tag:blogger.com,1999:blog-96453192024-03-07T07:59:38.577-08:00எனக்குள் உலகம்நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comBlogger106125tag:blogger.com,1999:blog-9645319.post-49097750210526889822017-02-07T06:26:00.001-08:002017-02-07T06:27:19.940-08:00அறிவியல் தமிழின் வியூகி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழ்நாடு அரசு தமிழ் வழிக் கல்வியை திட்டமிட்டு அழிக்கையிலும், உலகமயமாதல் தமிழ் மொழியை மெல்லக் கொல்ல முயற்சி செய்கையிலும், எதிர்க்க முடியும் என்று காட்டிய முன்னோடிகளில் தலையான ஒருவர் <a href="https://ta.wikipedia.org/s/2us" target="_blank">மணவை முஸ்தபா</a>. தமிழின் பெருமை பேசி, அதன் இலக்கியங்களை மட்டும் பேசி, அதன் அறிவுக் கூர்முனையை மழுங்க விட்ட தமிழ் அறிஞர்கள் மத்தியில் அறிவியல் தமிழுக்காச் செயற்பட்டவர். பல களங்களில் அவர் தனியே நின்று போராடினார். பல களங்களில் பலரை இனைத்துப் போராடினார்.<br />
<br />
அவரின் படைப்புக்கள் தமிழின் பெரும் சொத்துக்கள். அவரின் சிந்தனைகள் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கான வியூகங்கள். அவர் எதற்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தாரோ, அந்தப் பணிகளை முன்னெடுப்பதே நாம் அவருக்குச் செய்யும் பெரும் மரியாதையாக இருக்கும். </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-430862031542552462015-03-12T18:04:00.000-07:002015-03-12T18:04:45.959-07:00சமய நஞ்சேறும் தமிழ்ச் சூழல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><span id="goog_611886806"></span><span id="goog_611886807"></span>இந்து இளைஞர் சேனாவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் பகுத்தறிவு முப்பாட்டன் முருகனுக்கும் என்ன தொடர்பு. இதுதான் தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் தோன்றி இருக்கும் புதிய சமயக் கூட்டணி. தாலி பற்றி விவாதம் பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்ற விளம்பரத்தை மட்டும் பார்த்து விட்டு வன்முறையில் இறங்கி விட்டிருக்கிறார்கள் இந்து இளைஞர் சேனா. பத்திரிகையாளரைத் தாக்கி உள்ளார்கள். புதிய தலைமுறை தொ.கா நிறுவனத்துக்கு குண்டு வைத்துள்ளார்கள். <br />
<a href="http://upload.wikimedia.org/wikipedia/en/f/f8/Puthiya_Thalaimurai_TV_Logo.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/en/f/f8/Puthiya_Thalaimurai_TV_Logo.jpg" /></a><br /><span id="goog_611886810"></span><span id="goog_611886811"></span>இந்த இந்து இளைஞர் சேனையை அண்மையில் த.தே.கூ சார்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி எல்லாம் பா.ஜ.க ஏவல் கட்சிகள், ராதாகிருஷ்ணன் பங்கேற்றதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈழத்து த.தே.கூ சீனித்தம்பி யோகேஸ்வரன் ஏன் பங்கு பற்றினார். தனியே சமயப் பண்பாட்டுப் பரிமாற்றமா. அல்லது இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் நகர்வுகள்தான் என்ன.<br /><span id="goog_611886812"></span><span id="goog_611886813"></span><br />ஈழப் போர் முடிந்த கையோடு, தமிழர்களின் அரசியல் வேக்கைகளை சமயத்துக்குள் முடக்கிவிட சிங்கள் அரசுகள் பெரிதும் முயல்கின்றன. அங்க பாருங்கோ. காவடி எடுக்கினம். திருவிழா கொண்டாடிடன். எல்லாம் நல்லாத்தான் இருக்குது என்று காட்டுவது மிக இலகு. மேலும், தமிழர்களின் ஒற்றுமையை உடைக்கும் ஓர் ஆயுதமாகவும் சமயம் அமையும் என்று அவர்கள் நன்கு உணர்வார்கள். ஈழப் போராட்டத்தில் கிறித்தவத்தைச் தமது சமயமாகக் கொண்ட தமிழர்களின் பங்களிப்புக் கணிசமானது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைபு ஒரு இந்து சமயப் பெரும்பானைக் கட்சி போன்று வடிவமைப்படுவதும் வெளிப்படுவது தற்செயலாக என்று கருத முடியாது. வட மாகாண முதல்வர் அனைத்துல இந்து மாநாட்டில் முதன்மை விருந்துனராகக் கலந்து கொண்டது இங்கும் கவனிக்கத் தக்கது. <br /><br />பல இசுலாமியச் சமூகங்களில் பூட்டப்பட்டு இருக்கும் கடிவாளம் போன்ற ஒன்றைத் தமிழ்ச் சூழலில் பூட்ட இளைஞர் சேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் முனைகின்றன. இவர்களுக்கு சற்றும் சளைக்காமல் தமிழ்த் தேசியக் கட்சிகள் மருவி வருகின்றன. கொள்கை நோக்கிலும், செயற்பாட்டு நோக்கிலும் தம்மை எப்பவோ நீத்துப் போய்விடச் செய்துவிட்ட திராவிடக் கட்சிகள் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கின்றன. எனவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான இந்தக் கொடிய சூழல் இருந்து விடுபட, மாணவர்களிடம் இருந்தும், முற்போக்கானவர்களிடம் இருந்தும் ஒரு வலுவான பதில் உரையை எதிர்பாத்து தமிழ்ச் சூழல் நிற்கிறது. <br /><br />
<br /></div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-51573367511641082482015-02-28T16:40:00.000-08:002015-02-28T16:46:44.464-08:00கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் எல்லையைத் தீர்மானிக்கும் சாதியக் குண்டர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மீண்டும் ஒரு தமிழ் எழுத்தாளர் தான் எழுதிய நூலுக்காக வன்முறையாகத் தாக்கப்பட்டு இருக்கிறார். சீனா போல், பல இசுலாமிய நாடுகள் போல் இது வழமையாக நடைபெறும் செய்தியாக தமிழ்நாட்டில் நிறைவேறி வருகிறது. நூலைத் தடை செய். எழுத்தாளரை மண்டியிட வை. கைது செய். தண்டி என்று சாதிக் கட்சிகளும், சமய வாதக் கட்சிகளும், தமிழ்ச் தேசியக் கட்சிகளும் ஒற்ற குரலில் கோரிவரும் சூழல் தமிழ்நாட்டின், தமிழ்ச் சமூகத்தின் ஒரு இருண்ட காலத்துக்கான தொடக்கமாகவே பார்க்க வேண்டும். <br />
<br />
இப்படி தடை, கைது, தண்டி என்று அண்மையில் குதித்து இருப்பது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. எழுத்தாளர் புலியூர் முருகேசன் தனது பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு என்ற சிறுகதை நூலுக்காக வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். <br />
<br />
விடுதலைப் புலிகள் ஆனாலும் சரி, இடதிசாரிப் புரட்சிவாதிகள் ஆனாலும் சரி கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்று வந்துவிட்டால், அவர்களுக்கு மட்டுமான கருத்து என்று மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் கருத்துக்களை மறுக்கிறார்கள், வன்முறையால் அடக்க முனைகிறார்கள். இது தமிழ்ச் சமூகத்தின் மிகக் கொடுமையான பண்புகளில் ஒன்று.<br />
<br />
தான் எந்த ஆதாரமும் இல்லாத கடவுளை நம்பவில்லை, அறிவியலை நம்புகிறேன் என்று எழுதியதற்காக வங்காளதேச எழுத்தாளர் Avijit Roy அண்மையில் கொல்லப்பட்டார். இதே மாதிரியான ஒரு சூழலே தமிழ்ச் சூழலில் உருவாகி வருகிறது. <br />
<br />
விரைவில், பெண்களை முழுக்க மூடி முக்காடு அணிந்து செல்லுங்கள். தனியே போகாதீர்கள். விளையாடாதீர்கள். இசை கேக்காதீர்கள். பள்ளி செல்லாதீர்கள். வேலைக்குப் போகாதீர்கள். என்று தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் கோரினால் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை. தூ என்று காறித்துப்பும் வண்ணம் உள்ளது தமிழ்ச் சமூகத்தி முன்னேற்றப் பாச்சல். </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9645319.post-47121093827456043602015-01-16T20:44:00.000-08:002015-01-16T20:47:23.418-08:00சவூதி அரேபியா - காட்டுமிராண்டிச் சட்டங்கள், பண்பாடு, சமயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5e/%D8%B1%D8%A7%D8%A6%D9%81-%D8%A8%D8%AF%D9%88%D9%8A.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5e/%D8%B1%D8%A7%D8%A6%D9%81-%D8%A8%D8%AF%D9%88%D9%8A.jpg" height="200" width="149" /></a></div>
