் வான் அலையில் இடமளிப்பது இல்லை என்று கனடிய தமிழ் வானொலி உறுதி.

வெறுமை

"போனதெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானோர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ" - பாரதி


அழகிய இயற்கையே
உன்னில் தங்கி, உன்னில் ஒன்றாகியவர் நாம்.
ஏன் இப்படி சித்ரவதை செய்கிறாய்?

நான் ஒரு மடையன்.
உனக்கு உணர்வு உள்ளது போல்
உனக்கு செவிகள் உள்ளது போல்
உன்னிடம் கேட்கின்றேன்.

உனக்குள் அழகை வைத்த நாம்
உனக்குள் அறிவை பார்த்த நாம்
உனக்குள் அழிவை பார்க்க தவறிவிட்டோம்.

கடலே, புயலே, பூமியே
எமக்குள் வாழ்ந்த எம்மை அலறவைத்தாய்
உனக்கும் இது ஒரு நாள் நிச்சியம் என்று உணரவைத்தாய்
ஆயினும்...
வார்த்தையால் ஓர் அஞ்சலி
சுயநலத்தில் சிறு உதவி
சிந்தனையில் சில கேள்விகள்
என்றுவிட்டு நான் எனக்குள் திரும்ப நினைக்கையிலே

ஐயோ
வெறுமை
மனக்காட்டில் வெறுமை

மனிதரில் வெல்பவரை கண்டு பொறாமை கொண்டதுண்டு,
மனிதரில் செத்தவரில் என்னைக் கண்டு வெறுமை.

வெறுமைக்குள் ஒரு பயம்.
நான் அல்லவா அவர்கள்.
அலையில் அமிழ்ந்தது நான்
குழியில் நான்
உற்றாரை இழந்து தவிப்பது நான்
நான் அல்லவா அவர்கள்.

வெறுமைக்குள் ஒரு பலம்.
மாய்ந்த மனித குழுவின் பிரதிகள் நாங்கள்
அவர்கள் ஆசைகள், திட்டங்கள், செயல்கள் எம்முடையவை
உயிர்க்க மரிக்கும் மனிதர் நாம்

வெறுமைக்குள் இருந்து மறுவாழ்வை அமைத்துடுவோம் நாம்.

Friday, December 24, 2004

இணையத்தில் சுய கல்வி

சுய கல்வி என்றல் என்ன?
கற்றல் தனி மனித, மனித இன மேம்பாட்டிற்க்கு அவசியம். குருவின் வழிகாட்டலும், சுற்றாடலும் கல்விக்கு அவசியம் எனினும் கற்றலுக்கு தன்னார்வு செயற்பாடே அடிப்படை. சுய கல்வி எனப்படுவது, ஒவொரும் மனிதனும் தனது தேவையை உணர்ந்து, தனது வழிகாட்டலுடன், பல வழிமுறைகளில் கற்பதையே குறிக்கும். கல்லூரிக் கல்விக்கு அப்பால் அல்லது புறம்பால் மேற்கொள்ளப்படும் கற்றலை சுயகல்வி சுட்டி நிற்க்கின்றது. சுய கல்வியை பற்றி மேலும் தகவல்களுக்கு:

http://www.autodidactic.com/
http://www.infed.org/hp-intro.htm
http://www.creatinglearningcommunities.org/
http://www.elearnspace.org/
http://www-jime.open.ac.uk/98/4/

சுய கல்வி ஏன்?
வாழ்வே ஒரு கற்கை நெறிதான். சுய கல்வி என்பதன் மூலம் தீவரப்படுத்தப்பட்ட கற்றல் செயற்பாடையே குறிக்கும். வாழ்க்கையை திறன்பட வாழ்வதற்க்கு வேண்டிய அறிவை பெற தேவையானதே சுய கல்வி.

இன்று, பல்கலைகழகங்கள் அதிகார-உத்யோக வர்க்க கொழ்கைகளை பிரதிபலித்து, தொழில் நிலை கல்வியையே முதன்மை படுத்துகின்றன. தம்மை நோக்கிய ஒரு பிம்மமாக்கலையும் தோற்றுவித்து காக்கின்றன. இந்நிலையிலும் சுய கல்வி எமது பன்முக அறிவை வளர்க்க தேவைப்படுகின்றது.