பெண்கள் வாகனம் ஓட்ட முடியாது. வாக்குப் போட முடியாது. முறைப்படுத்தப்பட்ட விளையாட்டுக்களில் கலந்து கொள்ள முடியாது. பெண் தான் விரும்பியபடி உடை அணிய முடியாது. ஆணும் பெண்ணும் கலந்து படிக்க முடியாது, பணி புரியமுடியாது. ஆண் இல்லாமல் வெளியே செல்ல முடியாது. தனித்து வாழ முடியாது. <br />
<br />
யாருமே சுன்னி இசுலாமைத் தவிர வேறு சமயத்தை வெளிப்படையாகப் பின்பற்ற முடியாது. சமயத்தை விமர்சிக்க முடியாது. சட்டப்படி, இசுலாமிய சமயத்தை நம்பாதவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f2/Samar_Badawi_at_2012_IWOC_Award.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f2/Samar_Badawi_at_2012_IWOC_Award.jpg" height="200" width="133" /></a></div>
காதலர் நாளைக் கொண்டாடுவது தடுக்கப்படுகிறது. இசை, திரைப்படம் என்று வாழ்வின் கலைகள், இன்பங்கள் பொதுவில் இல்லை. <br />
<br />
மக்களாட்சி இல்லை. மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை. அரச குடும்பத்தை யாரும் சற்றேனும் விமர்சித்துவிட்டால், முட்டி தட்டி உள்ளே போட்டு விடுவார்கள். <br />
<br />
கல்லால் எறிவது. சவுக்கால் அடிப்பது. கையை வெட்டுவது. சித்திரவதை செய்வது. துடிக்க துடிக்க தலையைக் கொய்வது. இதுதான் 21ம் நூற்றாண்டில் சவூதியில் நிறைவேற்றப்படும் தண்டனைகள். இவை அனைத்தும் அனைத்துலக மனித உரிமைகளுக்கு எதிரானவை. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/6/67/Waleed_Abu_Alkhair.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/6/67/Waleed_Abu_Alkhair.jpg" height="195" width="200" /></a></div>
<br />
எந்தவித படைப்பாக்கமும் இல்லாமல், இயற்கையாகக் கிடைத்த எண்ணை வளத்தை விற்று செல்லம் ஈட்ட் ஆட்டிப் படைக்கிறார்கள். <br />
<br />
இதுதான் இசுலாமவாத புனித பூமி, சவூதி அரேபியா. <br />
<br />
சவூதி அரேபிய அரசையையும், தீவர சமய வாதிகளையும் வலைத்தளத்தில் விமர்சித்த ரயிவ் படாவிக்கு (Raif Badawi) $200 000 மேற்பட்ட அபராதம், 1000 சவுக்கு அடிகள், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இவரைப் போன்று அரசை விமர்சித்த வலீட் அபுல்கர் (Waleed Abulkhair) இக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்னை. தன்னை உடல் ரீதியாக தாக்கிய தந்தையிடம் இருந்து தப்பி தனியே வாழ முற்பட்ட சமர் படாவியை (Samar Badawi) கைது செய்தனர், வழக்குகளில் அலக்கழித்தனர். என்ன இழிவு. <br />
<br />
என்ன செல்வம்தான் இருந்து என்ன பயன், அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாவிடின். </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9645319.post-54191218714992706792015-01-15T18:11:00.001-08:002015-01-15T18:17:27.565-08:00எதுவும் புனிதமானது இல்லை ("nothing-is-sacred")<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://upload.wikimedia.org/wikipedia/ta/6/68/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"></a>சமயம், இனம், சாதி, வர்க்கம், தேசியம், மொழி, நாடு, பால், பாலமைவு, உணர்வுகள், நம்பிக்கைகள், சடங்குகள், சட்டங்கள், மண்ணாங்கட்டி, கத்தரிக்காய் என்றும் எதுவுக்கும் கட்டுப்பட்டத்தல்ல கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம். வன்முறையற்று, திணிப்பு அற்று கருத்த்தைக் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் கட்டற்றது. இச் சுதந்திரத்தின் ஆணிவேரில்தான் அனைத்து சுதந்திரங்களும் உரிமைகளும் கட்டமைக்கப்படுகின்றன. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் சிந்தனை உருவாக்கத்துக்கு, பரிமாற்றத்துக்கு, விமர்சனத்துக்கு, திருத்தலுக்கு அவசியமானது. <br />
<br />
மேற்குநாடுகளில், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது கடுமையான போராட்டங்களுக்குப் பின்பு நிலைநிறுத்தப்பட்ட சுதந்திரம், உரிமை. பிரான்சில், ஐரோப்பிய மறுமலர்ச்சி, பிரெஞ்சுப் புரட்சி, 60 களின் எதிர்ப்புப் புரட்சியில் வளர்த்தெடுக்கப்பட்டதுதான் வளையாத பிரெஞ்சு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம். உங்கள் கருத்தை மறுதலிக்கிறேன், ஆனால் அதைக் கூறுவதற்கான உங்கள் உரிமையை உயிர் குடுத்தேனும் பாதுகாப்பேன் என்று உரைத்த வோல்ட்டயர் (Voltaire) பிறந்த மண். அங்கதம், சித்திரம், வரைகலை அவர்களின் பண்பாட்டில் வேரோடியது. அங்கே சார்லி ஃஎப்டோ (charlie hebdo) என்ற அங்கத சித்திர பத்திரிகை வெளியிட்ட ஒரு கேலிச் சித்திரத்தை சகிக்க முடியாமல் இசுலாமவாதிகள் அந்தப் பத்திரிகையின் 12 பேரை சுட்டுக் கொன்றுள்ளார்கள். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://upload.wikimedia.org/wikipedia/en/1/1c/Charlie_Hebdo_Tout_est_pardonn%C3%A9.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/en/1/1c/Charlie_Hebdo_Tout_est_pardonn%C3%A9.jpg" height="200" width="149" /></a></div>
<br />
பிரான்சியர்கள் போலன்றி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக விழிப்புணர்வோ அக்கறையோ அற்ற சமூகம் தமிழ்ச் சமூகம். இந்தத் தமிழ்ச் சமூகம் உருவாக்கிய ஒரு தலை சிறந்த அறிவாளர், எழுத்தாளர் பெருமாள் முருகன். அவரின் ஒரு கூரிய படைப்பு மாதொருபாகன் என்ற புதினம். இந்தப் புதினத்தை தடைசெய்யக் கோரி இந்துதத்துவாதிகளும் சாதியவாதிகளும் துன்புறுத்தியதால் தான் எழுதுவதையே நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளார் பெருமாள் முருகன். <br />
<br />
சார்லி ஃஎப்டோ தாக்கப்பட்ட அனுதாப அலையைப் பயன்படுத்தி ஐரோப்பிய இனவாதிகள் இசுலாமியர்களுக்கு எதிரான ஒரு வன்முறையை காட்ட விழைகின்றார்கள். இசுலாமவாதிகளும் இனவாதிகளும் இது ஓர் மேற்கு கிழக்குப் போர் என்று சித்தரிக்கப் பாக்கிறார்கள். ஆனால் இது காட்டுமிராண்டிகளுக்கும் பகுத்தறிவுவாதிகளுக்குமான போர். மன நோயாளிகளுக்கும், பரினாமித்த, வளர்ந்த, முதிர்ச்சி பெற்ற மனிதர்களுக்குமான போர். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://upload.wikimedia.org/wikipedia/ta/6/68/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/6/68/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.jpg" height="200" width="113" /></a></div>
சார்லி ஃஎப்டோ குரல் கொடுக்க பிரான்சு வரலாறு காணாத கூட்டத்தைக் கண்டது. ஆனால் பெருமாள் முருகன் போன்ற பல எழுத்தாளர்களினதும் பேச்சாளர்களினதும் சாதாரனப் பொது மக்களதும் பேச்சுத் சுதந்திரத்தைப் பாதுகாக்க பத்துப் பேர் கூடக் கூடவில்லை. <br />
<br />
நீத்துப் போன, முதுகெலுப்பு அற்ற திராவிடக் கட்சிகள் மூச்சைக் கூட விடவில்லை. கபடதாரி (hypocrite) தமிழ்த் தேசியவாதிகள் பேசவில்லை. இடதுசாரிகள் கூட சமயம் என்று வந்தவுடம் தூர ஓடிப் போய் விடுகிறார்கள். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2011/11/Jaffna-Library.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2011/11/Jaffna-Library.jpg" height="132" width="200" /></a></div>
எவ்வளவுதான் ஆங்கிலம் ஆக்கிரமிப்புச் செலுத்தினாலும், இலக்கியத்தில் அதிக நோபல் பரிசுகள் பிரெஞ்சு மொழி எழுத்தாளர்களுக்குத்தான் போய் உள்ளன. கருத்துக்களை சீண்டி, நோண்டிய அவர்களின் மரபினால்தான் இருக்கும். அத்தகைய மரபை உருவாக்காமல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பேணாமல் தமிழ்ச் சூழல் உண்மையான எந்த வளர்ச்சியையும் பெற முடியாது.<br />
<br /></div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-72043133328535540322014-03-12T19:40:00.000-07:002014-03-12T20:26:08.717-07:00எளிய மக்கள் கட்சியின் கொள்கைப் புரட்சி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திராவிடக் கட்சிகளிடம் கொள்கை வறட்சி, தளர்ச்சி, விற்பனை முற்று முழுதாகிவிட்டது. இவர்களிடம் சமூக நீதி, பகுத்தறிவு, தமிழ் அடையாளம், பெண்கள் உரிமைகள், தன்னாட்சி போன்ற கொள்கைகள் நீத்துவிட்டன. அறம் தவறி, தலைவர் தொழுகையிலும், குடும்ப அரசியலும், பச்சை ஊழலிலும் திராவிடக் கட்சிகள் நாறுகின்றன. <br />
<br />
திராவிடக் கட்சிகளும் சரி, இடதுசாரி, தமிழ்த் தேசிய அமைப்புகளானாலும் சரி குறுகிய சில விடயங்கள் தவிர பல முக்கிய களங்களைப் பற்றி எதுவும் உரையாடுவதில்லை. அப்படிச் சிந்திக்கிறார்களா என்று கூடச் சந்தேகம். தமிழ்ச் சூழலில் இருக்கும் இடதுசாரிகள் தமது இயக்கத்தில் இருக்கும் பிரிவுகளைக் கூட அறிந்திரார். அரச முதன்மை மும்மூர்த்திகள் (மார்க்சு, லெனன்/இசுராலின், மாவோ), வர்க்கப் போராட்டம், புரட்சி, தொழிலாளர் சர்வதிகாரம் ஆகியனவே இவர்களின் தாரக மந்திரம். தமிழ்த் தேசியவாத அமைப்புகள் பொருளியல், சூழலியல், அரசின் தன்மை, பன்மைத்துவம் என்று எதிவும் பற்றி விரிவாகப் பேசுவதில்லை. உசுப்பும் குறும் தேசியம் தவிர்த்து மேலெழுந்து சிந்திக்க முடியதாவர்களாகவே உள்ளன.<br />
<br />
இவர்களுக்கு எல்லாம் மாற்றாய் ஒரு சிறு மாற்றம் அண்மையில் உருவாகி உள்ளது. டில்லியில் தொடங்கிய அந்த மாற்றம் இப்பொழுது தமிழ்நாட்டுக்கும் வந்துள்ளது. அதுதான் ஆம் ஆத்மி கட்சி. தமிழ்நாட்டில் அணு உலைக்கு எதிராக மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்தை முன்னெடுத்த சு. ப. உதயகுமார் தலைமையில் எளிய மக்கள் கட்சியாக உருவாகி உள்ளது. <br />
<br />
ஆனால் அண்மையில் சுருக்கமாக ஒரு கொள்கை அறிக்கையை அவர்கள் "எளிய மக்கள் கட்சி (எ.ம.க.)...எமக்கான கொள்கை" என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஒரு விரிவான கொள்கை அறிக்கை இல்லை. எனினும், இவர்கள் இதில் முன்வைக்கும் எண்ணங்கள், அண்மையில் தமிழ் அரசியலில் அலசப்படும் விடயங்களை விட கனதியானது. <br />
<br />
தமிழ்நிலம் தமிழ்நிலம் என்று கத்துவோர்கள் அதன் சூழலைப் பற்றி அவ்வளவு யோசிப்பதில்லை. சூழலியல் அறிவு...சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவர்களின் ஒரு முக்கிய கொள்கையாக அமைகிறது. அரசின் தீமைகளைப் பற்றி விரிவாக அறிவோம். ஆனால் அதற்கான தீர்வுகளைப் பற்றி சிந்திப்பதில்லை. அதிகாரப் பரவல்...பங்கேற்பு மக்களாட்சி, மையப்படுத்தப்படாமை, கூட்டுறவு அமைப்புகள் போன்றவையை எ.ம.க முன்வைக்கிறது. மாற்றத்துக்கான வழிமுறையாக அறவழியை, மென்முறையை முன்னிறுத்துகிறது. சமூக நீதி, சம வாய்ப்பு, பெண்கள் விடுதலை, பன்மைத்துவம் போன்ற சமூக அசைவுக்கான, அமைதிக்கான, வளர்ச்சிக்கான வழிகளைக் கூறுகிறது. <br />
<br />
அயல்நாட்டு முதலீடு, பெரும் நிறுவனங்கள், உலக வங்கிக் கடன் என்று முன்னெடுக்கப்படும் பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக, இயற்கை வேளாண்மை, மாற்று எரிசக்தி கொள்கை, சிறு நடுத்தரத் தொழில்கள், மாற்றுத் தொழில்நுட்பங்கள், பேண்தகு வளர்ச்சி என்று இன்னும் அதிகம் கவனம் பெறாத பொருளாதர முறைகளை எ.ம.க யின் கொள்கை எடுத்துரைக்கிறது. <br />
<br />
"பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்" என்று தலைப்பு இட்டதன் மூலம், இதுவரை முரண்களைக் கொண்ட கொள்கைகளாகப் பார்க்கப்பட்ட கொள்கைகளை இணைத்துப் பார்க்கிறார்கள். <br />
<br />
எ.ம.க முன்வைக்கும் எண்ணங்கள், தீர்வுகள் பற்றி எல்லோரும் உடன்படப்போவதில்லை.. "பசுமை மார்க்சியம்" என்றால்தான் என்னை. ஒரு சலசலப்பு சொல்லாடலா. தமது முற்போக்கு இடதுசாரி சார்புநிலையை எடுத்துரைப்பதற்கான குறியீடா. அல்லது மார்சியத்தின் கடந்த நூற்றாண்டு போதாமைகளை, அதன் படுதோல்விகளை, சர்வதிகாரத் தன்மைகளை, அரச முதன்மை வாதத்தை புரிந்து, அதற்கான விடைகளைத் தேடி முன்மொழியப்படும் ஒரு கொள்கையா. தெரியவில்லை.<br />
<br />
கல்வி, நலம், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் அவர்களின் நிலைப்பாடுதான் என்ன. இவற்றை அரசு வழங்க வேண்டுமா? எப்படி வழங்குவது, விரிவுபடுத்துவது. இது போன்ற பல விடயங்களை இந்தச் சுருக்கமான கொள்கை அறிவித்தல் தொடவில்லை.<br />
<br />
ஒரு கல்வியாளர் சித்தித்து, யாதார்த்தை, தடைகளை, இடர்களை, பக்க விளைவுகளைச் சிந்திக்காமல், கற்பனையில் கக்கிய கொள்கைகள் போல் இவை இருந்தாலும், இவை பற்றி ஒரு குறைந்த பட்ச உரையாடல் நடைபெற்றால் கூட அது பல நல்ல விளைவுகளைத் தரும்.<br />
<br />
மேற்கோளுக்கா, அவர்களின் கொள்கை அறிவித்தல் கீழே:<br />
<br />
<span class="userContent" data-ft="{"tn":"K"}"><b>எளிய மக்கள் கட்சி (எ.ம.க.)...எமக்கான கொள்கை:</b><br /> பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்<br /> <br /> சூழலியல் அறிவு...சுற்றுச்சூழல் பாதுகாப்பு<br /> அதிகாரப் பரவல்...பங்கேற்பு சனநாயகம்<br /> சமூக நீதி...சம வாய்ப்பு<br /> அறவழி...மென்முறை<br /> மையப்படுத்தப்படாமை<br /> பெண் விடுதலை<br /> வேற்றுமை போற்றல்<span class="text_exposed_show"><br /> தனிமனித, ஒட்டுமொத்த பொறுப்புணர்வு<br /> வருங்காலச் சிந்தனை<br /> <br /> கூட்டுறவு போற்றும் சமூகம் சார்ந்த மாற்றுப் பொருளியல்<br /> இயற்கையை அழிக்காத வளங்குன்றா வளர்ச்சி முறை<br /> மாசு படுத்தாத தொழில்-வேளாண் கொள்கை<br /> சிறு நடுத்தரத் தொழில்கள்<br /> இயற்கை வேளாண்மை<br /> மாற்று எரிசக்தி கொள்கை<br /> மாற்று தொழில்நுட்பங்கள்<br /> நீடித்த நிலைத்த வளர்ச்சி<br /> <br /> தேசிய இனச் சமூக மாற்றுக் கொள்கைகள்<br /> மரபு சார்ந்த மக்கள் அமைப்புக்கள்<br /> மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி<br /> உலகமயப் பொருளியலுக்கு எதிராக தேசியங்களின் பொருளியல்<br /> உலகமயம் திணிக்கும் ஒற்றைத்தன்மைக்கு எதிராக தேசியங்களின் பன்மை<br /> தமிழர் அறம் சார்ந்த அரசியல், வாழ்வியல்:<br /> பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்<br /> யாதும் ஊரே, யாவரும் கேளிர்<br /> <br /> பயன்பட்டக் கட்டுரையும், நூலும்:<br />
[1] கி. வெங்கட்ராமன், “பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்,”
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், பொங்கல் மலர் 2014. பக். 12-23.<br /> [2] S. P. Udayakumar, _Green Politics in India_. Nagercoil, India: Transcend South Asia, 2008. pp. 15-17.</span></span><br />
<br />
<span class="userContent" data-ft="{"tn":"K"}"><span class="text_exposed_show">https://www.facebook.com/eliyamakkalkatchi </span></span></div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-51770771355631973372013-12-31T11:06:00.000-08:002013-12-31T11:12:16.188-08:00நேரடி மக்களாட்சியும் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வந்தும், தாம் மக்களிடம் கருத்துக் கோர வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிய போது மக்களின் தெரிவைப் புறக்கணிக்கிறார்கள், தேவையற்ற நாடகம் போன்று பல்வேறு வழிகளில் விமர்சிக்கப்பட்டது. அவர்கள் மக்கள் கருத்தை அறிய முயன்ற முறையில் போதாமைகள் இருக்கலாம், ஆனால் அவர்களின் செயற்பாடு தவறானதா? அக் கட்சியின் ஒரு முக்கிய கொள்கையான அதிகாரப் பரவலாக்கல் (Decentralization), நேரடி மக்களாட்சி (Direct Democracy) வரவேற்கப்பட வேண்டிய ஒன்றா?<br />
<br />