இணையம் சுய கல்விக்கு எப்படி உதவும்?
தகவல்களை இணையம் சேமிக்கவும், பகிரவும் உதவி சுய கல்வியை இலகுவாக்கி இருக்கின்றது. இதன் சிறப்பான எடுத்துக்காட்டாக திறந்த பாட காப்பகம்-MITs Open Course Ware், பொது களஞ்சியம் - Wikipedia ஆகியவை திகழ்கின்றன. மேலும் பல தளங்கள் உள்ளன, சில கீழே தரப்பட்டுள்ளன.

http://ocw.mit.edu/OcwWeb/index.htm
http://www2.fmg.uva.nl/sociosite/topics/index.html
http://en.wikipedia.org/wiki/Main_Page
http://www.ulib.org/html/index.html
http://www.howstuffworks.com/

http://mathworld.wolfram.com/

http://www.caida.org/outreach/iec/courses/
http://patft.uspto.gov/netahtml/search-bool.html
http://micro.magnet.fsu.edu/
http://www.thelearningpit.com/
http://www.zmag.org/weluser.htm

Thursday, December 23, 2004

நான்கு வகை மனிதர்கள்

லியோ ரொல்ஸ்ரோய் வாழ்வின் அர்த்தம் என்ன என்று கேட்டான்?
எதுவுமில்லை என்று உணர்ந்தான்.


ஏன் இதனை மனிதர் உணரவில்லை?
இக்கேள்வியின் பதிலை வைத்து, மனிதரை நான்கு வகையாய் பிரித்தான்்.

அவன் சொன்னான், சிலர் மடையர்களாக இருக்கின்றார்கள். பூக்கள் போல, விலங்குகள் போல "வாழ்வாங்கு வாழ்ந்து" சாவதே இம் மனிதர். இவர்கள் முதல் வகை.

சிலர் வாழ்வின் வெறுமை அறிந்தும், சிந்தனைக்கு மதில்கள் கட்டி வாழ்கின்றனர். குடும்பம், வேலை, சமயம் என்று கட்டுன்று கிடக்கின்றனர். இவர்கள் இரண்டாம் வகை.

மூன்றாம் வகை மனிதர்கள், வாழ்வின் போலி புரிந்தவுடன் தம்மை மாய்த்து கொள்கின்றார்கள். இவர்கள் வீரர்கள் என்கிறான் லியோ ரொல்ஸ்ரோய்.

நான்காம் வகை: வாழ்வின் வெறுமை அறிந்தும் கோழைத்தனமாய், நெஞ்சிடியோடு, "அர்த்தம் என்றொரு நாள் தோன்றிட மாட்டாதா" என்ற அற்ப ஆசையில் வாழ்ந்து சாகின்றனர்.

நான் எந்த வகை?
சில வேளை இரண்டாம் வகை, சில வேளை நான்காம் வகை, சில வேளை ...


மேலும் தகவல்களுக்கு:
http://flag.blackened.net/daver/anarchism/tolstoy/conf8.html http://www.utoronto.ca/tolstoy/journal.html
http://www.ltolstoy.com/

Monday, December 20, 2004

பிரபாகரனுக்கு இரு கனடா வானொலிகளின் வேண்டுகோள்

"கனடியத் தமிழ் மாணவர் அமைப்பு" (College and University Tamil Students Union www.cutsu.org) கீதவாணி என்ற வானொலி "கபட" நோக்கத்துடன் வெள்ள நிவாரணத்துக்கு எதிராக "பிராச்சாரத்தை மேற்கொள்வது" ஆக உலகத்தமிழர் - www.worldtamils.com் (Dec 16-23, 2004) பத்திரிகையின் முதல் பக்கத்தில் அறிவுறுத்தல் விடுத்துருந்தது. கனடிய தமிழ் வானொலி (CTR-www.ctr24.com) மூலமே உதவிகளை வழங்குமாறும் கேட்கப்பட்டிருந்தது.