சார்பாண்மை மக்களாட்சியின் (Representative Democracy) படிவளர்ச்சியாகக் கருதப்படுவையே நேரடி மக்களாட்சி (Direct Democracy), பங்களிப்பு மக்களாட்சி (Participatory Democracy) ஆகியவை. நேரடி மக்களாட்சி என்பது மக்களின் சார்ப்பாளர்கள் அல்லது பிரதிநிதிகள் அல்லாமல் மக்களே நேராக முக்கிய முடிவுகளை எடுத்தலில் பங்கெடுப்பது ஆகும். பங்களிப்பு மக்களாட்சி என்பது அரசின் செயற்பாடுகளில் மக்கள் பங்களிக்க கூடிய வாய்ப்புக்களை வழங்கக்கூடிய கட்டமைக்களைக் கொண்டிருப்பது ஆகும். பல்வேறு விடயங்களில் பொது வாக்கெடுப்பு (Referendum) நேரடி/பங்களிப்பு மக்களாட்சியின் ஒரு முதன்மைக் கருவி (mechanism) ஆகும். அரசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை திருப்பி அழைப்பதற்கான உரிமையும் (right to recall) வாய்ப்பும் இதன் ஒரு நீட்சி ஆகும். <br />
<br />
ஆம் ஆத்மி கட்சி அதிகாரப் பரவலாக்கலை, நேரடி மக்களாட்சியை பலமான உள்ளூர் அலகுகள் கொண்டு நிறைவேற்றவுள்ளதாகக் கூறி உள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஒருவரை திருப்பி அழைப்பதற்கான சட்டத்தையும் இயற்றவுள்ளதாகக் கூறி உள்ளது. மேலும் கட்சி சார்பற்ற ஊழல் குறைகேள் அதிகாரிகளை (ombudsmen) நியமிக்கவும் உறுதி தந்துள்ளது. இந்த வகையில் இந்தியாவில் நேரடி/பங்களிப்பு மக்களாட்சியை முன்னெடுக்கும் ஒரு முன்னோடிக் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உள்ளது.<br />
<br />
நேரடி மக்களாட்சி அல்லது பங்களிப்பு மக்களாட்சி என்பது பெரும்பான்மையினரின் சர்வதிகாரமாக மாறும் என்றும், நடைமுறையில் நிறைவேற்ற முடியாதது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது குற்றச்சாட்டு முக்கியமானது, மிகப் பாதகமானது. நேரடி மக்களாட்சி மட்டும் இல்லை, பொதுவாக எந்தவொரு மக்களாட்சியிலுமே பெரும்பான்மையினரின் சர்வதிகாரம் உருவாதற்கு நிறைய வாய்புக்கள் உண்டு. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இலங்கை ஆகும். இதைத் தடுக்கும் வண்ணம் அதிகாரப் பிரிவினையும், அதிகாரப் பரவலாக்கமும் முக்கியம் ஆகும். கனடாவில் கியூபெக் போல் உள்ளூர் மக்கள் கட்டுப்படுத்தும் மக்களாட்சி இலங்கையில் தோன்றி இருந்தால் ஈழப்போர் வெடித்து இருக்காமல் இருந்திருக்கலாம். இலங்கைப் பிரச்சினை பெரும்பான்மை சர்வதிகாரம் என்பதிலும் பார்க்க அதிகாரக் குவியலினால் எழுந்தது. இன்றும் கூட தமிழ் மக்களின் விருப்பங்கள் தொடர்பாகவோ, அல்லது காசுமீர் மக்களின் விருப்பங்கள் தொடர்பாகவோ ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தும் முதிர்ச்சி இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ இல்லை. ஆனால் டில்லி தேர்தல் முடிவுகள் அந்த முதிர்ச்சி நோக்கி இந்தியா ஒரு படி பயணித்து உள்ளது என்றுதான் கூறவேண்டும். <br />
<br />
மக்களுக்காக நாம் முடிவெடுப்போம் என்று இடதிலும் வலதிலும் இருந்து கோருவோர் நேரடி மக்களாட்சியை நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று கோருகின்றனர். ஆனால் இணையம், நகர்பேசி உட்பட்ட புதிய தகவல்-தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் பரந்த நேரடிப் பங்களிப்பை நகரப்புறங்களில் கூட சாத்தியப் படுத்தி உள்ளன. உள்ளூர் உணவு (Local Food), உள்ளூர் பொருளாதாரம் (Local Economy), Hyperlocal, குமுகம் கட்டுதல் (community building) என்ற இன்றைய போக்குக்களுடன் நேரடி மக்களாட்சி ஒரு பொருத்தமான முன்னேற்றமே.<br />
<br />
ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியால் அதிகார மையத்தினரும், பெரும் வணிக நிறுவனங்களும் பெரிதும் பயப்படுகின்றன. அதிகாரப் பரவலாக்கலால், நேரடி மக்களாட்சியால் பாதிக்கப்படப்போவர்கள் இவர்களே. இந்திய வலதுசாரி வலைத்தளமான ஃபெசுபோசுடில் (Firstpost) நேரடி மக்களாட்சியையும் ஆம் ஆத்மி கட்சியையும் விமர்சித்து <a href="http://www.firstpost.com/politics/perils-of-direct-democracy-aap-may-be-on-the-wrong-track-1307543.html" target="_blank">Perils of direct democracy: AAP may be on the wrong track</a> என்ற ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. மக்களுக்கு தமக்கு எது பொதுநலம் என்று தெரியும் என்பது உண்மை இல்லை ("It is simply not true that people know best or that they act in the greater common good.") என்று கூறி பழங்குடி மக்கள் அவர்களின் நிலங்களில் இருந்து வேதி எடுத்தலை எதிர்த்தது, அன்னிய முதலீட்டை எதிர்த்தது போன்றவற்றை சுட்டிக் காட்சி மக்களுக்கு அவர்களுக்கு எது பொது நலம் என்று தெரியாது என்று வாதிட்டிருக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டு நேரடி மக்களாட்சிக்கு மட்டும் இல்லை மக்களாட்சிக்கும் பொருந்தும். அவர்கள் சுட்டிய எடுத்துக்காட்டுக்கள் பெரும்பாலும் பெரும் வணிக நிறுவனங்களின் நலன்களைப் பாதிக்கும் என்பதே அவர்களின் கவலையாக இருக்கின்றது, குறிப்பாக வோல்மார்ட்.<br />
<br />
உண்மையான சிக்கல் உள்ளூரில் இருக்கும் சாதிய, சமய, செல்வந்த அதிகாரக் கட்டமைப்புக்களிடம் சிக்காமல் நேரடி மக்களாட்சி அனைத்து மக்களின் பங்களைப்பை பெற்று அமைய வேண்டும் என்பதே. சுருக்கமாக, ஆம் ஆத்மி கட்சி கொள்கையும் அரசமைப்பும் ஒரு நல்ல முன்னேற்றமாகவே அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் பகுத்தறிவு, பெண்கள் உரிமைகள், சமத்துவம், சமூகவுடைமை, தமிழ் போன்ற கொள்கைகளுடன் திமுக முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது போல. காலம்தான் சொல்லும் திமுக போல் அரசியல் சாக்கடையில் விலைபோய் துலைந்து விடுவார்களா அல்லது துடிப்புடன் அவர்களின் கொள்கைகளை நிலைநாட்டச் செயற்படுவார்களா என்று. </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-69749516432148566442013-12-30T16:06:00.000-08:002013-12-30T16:14:07.250-08:00தான்தோன்றி அறிவர், எமது அறிவியலாளர் கோ. நம்மாழ்வார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழ்ச் சூழலில் அறிவியலாளர்கள் பலர் தாம் கற்ற அறிவை எம்மோடு, எமது சூழலின் தேவைகளுக்கு, சிக்கல்களுக்கு பகிர்ந்து கொள்வது அரிது. எம்மோடு இணைந்து, எமது மூலங்களைப் பயன்படுத்தி, தொலைநோக்காகச் சிந்தித்து செயலாற்றிய சிறந்த எடுத்துக்காட்டுக்களில் ஒருவர் <a href="https://ta.wikipedia.org/s/2kp" target="_blank">கோ. நம்மாழ்வார்</a>. வெறுமே பேசிக் கொண்டு மட்டும் இருக்காமல், எதிர்த்துக் கொண்டு மட்டும் இருக்காமல் முன்மாதிரிகளை, மாற்றுக்களை உருவாக்கினார். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மையின் தந்தை என்று இவரைக் கூறலாம். தமிழ்நாட்டுச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் ஒரு மூல அமைப்பாளாராக விளங்கினார். பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசு, கல்வித்துறை ஆதரித்த பசுமைப் புரட்சியின் குறைபாடுகளை துணிவாக, பல காலம் தனித்து நின்று எதிர்த்தார், அதற்கான மாற்றுக்களை உருவாக்கினார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://upload.wikimedia.org/wikipedia/ta/c/c7/Nammalvaar.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="200" src="https://upload.wikimedia.org/wikipedia/ta/c/c7/Nammalvaar.jpg" width="140" /></a></div>
<br />
அவர் அறிவியலை கண்மூடித்தனமாக இறக்குமதி செய்யவில்லை. சுயமாக அறிவை ஆய, உருவாக்க, பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தார். காப்புரிமத்துக்கு விதைகளைப் பறிகொடுக்காமல் இருக்க, நஞ்சுகலந்த வேதிகளுக்கு எமது உணவையும் சூழலையும் பறிகொடுக்காமல் இருக்க, பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போகாமல் இருக்க அவர் எமக்கு கற்றுக் கொடுத்தார். அவரது அறிவை ஆர்வம் உள்ள அனைவருக்கும் கட்டற்று வழங்கினார். பெரும் ஆய்வு நிறுவனங்களிலோ, அல்லது பல்கலைக்கழங்களிலோ மறைந்து விடாமல், உழவர்களோடு களம் கண்டார். அண்டோனியோ கிராம்சி கூறும் உள்ளார்ந்த அறிவராக (organic intellectual) விளங்கினார். இவரின் உந்தலால் ச. கரிகாலன், இரா. ஜெயராமன் என்று பல இயற்கை உழவர்கள், சுற்றுச்சூழல் செயற்ப்பாட்டாளர்கள் உருவாகி உள்ளார்கள்..<br />
<br />
கோ. நம்மாழ்வார் இயற்கை எய்தியது கண்டு மனம் கனக்கிறது. அவர் வழி நின்று அவரது பணியை தொடர்வதே நாம் அவருக்கும் செலுத்தும் அஞ்சலியாக அமையும். </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-924056725023806052013-12-29T13:23:00.002-08:002013-12-29T13:26:18.245-08:00சங்கீதா ரிச்சார்ட்- கனடாவின் வீட்டுப் பணியாளர்கள் - தொழிலாளர்களுக்கான திறந்த சந்தை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒப்பந்தப் படியோ, அல்லது அமெரிக்க அடிப்படை ஊதியச் சட்டப் படியோ ஊதியம் வழங்கவில்லை, வீட்டுப்பணியாளரை துன்புறுத்தினார் போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இந்திய இணைத் தூதுவர் தேவயானி கோபர்கடே ஐக்கிய அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய அரசியல்வாதிகள் கொதிப்படைந்து உச்சகட்ட அழுத்தத்தை அமெரிக்கா மீது செலுத்தி வருகிறார்கள். பிற எந்த நிகழ்வுகளின் போதும் குடுக்காத அழுத்தத்தை இந்தியா இப்பொழுது செய்து வருகிறது. என்ன உண்மை என்று தெளிவாக அறிய முன்னரே இந்தியா தனது மற்றைய குடிமகளை பலிகொடுத்து தூதரை காப்பாற்றும் முழுமையான முயற்சியில் ஈடுபட்டு இருப்பது, இந்தியாவின் இன்றைய ஏற்றதாழ்வு சூழ்நிலையை நன்கு சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. இன்றைய இந்தியா தனது வெளிக் காட்சியைப் பற்றி, தனது எசமானிகளைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறது, அதன் தொழிலாளர்களைப் பற்றி அல்ல.<br />
<br />
கனடாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் மூன்றாம் உலக ஊழியர்கள் துன்புறுத்தப்படுவது புதிதல்ல, அது வழமையாக நடைபெறும் ஒன்று. பார்த்தும் பார்க்கதது போல இங்கே உள்ள அரசுகள் நடந்து கொள்கின்றன. கனடாவில் பல்லாயிரக்கணக்கான வீட்டுத் தொழிலாளர்கள் குடியுரிமை ஆசையைக் காட்டி பிலிப்னைசு, சீனா போன்ற நாடுகளில் இருந்து மேட்டுக்குடி வீடுகளுக்கு வேலைக்கு ஒப்பந்தப்படி அழைக்கப்படுகிறார்கள். பிள்ளைப் பார்ப்பது, முதியோரைப் பராமரிப்பது, வீட்டுப் பராமரிப்பு போன்ற வேலைகளை சங்கீதா போன்று மேட்டுக்குடி மக்கள் வீடுகளில் தங்கி இருந்து செய்கிறார்கள். கனடாவில் இத் திட்டத்துக்குப் பெயர் Live-In Caregiver Program ஆகும். இவர்கள் வீட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும், வேறு வேலைகள் செய்ய முடியாது. இவர்களுக்கு இருக்கும் ஒரே விடுதலைப் பாதை, பல ஆண்டுகளுக்குப் பின்பு ஒப்பந்தம் முடிவடைந்து அவர்கள் குடியுரிமை பெறுவது ஆகும். அப்படி அவர்கள் தமது பணியை முடித்தாலும், குடியுரிமை தருவதில் கனடிய அரசு பல இழுத்தடிப்புக்களைச் செய்யும். <br />
<br />
திறந்த சந்தை, திறந்த சந்தை என்று உரக்கக் கக்கும் மேற்குலக நாடுகள், தொழிலாளர்களுக்கான திறந்த சந்தையை ஏன் உருவாக்க மறுக்கின்றன. ஒரு உண்மையான திறந்த சந்தையில் எங்கே இருந்தும் யாரும் ஒரு வேலையை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் குடிவரவு, தொழிலாளர்களின் சுதந்திரமான நகர்வு என்று வரும்போது வலதுசாரிகளின் திறந்த சந்தைக் கொள்கை புத்துக்குள் போய் ஒளித்துக் கொள்கிறது. ஆப்பிரிக்காவின், மூறாம் உலகின் உண்மையான வளர்ச்சியில் மேற்கு உலகுக்கு அக்கறை இருக்கும் ஆனால், அங்குள்ள அடிப்படைத் தொழிலாளர்களை சுதந்திரமாக மேற்குலகில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இன்றைய கொத்தடிமை முறைமையைத் தகர்க்கலாம். </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9645319.post-73618661686173833332013-09-01T16:37:00.004-07:002013-09-01T17:18:31.300-07:00தமிழ் தாய் சிலைச் சூழ்ச்சி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழுக்கு செத்தமொழி மாநாடு நடத்தியது திமுக. அதற்கு தாம் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்ட தமிழ் தாய் சிலை வைக்கிறார்களாம் அதிமுக. வேடிக்கை காட்டி வேட்டியை உருவிய கதைகளே இவை. <br />
<br />
தமிழின் அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திராவிடம் தமிழை அழிவு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆட்சி மொழியாம் தமிழ், ஆனால் நிர்வாகமோ ஆங்கிலத்தில். தமிழ்நாட்டில் விற்கப்படும் மருந்துகள் பற்றிய விபரங்கள் கூட தமிழில் இல்லை. அரச திணைக்களங்களின் வலைத்தளங்கள் கூட தமிழில் இல்லை.<br />
<br />
கல்வி மொழியாகத் தமிழை ஆக்குவோம் என்று உரத்துக் கத்தியவர்கள். பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை ஆங்கில வழிக் கல்வி வளர உதவி உள்ளார்கள். தற்கால மருத்துவக் கல்வியை தமிழில் 1850 களிலேயே யாழ்ப்பாணத்தில் வழங்கினார்கள். தமிழ்நாடு அரசு 1950 களில் மருத்துவக் கல்வியை தமிழில் வழங்குவதற்கு என ஒரு குழு அமைத்தது. ஆனால் 2012 அதிமுக அரசு பள்ளிக் கல்வியைக் கூட ஆங்கில வழிக்கு மாற்ற பரிசோதனை செய்கிறது. <br />
<br />
இவர்களின் ஆட்சியில்தான் தமிழ் பேச்சு மொழியாகக் கூட அருகி வருகிறது. எந்த உருப்படியான ஆய்வுகள், செயற்திட்டங்களையும் செய்யவில்லை. 1800 களில் பல தமிழ் அறிஞர்கள் தனியாக நின்று 2000 ஆண்டுகளாக வெளிவந்த அரிய தமிழ் நூல்களை அச்சேற்றினர். ஆனால் திராவிட அரசுகளால் அந்த அந்த ஆண்டு வெளிவந்த நூல்களைக் கூட பாதுகாக்க முடியவில்லை, அவற்றைப் பற்றிய தகவல்களை திரட்ட முடியவில்லை, பகிர முடியவில்லை. ஈழத்தில் தமிழ் எரிந்த போது, படுகொலை செய்யப்பட்ட போது நாடக பதவி துறப்புகளும் (யாரும் பதவி துறக்கவில்லை.) கபட உண்ணாநோம்புகளும் (காலையில் இருந்து மத்தியானம் வரை) தவிர வேறு என்ன செய்தார்கள்?<br />
<br />
தமிழுக்கு நன்மை தரக்கூடிய அனைத்து களங்களில் இருந்தும் அதனை மெல்ல மெல்ல அகற்றிவிட்டு. சிலை எடுப்பதன் பொருள் என்ன. இது ஒருவித ஏமாற்று வேலைதானே, சூழ்ச்சிதானே. உணவில்லாமல், கல்வியில்லாமல், நலமில்லாமல் இருக்கும் ஒருவருக்கு தொலைக்காட்சி கொடுத்த கதைத்தானே. <br />
<br />
யாருக்கு சிலை வைப்பார்கள். கடவுள்களுக்கு, அல்லது செத்த பெரியவர்களுக்கு. தமிழ் தாய் என்ற உருவகப்படுத்தல் இலக்கிய நயகமாக இருக்கலாம். ஆனால் அப்படி என்ற ஒன்று இல்லை. கடவுள் சிலைகளை எல்லாம் எரித்த திராவிட இயக்கத்தினர் தமிழை கடவுளாக உருவகப்படுத்துவது ஏன். மக்களை ஏமாற்றும் சமயப் புரளிகளோடு இவர்களும் சேர்ந்துவிட்டார்கள் என்பதால் தான். அல்லது இவர்கள் தமிழ் செத்துவிட்டது. அதற்கு சிலை வைக்கலாம் என்று எண்ணி இருப்பார்கள். <br />
<br />
தமிழுக்கு சிலை வேண்டாம். அதை வழிபட வேண்டாம். தமிழை கல்வி மொழியாக்கி அறிவைத் தாருங்கள். அதுபோதும் தமிழ் வாழ. <br />
<br />
</div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9645319.post-5325472976405744232013-08-08T20:49:00.001-07:002013-08-08T21:06:08.012-07:00திராவிடம் தமிழியம் 2 - வரையறைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழ் கூறும் நல்லுகத்தை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தி ஆண்ட போது, தமிழ் பிற மொழிகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது, தமிழ்ச் சமூகம் சாதியால், மூடநம்பிக்கையால், பெண்ணடிமைத்தனத்தால் கட்டுண்டு துவண்டபோது தமிழ்ச் சமூகத்தில் எதிர்ப்பியக்கங்கள், சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. இந்த இயக்கங்கள் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் தமிழர் வாழ்வியல், வரலாறு, பண்பாடு, கலைகள், தொழில்நுட்பம், அறிவியல், சட்டம், அரசமைப்பு ஆகியவற்றில் தமது தனித்துவத்தை, அடையாளத்தை, ஆற்றலைத் தேடினர். ஐரோப்பிய அறிவொளிக் கால எண்ணக் கருக்களும், நவீனத்துவமும் இவற்றில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின. <br />