இக்கூற்றை கீதவாணி ஒலிபரப்பாளர் நடா ராஜ்குமார்் முற்றிலும் மறுத்துள்ளார். திங்கள், (Dec 20, 2004 - 2:30) நடைபெற்ற ஒலிபரப்பாளர் இளையபாரதி (கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் CTBC-www.ctbc.com)் அவர்களுடனான இணைந்த விசேட ஒலிபரப்பில், புலிகளை தங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு உண்மை நிலயை புரியும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

Saturday, December 18, 2004

உலகமயமாக்கல்

பன்னாட்டு பொருட்கள் உண்டு,
எம் பசி இன்னும் தீரவில்லை

அமெரிக்க மயம் எங்கும்,
பாதியுடை எமக்கில்லை

கார்களுக்கு வீதி போட்டு,
வாழ்வதற்க்கு இடமில்லை

ஒளிர்கின்ற இந்தியாவில்,
காற்றும் நீருக்கும் சண்டை எங்கும்

கம்பியூட்டர் காலமிது,
நாங்கள் இன்னும் பட்டிக்காடு

பெரிய கப்பல் விட்டு அள்ளி,
மீன்கள் கடலில்லை

அராய்ச்சி விதை தந்து,
அரிசி விதை அபகரிப்பு

பலவித மருந்து செய்வர்,
பச்சிலையும் நமக்கில்லை

அடுத்த சந்ததி மீண்டுமாம்,
பொறுத்திருக்கட்டாம்.
அப்ப நாம்.

மாற்று வழிகள் உண்டோ?
உண்டு.

http://www.forumsocialmundial.org.br/index.php?cd_language=2 http://xat.org/
http://www.goodnewsindia.com/homepage.php
வேறு ஒரு உலகம் எமக்கு வேண்டும்.


உண்மை என்னவென்றால்

சுவைமிகு உணவு உண்ண
ஒரு நல்ல வீடு கட்ட
விதவித பொருட்டள் வாங்க
பலவித இடங்கள் செல்ல
புதுபுது கலைகள் செய்ய

எமக்கும்் பேராசை, அது முடியுமா
இவ்வுலகில் எல்லாரோலாலும் முடியுமா?
முடியும், முடியும்.

http://www.bfi.org/option.htm

http://www.evolve.org/pub/doc/index2.html

Friday, December 17, 2004

ஒப்பிடுதல்

ஒப்பீடு: ஈழத் தமிழர், தமிழகத் தமிழர்் என்ற ஒரு மேலோட்டமான பதிவு இட்டேன். அப்பதிவு ஒரு விபரிய பதிவு அன்று. ஒரு குறும்பு பதிவு என்றாலும் மிகையாகாது. ஆயினும், தனி நபரையோ, குழுவையோ வஞ்சித்து நான் எழுதவில்லை. (அப்பதிவுக்கு சோழியான் அவர்கள் முன்வைத்த சில கருத்துகளை உள்வாங்கிய பதிப்பே இது.)

இரு துருவ முறையில் ஒப்பிட்டது, ஒருவித கவன ஈர்ப்பு தந்திரமே (ஒத்துகொள்கின்றேன்). பிரிவினைகளை முன்நிறுத்தல் மூலம் நாம் உணர்வு ரீதியாக கவனத்தை ஈர்க்க முடியும். உதாரணமாக, கிழக்கு எதிர் வட ஈழம், ஆரியர் எதிர் திராவிடர், வட எதிர் தென் இந்தியர்்.

ஒப்பிடுதல் ஒரு பகுத்தாய்வு முறையே. ஆயினும், சீரிய ஒப்பிடுதல் அத்தாட்ச்சிகளுடன் விபரிக்கபடல் வேண்டும். எனது பதிவு சீரிய ஒப்பிடுதல் இல்லை. உதாரணமாக, ஈழத்து தமிழர்கள் தங்களை இலங்கையர் என்று அடையாளப்படுத்துவது இப்போது குறைவு. ஆனால், தமிழக தமிழர் தாம் இந்தியர் என்பதை நிலை நிறுத்த என்றும் தயங்குவதுதில்லை. வெளிநாடுகளில் நாம் அனைவரும் தெற்காசியர் அல்லது இந்தியர் என்ற குடைக்குள் அடையாளம் தேடுபவர்கள். எந்த அடையாளத்தை யார் எப்பொழுது முன்நிறுத்துகின்றார்கள் என்று கணக்கெடுப்பு கிடையாது, அப்பதிவு ஒரு குத்து மதிப்பே.