<br />
இச் சூழலில் பிறந்தவைதான் தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்க் கல்வி இயக்கம். சமசுகிருத்தத்தின் மேலாதிக்கத்தில் நலிவுற்று இருந்த தமிழை தனித்தமிழ் இயக்கம் மீட்டெடுத்து பலப்படுத்தியது. தமிழில் பாடுதல் இழிவென்று பழிக்கப்பட்டதை தமிழின் தொன்மையான இசை மரபை மீட்டெடுத்தது தமிழிசை இயக்கம் முறியடித்தது. ஆங்கிலம் படித்தால்தான் பதவி என்று இருந்த சூழல்தான் தாய்மொழிக் கல்வியை, சுதேசிக் கல்வியை வலுயுறுத்தி தமிழ்க் கல்வி இயக்கம் செயற்பட்டது. இன்று தமிழ்ச் சூழலில் செல்வாக்குச் செலுத்தும் திராவிடமும் தமிழியமும் இந்தப் பின்புலத்தில் தோற்றமும் வளர்ச்சியும் பெற்றன. <br />
<br />
பெரியார் சுயமரியாதை/திராவிட இயக்கத்தை தோற்றுவித்த போது பகுத்தறிவு, சாதிய எதிர்ப்பு, பெண்கள் உரிமைகள், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, மூடநம்பிக்கைகளை ஒழித்தல், இறைமறுப்பு, திராவிட/தமிழ் அடையாளம், தனித் திராவிட நாடு ஆகியன அதன் அடித்தளக் கொள்கைகளாக இருந்தன. திராவிடம் என்று பலர் உரையாடும் போது இந்தக் கருத்தியல் நோக்கிலான கோட்பாட்டையே சுட்டுகின்றார்கள். ஆனால் அண்ணா அதிகாரத்துக்கு வருவதற்காகவே, வந்தபோதே தனிநாட்டுக் கொள்கையை, பகுத்தறிவு, சமூகச் சீர்திருத்தக் கொள்கைகள் பலவற்றை கைவிட்டுவிட்டார். அவர் பின் வந்த பச்சை சந்தர்ப்பவாதிகள் திராவிட இயக்கத்தில் இருந்து அதன் எல்லாப் பெறுமதிவாய்ந்த கருத்தியல்களையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள். <br />
<br />
ஆக இன்று திராவிடம் என்று எஞ்சி இருப்பது ஆட்சியைப் பிடிப்பதற்காக் கொள்ளப்படும் இலவசத் தொலைக்காட்சி போன்ற பிரபலக் கொள்கைகளும், பன்னாட்டுக் கம்பனிகளுக்கு விலைபோன சிறப்புப் பொருளாதாரக் கொள்கைகளும், தமிழ்க் கல்வியை கொன்றுவிட்டு செத்தமொழி மாநாடுகள் கூட்டி தமது டமில் பற்றை அறிவித்துக் கொள்ளும் பாசாங்குகளுமே. திராவிடக் கட்சிகளின் நிர்வாகம் குடும்பச் சொத்தாகவும், தனிமனித வழிபாடுகளிலும் சிக்கி சின்னா பின்னமாகப் போனது. நான் திராவிடத்தை கருத்தியல் திராவிடம் இன்றைய நடைமுறைத் திராவிடம் என்று இரண்டாக வரையறை செய்து கொள்கிறேன். <br />
<br />
சாதியால், சமயத்தால், நாட்டால் வேறுபட்ட தமிழ் பேசும் சமூகத்தை தமிழ் என்ற இணைப்பின் ஊடான ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி இணைக்கின்ற கோட்பாடே தமிழியம் ஆகும். குறிப்பாக ஆதிக்க சக்திகளினாலும், தன் சமூகக் கட்டமைப்புக்களினாலும் மொழி, பண்பாட்டு, சமூக நோக்கில் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகம் தளை நீக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொண்ட உணர்வு, அடையாள அடிப்படையிலான சமூக வலுவூட்டல் (social mobilization) கோட்பாடே தமிழியம் ஆகும். "அந்த உணர்வு அரசியலில், சமூகத்தில், பண்பாட்டில் தெரியவரும். அதன் அரசியல்ரீதியான வடிவத்தை தமிழ்த் தேசியம் என்று சொல்கிறோம்". இதனை பேராப்பிரிக்கக் கொள்கை (Pan-Africanism), முதற்குடிமக்கள் இயக்கம் (Pan-Indianism), பேரரபியக் கொள்கை (Pan Arabism) போன்றவற்றுடன் ஒப்பிடலாம். அயோத்தி தாசர், மறைமலை அடிகள், பாரதிதாசன், ம. பொ. சிவஞானம், தனிநாயகம் அடிகள், பழ, நெடுமாறன், ச. பொன்னுத்துரை, கோவை ஞானி போன்ற அறிஞர்கள் தமிழ்த் தேசியத்தின் கருத்தியல் கோட்பாட்டாளர்கள் எனலாம். திராவிடம் போன்றே தமிழ் அடையாளம், தன்னுரிமைகள், சமூகச் சீர்திருத்தம், சாதிய எதிர்ப்பு, பெண்கள் உரிமைகள் போன்ற கொள்கைகளை கொண்டது. <br />
<br />
ஆனால் இது குறிப்பிட்ட இடங்களில் வேறுபட்டது. கம்பராமாயணத்தை எரிப்போம் என்றும் திராவிடம் கூறிய போது அதைப் பதிப்போம் என்று தமிழியம் கூறியது. பிராமணியத்தை/பிராமணரை தமது வரலாற்று எதிரிகளாக திராவிடம் கருதிய போது, தமிழியம் மொழிவழி இன உரிமை பேசியது. கருத்தியல் திராவிடம் பகுத்தறிவை, இறைமறுப்பை அடிநாதமாக் கொண்ட போது தமிழியம் சமய நம்பிக்கைகளை, மூட நம்பிக்கைகளை, மரபுகளை ஊக்குவித்தது, தமிழ் அடையாளத்துக்கு தந்த முக்கியத்துவத்தை சமூகச் சீர்திருத்ததுக்கோ, சமூக நீதிக்கோ தமிழியம் வழங்கவில்லை. மேற்கூறியது கருத்தியல் தமிழியம். நடைமுறையில் தமிழியம் மேலும் பல குறைபாடுகளைக் கொண்டது. ஈழத்தில் அது தமிழ்த் தேசியம் ஆக அரசியல் வலுப் பெற்ற போது மிதவாதிகளை அழித்து அடிப்படைவாதமாக அது மருபியது. தமிழ் பேசும் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணைத்துச் செல்லத் தவறியது. இன்று ப.ம.க போன்ற சாதிக் கட்சிகளினதும், நாம் தமிழர் போன்ற குறுக்குநோக்கு கட்சிகளினதும் அரசியல் பந்தானது, இதுத்தான் இன்றைய நடைமுறைத் தமிழியம். <br />
<br />
<strong>வரையறைச் சமன்பாடுகள்</strong><br />
<br />
<strong>கருத்தியல் திராவிடம்</strong> = பகுத்தறிவு + பி<br />
ராமணிய/சாதி எதிர்ப்பு + சமூகச் சீர்திருத்தம்/நீதி + பெண்கள் உரிமைகள் + திராவிட/தமிழ் அடையாளம் + தன்னுரிமைகள்/அரசியல் உரிமைகள் + இறைமறுப்பு/மூடநம்பிக்கை எதிர்ப்பு + நவீனத்துவம்<br />
<br />
<strong>இன்றைய (நடைமுறைத்) திராவிடம்</strong> = குடும்ப/தனிமனித நிர்வாகம் + பிரபலக் கொள்கைகள் + தாராளமய, தனியார்மய வலதுசாரிப் பொருளாதாரம் + சடங்குத் தமிழ் + சடங்குப் பெரியார் <br />
<br />
<strong>கருத்தியல் தமிழியம்</strong> = தமிழ் ஒருமைப்பாடு + தமிழ் அடையாளம் (மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு..) + தன்னுரிமைகள்/அரசியல் உரிமைகள் + சாதி எதிர்ப்பு + பெண்கள் உரிமைகள் + சமூகச் சீர்திருத்தம்/நீதி (குறைந்த முக்கியத்துவம்) + சமய ஏற்பு + மூடநம்பிக்கை/இறை ஏற்பு + தனித்துவம்/மரபு<br />
<br />
<strong>இன்றைய (நடைமுறைத்) தமிழியம்</strong> = தமிழ் அடையாளம் (மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு..) + தன்னுரிமைகள்/அரசியல் உரிமைகள் + தமிழ்/குறுந் தேசியவாதம் + சாதி எதிர்ப்பு + பெண்கள் உரிமைகள் + சமய ஏற்பு + மூடநம்பிக்கை/மரபு/இறை ஏற்பு + இனவாதம் + வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கை<br />
<br />
தமிழ்ச் சூழலில் செல்வாக்குப் பெற்ற கோட்பாடுகள் என்னும் போது இடதுசாரிக் கொள்கைளும் முக்கியம் இடம் பெறுகின்றன. அது இந்த அசலலில் இடம்பெறவில்லை. நடைமுறையில், ஒரு பெரும் விழுக்காடு வலதுசாரியினர். காந்தியவாதிகள், எவற்றிலும் பிடிப்பில்லாதவர்கள் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களும் இந்த அலசலில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. <br />
<br />
<a href="http://worldinmind.blogspot.ca/2013/07/1.html" target="_blank">திராவிடம் தமிழியம் 1 - பகுத்தறிவு </a></div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-80760143666941111772013-08-05T08:34:00.001-07:002013-08-05T10:10:58.956-07:00பணக்கார நாடுகளில் சம்பளம் (ஊதியம்) ஏன் அதிகம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்தியாவில் பேருந்து ஓட்டும் ஒருவரை விட சுவிட்சர்லாந்தில் பேருந்து ஓட்டும் ஒருவருக்கு 50 மடங்கு சம்மளம் கிடைக்கிறது. இது எதனால்? சுவிட்சர்லாந்தில் பேரூந்து ஓட்டுபவர் இந்தியாவில் பேருந்து ஓட்டுபவை விட 50 மடங்கு திறமையாக ஓட்டுகிறாரா? சந்தைப் பொருளாதாரமா, முதலாளித்துவமா இந்த வேறுபாட்டை விளக்கிறது? மேற்கண்ட கேள்வியைக் கேக்கிறார் பொருளியலாளர் ஃக-யூன் சங் (Ha-Joon Chang). <br />