மேலும் நான் ஈழ அரசியலை பயங்கரம்/பயங்கரவாதம் என்று குறிப்பிட்டேன். ஆனால் நான் போராளிகளை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடவில்லை. அரச பயங்கரவாதமே ஈழ போராட்டத்தின் அடிப்படை காரணிகளில் ஒன்று.

ஒப்பிடுதல் மூலம் எம்மை நாம் பரிசோதனைக்கு உட்படுத்தி விடுகின்றோம். ஒப்பிடுதல் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கிடையேதான் பொருத்தமானதாக அமையும். ஈழ தமிழக சமூகங்களுகிடையான சமூக, கலாச்சார, வரலாற்று தொடர்புகளை விபரிக்கும் நூற்கள் பல உண்டு. ஆயினும், இன்றைய ஈழ தமிழக சமூகங்களின் பொருளாதார, கலாச்சார, கொள்கை ஒற்றுமை வேற்றுமைகளை நேரடியாக ஒப்பிட்டு விளக்கும் படைப்புக்கள் ஏதும் உண்டா?

ஒப்பிடுதல் மூலம் ஒரு போட்டி மனநிலை முன்வைக்கப்படுகின்றதா?
யார் திறமையானவர்கள் என்று பின்னணியில் கேள்வி எழுப்பப்படுகின்றதா?

பி.கு:

சோழியான்:
1. பல நிதர்சன படைப்புக்களை பார்த்திருக்கின்றேன். "கடலோர காற்று" நான் நேசிக்கும் கலைப்படைப்பு.
2.மலையக தமிழரை சில ஈழ தமிழர்கள் வீட்டு, வயல் வேலைகளுக்கு கொத்தடிமைகள் போன்று பயன்படித்தியது பதியப்பட்ட வரலாறு. ஈழவேந்தன் குறிப்பிட்டது போல மலையக தமிழரின் உரிமைகள் இழுத்தடிக்கப்பட்டதற்கு ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
3."சீரியசான ஆக்கள்" எதிர் "சினிமா பார்க்கலாம்" கன்னத்தை முத்தமிட்டால் படத்தின் உள்வாங்கலே.
4.சரியான கேள்விகள் "அறிவுஞானத்திற்கு" படிக்கற்களே.

மூர்த்தி:
உங்களை போல சில விடயங்களை நேருக்கு நேர் சொல்ல முயற்ச்சிக்கின்றேன்.

மாயவரத்தான்:
ஈழவர்கள் தமிழ் அடையாளத்தை முன்நிறுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இலங்கை ஒரு அழகிய தேசம். அங்கு எங்கும் பூரண சுதந்ரத்துடன் தமிழன் மற்றவர்கோளுடு கூடி வாழ வேண்டும், இந்தியா போல. உரிமைகளை மதிக்கும் காக்கும் சுதந்திர இலங்கையை ஈழதமிழர்கள் நேசிக்க பின் நிற்க மாட்டார்கள்.

ஈழநாதன்:
இன்றைய ஈழ தமிழக சமூகங்களின் பொருளாதார, கலாச்சார, கொள்கை ஒற்றுமை வேற்றுமைகளை நேரடியாக ஒப்பிட்டு விளக்கும் படைப்புக்கள் ஏதும் உண்டா?