<br />
நிச்சியமாக இது திறமை வேறுபாட்டினால் இல்லை என்கிறார் சங். ஏன் என்றால் சுவிட்சர்லாந்து பேருந்து ஓட்டுநர்கள் இந்திய ஓடுநர்களை விட 50 மடங்கு திறமையானவர்களாக இருக்க முடியாது. மாற்றாக, இந்தியாவில் மிகுந்த வீதி நெருக்கடிக்குள் பேருந்து ஓட்டுபவர்கள் கூடிய திறமை பெற்றவராக இருக்கும் வாய்ப்பு அதிகம். <br />
<br />
அப்படியானால், எப்படி இந்த வேறுபாட்டை விளக்குவது. இது உலக பொருளாதார அரசியல் அமைப்புச் சார்ந்த ஒரு விடயம். இந்தப் பொருளாதார அமைப்பில் சுவிட்சர்லாந்து ஒட்டுமொத்தமாக உயர்ந்த உள்கட்டமைப்பு, வசதிகள் கொண்ட ஒரு நாட்டை உருவாக்கியுள்ளது. இதில் எந்த ஒரு தனிப்பட்ட பேருந்து ஓட்டுனரின் பங்களிப்பு மிகச் சிறியது. ஆகவே ஒருவரின் சம்பளம் ஒட்டுமொத்த சமூகம் சார்ந்த விடயம் என்கிறார். இது குறைந்த சம்பளக் காரர்களுக்கு மட்டும் இல்லை, பெரும் சம்பளம், பணம் ஈட்டுபவர்களும் சமூகம் சார்ந்தே இருக்கிறார்கள். <br />
<br />
தீவர சந்தைப் பொருளாதார, முதலாளித்துவ ஆதரவாளர்கள் இந்த உண்மையை மறுத்து ஒருவரின் சம்பளம் ஒருவரின் திறமைக்கு மட்டும் சந்தையால் தரப்படும் வெகுமதி என்று வாதிடுகிறார்கள். சங்கின் எடுத்துக்காட்டு இந்தக் கூற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேலும் சங், அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடிய திறந்த சந்தை என்று ஒன்று இல்லை. எல்லா திறந்த சந்தைகளுமே அரசியல் பொருளாதார சூழலியல் விதிகளுக்கு (regulation) உட்பட்டவை. எடுத்துக்காட்டாக சுவிட்சர்லாந்தில் தாராள குடிவரவு இருந்தால் அங்கு பேரூந்து ஓட்டுவதற்கு கூடிய போட்டி இருக்கும், ஆகவே ஒட்டுநர்களுக்கு 50 மடங்கு சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்புக் குறைவு என்கிறார்.<br />
<br />
திறந்த சந்தையில் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படும் சிங்கப்பூரில் 85% வீடுகள் அரச நிறுவனத்தினால் வழங்கப்படுகிறது. டென்மார்க்கில் உழவர் கூட்டுறவுகள் மிக முக்கிய பங்களிப்புச் செய்கின்றன. அமெரிக்காவில் பெரும்பான்மையான அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் அரசினாலேயே செய்யப்படுகிறது. இவை எதை எடுத்துக் காட்டுகின்றன என்றால் தூய திறந்த சந்தை என்ற வாதம் தூய பொதுவுடமை என்றதைப் போன்று தவறானது.<br />
<br />
எடுத்துக்காட்டாக ரொறன்ரோ நகரில் உணவு வண்டி (Food Truck) விடுவதை எடுத்துக்கொள்வோம். அண்மைவரை இது முற்றாகத் தடை செய்யப்பட்டு இருந்தது. பெரும்பாலும் உணவங்களின் வேண்டுதலினால். முதலில் உணவு வண்டி விடுவது என்று தீர்மானித்தது போது அது தொடர்பாக பல விதிகள் கொண்டுவரப்பட்டன. எ.கா என்ன வகையான உணவுகள் விற்கப்படலாம், உணவுகளை நலப் பரிசோதனைக்கு உட்படுத்தல், எங்கே உணவு வண்டிகள் தரிக்கலாம், எத்தனை உணவு வண்டிகளை விடலாம், என்ன வரி போன்ற பல விதிகள். அதன் பின் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம் தோல்வியில் அடைந்தது. இப்பொழுது இன்னுமொரு முன்னோடித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆக இந்தச் சிறிய எடுத்துக் காட்டில் இருந்து ஒரு பொருளாதாரச் செயற்பாடு எந்தளவுக்கு அரசியலுடன் அல்லது சமூகத்துடம் ஊடாடுகிறது என்பதை உணர முடியும். <br />
<br />
இந்தக் கருத்துக்களை சங் "முதலாளித்துவம் பற்றி அவர்கள் உங்களுக்கு தெரிவிக்காத 23 விடயங்கள்" ("23 Things They Don't Tell You About Capitalism") என்ற நூலில் விரிவாகக் கூறியுள்ளார். இந்த நூலை இன்னும் படிக்கவில்லை, ஆனால் படிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன். <br />
<br />
<a href="http://www.youtube.com/watch?v=56RndDFRnH4">http://www.youtube.com/watch?v=56RndDFRnH4</a><br />
<a href="http://www.youtube.com/watch?v=AuhKRgBwDgU">http://www.youtube.com/watch?v=AuhKRgBwDgU</a><br />
<a href="http://www.youtube.com/watch?v=wlXbnuS6adc">http://www.youtube.com/watch?v=wlXbnuS6adc</a><br />
</div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9645319.post-81683962812278192232013-08-03T19:52:00.000-07:002013-08-03T21:45:22.595-07:00உத்தமத்தின் 2013 வலைத்தளம் தமிழில் ஏன் இல்லை?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கணினியில் தமிழை, இணையத்தில் தமிழை ஏதுவாக்க, வளர்க்க, ஊக்குவிக்கவென
நிறுவப்பட்ட அமைப்பே உத்தமம். தமிழிலும் நுட்பத்திலும் சிறந்த
வல்லுனர்களைக் கொண்ட அமைப்பாக அது தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசு, ஒருங்கிறி அமைப்பு போன்ற அனைத்துலக அமைப்புகளுக்களோடும்,
பல பல்கலைக்கழகங்கள், தமிழ் அமைப்புகளோடும் ஊடாடும் அமைப்பாக உத்தமம்
விளங்குகிறது. அவர்கள் செய்யும் முதன்மைப் பணி, பல ஆண்டுகளில் ஒரே தலையாப்
பணி மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்வது ஆகும். 2013 தமிழ் இணைய மாநாடு
மலேசியாவில் ஆகத்து 15-18 ஆம் திகதிகள் நடைபெறவுள்ளது. 2013 ஆம் ஆண்டு மாநாட்டு
வலைத்தளம் (http://ti2013.infitt.org/my/) பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால் அவை எவையும் தமிழில்
இல்லை, தமிழிலும் இல்லை. இது ஏன்?<br />
<br />
வேர்ட்டில் தமிழில் தட்டச்சு செய்து படமாக்கி வலையில் ஏற்றியது ஒரு
காலம். இன்று டுரூப்பல் (Drupal), வேர்ட்பிரசு(Wordpress) போன்ற உள்ளடக்க
மேலாண்மை ஒருங்கியங்களைப் (Content Management Systems) பயன்படுத்தி சில மணி நேரத்தில் அழகான பன்மொழி வலைத்தளத்தை உருவாக்கிவிட
முடியும். சிறந்த நுட்பர்களைக் கொண்ட உத்தமத்துக்கு, குறிப்பாக தமிழ்க்
கணினியின் முன்னோடி அமைப்பான உத்தமத்துக்கு தமிழில் வலைத்தளம் அமைப்பது ஒரு
நுட்பச் சிக்கலாக இருக்க முடியாது. ஆனால் அவர்களின் வலைத்தளம் தமிழில்
இல்லை. இது ஏன்?<br />
<br />
உத்தமம் தமிழில் தகவல்களைப் பகிர வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம்
தரவில்லை. அதனால் யாரும் சிறப்பாகப் பயனடையவார்கள் என்று அவர்கள்
கருதவில்லை. உத்தமத்தில் பங்கு கொள்ளும் அனேகருக்கு ஆங்கிலம் தெரிந்து
இருக்கும் தானே என்பது அவர்கள் கணிப்பு. அப்படி இல்லாவிடினும் அவர்கள்
பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இது அமைப்பின் கொள்கை தொடர்பானது. வேறு
பல டமில் அமைப்புக்கள் இந்த மனப்பான்மையக் கொண்டு இருக்கின்றன, ஆனால் அவை
பற்றி அவ்வளவு அக்கறை கொள்ளத் தேவை இல்லை. ஆனால் கணினியில் தமிழை,
இணையத்தில் தமிழை வளர்க்கவென நிறுவப்பட்ட அமைப்பு. இவர்களே இந்த நிலை
என்றால் வேறு அமைப்புகளுக்கு இவர்கள் போய் தமிழில் செய்யலாம் செய்யவேண்டும்
என்று கூறுவதில் என்ன பயன் இருக்கிறது.<br />
<br />
தமிழில் தகவல்களைப் பகிர்வதை அவர்கள் மதிப்புக் குறைவாக, அல்லது
இழிவாகக் கருதி இருக்கலாம். ஏன் என்றால் கல்விசார் கொன்பிரன்சு என்றால்
ஆங்கிலத்தில் நடத்தினால்தானே மதிப்பு. தமிழில் செய்வது வழமை இல்லைத் தானே.<br />
<br />
இறுதியாக, உத்தமம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இயங்குவதால்
உள்ளடக்கத்தை மொழிபெயர்க்க, தமிழில் வலையேற்ற கூடிய ஆற்றல் செலுத்த வேண்டி
இருக்கலாம். இந்தக் கூடிய ஆற்றலை இவர்கள் செலுத்தத் தயாரில்லை. இதுதான்
நான் பங்களிக்கும் சில அமைப்புக்கள் உட்பட்டவற்றின் நிலை. தமிழில்
உற்பத்தியைத் தரகிறார்கள், ஆனால் தமிழிலும் இயங்க முற்படுவதில்லை. இது
என்னத்தை உணர்த்துகிறது. தமிழ் அன்றாடா இயக்கத்து ஏற்ற மொழி இல்லை. அது
சமசுகிருதம் போன்று சில தளங்களில் பூசைக்குப் பயன்படும் மொழி என்று அல்லவா.