Thursday, December 16, 2004

ஒப்பீடு: ஈழத் தமிழர், தமிழக தமிழர்

வரலாற்றால், பண்பாட்டால், மொழியால் ஒன்று பட்ட இரு சமூகங்களின் வேறுபாடுகளை தனித்துவங்களை ஒப்பிடுதல், பல நிலைகளில், பல காரணங்களுக்காக செய்யப்படுவதுண்டு. இதோ ஒரு நேரடி ஒப்பீடு.
மூன்று மில்லியன்அறுபது மில்லியன்
முதலில் தமிழ்முதலில் இந்தியன்
அரசியல் பயங்கரம்/பயங்கரவாதம்அரசியல் சாக்கடை
இடியப்பம், புட்டுஇட்லி, தோசை
கலை படைப்புக்கள், திரைப்படம் பண்ண தெரியாது40% எழுத படிக்க இனித்தான்
மலையக தமிழரை கூலிகள் ஆக்கியதுஈழ அகதிகளை கைதிகள் ஆக்கியது
"சீரியசான ஆக்கள்""சினிமா பாக்கலாம்"
யாழ் தமிழ், மட்டக்களப்பு தமிழ்தமிழ், பல தமிழ்கள், தமிங்கிலிஸ்
"வெள்ளாளர்" ஆதிக்க சக்திகளாக உணரப்படல்"பிராமணர்" ஆதிக்க சக்திகளாக உணரப்படல்
வெளிநாடு நம்நாடுவெளிநாடு தேன்நாடு
ஈழம் சிங்கப்பூர் (போல) ஆகிடனும்தழிழகம் சிங்கப்பூர் (போல) ஆகிடனும்

மூன்று கேள்விகள்?

வலைப்பூவின் மேதைகளே:

மதி மங்கி, விரக்தி ஓங்கி
மாயையின் விளிம்பில் நின்று
மனிதன் குமுறினால் எப்படி இருக்கும்?

ஐயோ, தமிழ் சாகிறது.
சினிமாவில் புதுமை இல்லை.
அரசியல் ஒரு சாக்கடை.
சாதி இல்லை, சாமி வேண்டாம்.

கொச்சதனமாக இல்லை?

காடும், கடலும் சாகின்றது
காற்றும், நீரும் விலை போகின்றது
மழை அமிலம் ஆகின்றது

ஆபிரிக்காவில் எயிட்ஸ்
இந்தியாவில் ஏழ்மை, பசி

போர், பாசிகம்
சர்வதிகாரம்

வாருங்கள் வலைப்பூவின் மேதைகளே
உலகுக்கு உதவுவோம்
புது உலகு படைப்போம்

சும்மா அலட்டாதையும்
வீட்டு பிரச்சினையே தீர வழிகாணோம்
உண்டு, உறங்கி, மேய்ந்து, இரும்.


சொல்லுங்கள்
இது வெறும் விளையாட்டுத்தானே
யுனிபொம்மர் சொன்னது போல
இது வெறும் விளையாட்டுத்தானே?
வாழ்வு வெறும் லீலைதானே?

வலைப்பூவின் மேதைகளே
இம் மூன்று கேள்விகளையும் பற்றி சற்று சிந்தித்து பாருங்கள்.

1. ஆண்டவனாய் நீ இருந்தால், உலகை படைக்க நினைத்தால், எப்படி நீ உலகை படைப்பாய்?
2. நீ சுதந்திரமானவனா?
3. உன் வாழ்வின் சக்தியை நீ எத் துறை, திசை, மனிதர் நோக்கி செலுத்துகின்றாய்? ஏன்?

முதல் பதிவு: ஏன் இந்த எனக்குள் ஒர் உலகம்?

எம் ஒவொருவருக்குள்ளும், இப்படித்தான் உலகம் என்ற பார்வை இருக்கும். அப்பார்வை மாறிக்கொண்டிருந்தாலும், அடிப்படை புரிதல்கள் சில இருக்கும். அப்படிப்பட்ட புரிதல்கள் கொண்டே நம் வாழ்வை நாம் வடிமைக்கின்றோம். அந்த புரிதல்களின் வெளிபாடுகளே எம் குணங்கள், கோட்பாடுகள், செயல்கள். அப்புரிதல்களை நாம் அலசி பார்ப்பது அரிது. அது முடியுமா என்பதும் கேள்வியே. பொதுவாக அப்படிப்பட்ட பார்வைகளை என் குறிப்புக்களில் அடக்குவதே வழக்கம். ஆயினும், சில புரிதல்களை உங்களிடம் பகிர்ந்து, என் பார்வையை விரிவாக்க முனைகின்றேன். அதற்க்கே, எனக்குள் உலகம் என்ற புதிய எற்பாடு.