ஆக, உத்தமம் தமது இலக்குகளுக்கு எதிராகத் தாமே இயங்குகிறார்கள்.<br />
<br />
உத்தமம் ஒருங்குறியில் விட்ட தவறைப் போன்ற ஒரு பெரும் தவறாகவே இதை நான்
கருதுகிறேன். இதை எதோ யாரும் கவனிக்காமல் விட்ட தவறாக எடுத்துக் கொள
முடியாது. அமைப்பின் கொள்கையில், நடைமுறையில் ஊறிய ஒரு சூழமைவின்
வெளிப்பாடு.<br />
<br />
தமிழின் ஆக்க முனைகளிலேயே இந்த நிலை எனில், தமிழ்நாடு அரசு போன்ற
அமைப்புக்களிடம் அதன் தகவல்களை தமிழிலும் தர வேண்டும் என்று யாரும்
எதிர்பார்க்க முடியுமோ. </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9645319.post-44962007800143358232013-08-03T14:56:00.000-07:002013-08-03T14:58:36.362-07:00"மட்ராஸ் கபே" படத்தை தடை செய்யக் கோராதீர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்று அடிக்குரலில் கத்திவிட்டு, மறுகணமே ஒரு திரைப்படத்தை தடை செய்யக் கோருவது கோலிக்குரியது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக இவ்வாறு முரண்பாடு கொண்ட நிலைப்பாடுகளை எடுப்பது தமிழ்ச் சூழலில் எல்லாத் தரப்புக்களும் செய்யும் ஒரு அடவாடித்தனம். இடதுசாரிகள், திராவிடக் கட்சிகள், தமிழிய அமைப்புகள், சமயக் கட்சிகள், சாதிக் கட்சிகள், ஈழத்து இயக்கங்கள் என்று எல்லோரும் கருத்துக்களை தடை, தணிக்கை, தண்டிக்க செய்வதன் பின் ஒளித்துக் கொள்கிறார்கள். துண்டறிக்கை, சுவரொட்டி, கட்டுரை, இதழ், நாளிதழ், நூல், திரைப்படம், இசைத்தட்டு, நாடகம், நிகழ்த்தல் என எல்லா வெளிகளிலும் கருத்தை தடை செய்ய முனைகிறார்கள். கருத்தை கருத்தால் எதிர்க்க திரணியற்றவர்கள், எதிர்க்க ஆற்றல் இல்லாதவர்கள் அல்லது விருப்பாதவர்கள் எடுக்கும் குறுக்குவழிகளே இவை. <br />
<br />
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமே பிற அனைத்து உரிமைகளுக்கும் அடித்தளமான ஒர் அடிப்படை மனித உரிமை. மக்களாட்சிக்கு, நல்லாட்சிக்கு, சமூக மாற்றத்துக்கு, தன்மதிப்புக்கு, படைப்பாக்கத்துக்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம். சிறுவர் ஆபாசம், ஆபத்தான விளம்பரம், நேரடியாக பாதிப்பை தரக் கூடிய வெறுப்புப் பேச்சு, பாதுகாப்பு போன்று மிகக் குறுகிய எல்லைகளைத் தவிர கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படல் ஆகாது. தமிழ்நாடும், இந்தியாவும் அடிப்படை மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பாக சீரிய அக்கறை அற்றவை. அதனால் யார் ஒரு படைப்புக்கு எதிராக ஒரு சிறு கலக்கம் செய்தாலும் மிக உச்சகட்டமான முடிவாக அந்தப் படைப்பை தடை செய்து விடுவார்கள். இலங்கையைப் பற்றிக் கேக்கத் தேவை இல்லை.<br />
<br />
"மீண்டெழும் பாண்டியர் வரலாறு" என்ற தமிழ் நூல் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது, பல திரைப்படங்கள் தடை, தணிக்கைக்கைக்கு உட்பட்டது, பேசியதற்காக பலரை சிறைக்கு அனுப்பயது, இதுதான் இன்றைய தமிழ்நாடு, இந்தியா. இதில் இருந்து மீள்வது என்றால் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதியாக எல்லோருக்கும் வழங்க வேண்டும். குறிப்பாக எமக்கு பிடிக்காத, நாம் ஏற்றுக் கொள்ளாத கருத்துக்களைத் தாங்கி படைப்புகள் வெளிவரும் போது. அவற்றுக்கு எதிராக நாம் மறுப்பு நூல் எழுதலாம், விமர்சிக்கலாம், புறக்கணிக்கலாம், ஆனால் அவற்றை தடை செய்யக் கூடாது, தணிக்கை செய்யக் கூடாது, தண்டிக்கக் கூடாது. <br />
<br />
ஆகவேதான் நான் பார்க்காத, பார்க்கப் போகாத "மட்ராஸ் கபே" படத்தைத் தடைசெய்ய சிலர் கோருவதை கண்டிக்கிறேன். உங்களுக்குப் படம் பிடிக்கவில்லையா பார்க்காதீர்கள். படத்தில் தவறாக தீங்காக கருத்துக் கூறப்பட்டுள்ளதா. புறகணியுங்கள். பிறரை புறக்கணிக்கக் கோருங்கள், தூண்டுங்கள். ஆனால் தடை செய்ய, தணிக்கை செய்யக் கோராதீர்கள். அவ்வாறு கோருவது, எமக்கு எல்லோருக்கும் தேவையான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதிக்கும்.<br />
<br />
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக நான் முன்னர் செய்ய ஒரு நிகழ்த்தல் (presentation)<br />
<a href="https://docs.google.com/file/d/17Q0yyHwHPQhVZ0qkr-CAENmRofGymUg1MnkhI3xhrMJU4YwqiCLluGuHKpYk/edit?usp=sharing">https://docs.google.com/file/d/17Q0yyHwHPQhVZ0qkr-CAENmRofGymUg1MnkhI3xhrMJU4YwqiCLluGuHKpYk/edit?usp=sharing</a><br />
<br />
</div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9645319.post-55791766131503650702013-07-29T20:15:00.002-07:002013-07-29T20:41:19.992-07:00டிட்ராயிட்டின் (detroit) வீழ்ச்சியும் ஏழை கறுப்பின மக்களும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஐக்கிய அமெரிக்காவின் எந்திர நகரம் (Motor City) என்று அறியப்பட்ட பெரும் நகரங்களின் ஒன்றான டிட்ராயிட் (Detroit) அண்மையில் கடன் நொடிக்கு (bankruptcy) தள்ளப்பட்டுள்ளது. இன்றுவரை, கடன் நொடிக்கு தள்ளப்பட்ட மிகப் பெரும் நகரம் இதுவே ஆகும். அமெரிக்காவின் முப்பெரும் தானுந்து நிறுவங்கள் (GM, Ford, Chrysler) இங்கேயே தலைமைபீடம் கொண்டுள்ளன. நெடுங்காலமாக தானுந்துக்கள் உற்பத்தி பெருமளவு இங்கேயே நடைபெற்றது. ஆனால் இன்று 12 தொழிற்சாலைகளில் இருந்து வீழ்ந்து இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே இங்கு உள்ளன. 1950 களில் இங்கு 296,000 உயர் சம்பளம் கொண்ட உற்பத்தி வேலைகள் இருந்தன, இன்று 27,000 வேலைகள் மட்டுமே உள்ளன. <br />
<br />
1960 களில் 1.6 மில்லியன் மக்கள் வாழ்ந்த டிட்ராயிட் நகரத்தில் இன்று 700,000 மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். இதில் 83% ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், 11% வெள்ளையர்கள், 6% பிறர். கடந்த சில பத்தாண்டுகளாக "வெள்ளையர் வெளியேற்றம்" (white flight) நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இவர்கள் புற நகரப் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளார்கள். டிட்ராயிட் வீழ்ச்சி பெறத் தொடங்கியதில் இருந்து வேலையின்மை கூடியுள்ளது, நகர சேவைகள் பல செயலிழந்து போயுள்ளன, குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. டிட்ராயிட்டின் வீழ்ச்சியும் வெள்ளையர் வெளியேற்றம் ஒரே நேரம் நிகழ்ந்துள்ளது. இதனை சுட்டிக் காட்டி பல தேர்ந்த ஆய்வாளர்கள் கூட டிட்ராயிட்டின் வீழ்ச்சி வெள்ளையர் வெளியேற்றத்தாலேயே நிகழ்ந்துள்ளது என்று வாதிட்டுள்ளார்கள். <br />
<br />
இவ் இரண்டு நிகழ்வுகளுக்கு இடையே ஒரு பலவீனமான ஒட்டுறவு (weak correlation) நிலை இருக்கலாம். ஆனால் வெள்ளையர் வெளியேற்றமே டிட்ராயிட்டின் வீழ்ச்சிக்கு காரணமாக (causes) அமைந்தது என்பதற்கு வலுவான சான்றுகளும் இல்லை. டிட்ராயிட் பொருளாதாரத்தில் ஏற்ற முகத்தில் இருந்த போது வேலை வாய்ப்புக்கள் தேடி ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்கள் பெருந் தொகையில் டிட்ராயிட்டுக்கு வந்தார்கள். அவர்களும் வெள்ளை உழைக்கும் மக்களும் ஒரே வர்க்கமாக இருந்தாலும், அவர்கள் கடும் இனவாதத்தை எதிர்நோக்கினார்கள். வெள்ளையர்களின் மிகக் கோரமான ஒடுக்குமுறைகளும், அதற்கு எதிராக வலுவான எதிர்ப்புப் போராட்டங்களும் இந்த நகரத்தில் நடந்தன. இந்த ஒடுக்குமுறைகளும் இனவாதக் கட்டமைப்புக்களும் கறுப்பின மக்களை தொடர்ந்து பெருமளவு பொருளாதார கல்வி அரசியல் நோக்கில் பாதித்து வந்தன. இவர்களின் ஒரே இணக்கப் பாலமாக இருந்த தொழிற் சங்கங்களும் இவர்களை அரசியல் நோக்கில் இணைப்பதில் வெற்றி கொள்ளவில்லை. <br />
<br />
அமெரிக்க தானுந்து தொழிற்துறை தமது உற்பத்தியை மிகுந்து மலிவான உற்பத்தி வழிகளைத் தேடி மெக்சிக்கொ, இந்தியா, சீனா என்று தமது தொழிற்சாலைகளை நகர்த்தின. இந்த நகர்வால் பெருமளவு உயர் ஊதியம் வழங்கும் தொழிகள் இல்லாமல் போயின. இந்த வீழ்ச்சியை பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் இருந்த வெள்ளையின மக்களாலும், அப்பொதுதே சற்று மேலெழுந்து வந்த கறுப்பின நடுத்த மக்களாலும் எதிர்கொள்ள முடிந்தது. அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறினார்கள். வேறு ஒரு வழியில் கூறுவதாயின் நடுத்தர வகுப்பினர் வெளியேறினார்கள். இந்த வகுப்பில் வெள்ளையினரே பெரும்பான்மையினராக இருந்தால் இதை வெள்ளையர் வெளியேற்றம் என்று சிலர் தவறாகக் கருதினர். வெள்ளையர்கள் தமது அரசியல் செல்வாகினால் புற நகர்ப் பகுதிகளுக்கு பல சேவைகளைப் பெற்றுக் கொள்ளத் தக்கதாக இருந்ததும் இந்த நகர்வை ஏதுவாக்கியது.<br />
<br />
அடிமைத்தனத்தையும், ஒடுக்குமுறையும் எதிர்கொண்ட கறுப்பின மக்களிடம் பொருளாதார மூலங்கள் மிகச் சொற்பமாகவே இருந்தன. நிதி, கல்வி, அரசியல் செல்வாக்கு இவர்களிடம் பெருமளவில் இருக்கவில்லை. ஆகவே பொருளாதார ஆற்றல் கொண்ட நடுத்தர மக்கள் வெளியேறிய போது பொருளாதார ஆற்றல் நலிந்த மக்களால் டிட்ராயிட்டை திருப்பி நிற்க வைக்க முடியவில்லை. <br />
<br />
டிட்ராயிட் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளின் இனவாதம், ஊழல், மடைமைத்தனம் நிறைந்த நிர்வாகம் ஒரு முக்கிய காரணம். தனியே தானுந்து தொழிற்துறையை மட்டும் நம்பி இருந்தது, அந்த துறை வீழ்ந்த போது வேகமாக மாற்றுக்களைக் கண்டடையாதது, இனங்களுக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாதது என்று பல நிர்வாகக் குறைபாடுகள் உண்டு. <br />
<br />
இறுதியாக, டிட்ராயிட்டின் வீழ்ச்சிக்கு உலகமயமாதாலாலும், கம்பனிகள் அதிக இலாப தேடியதால் தானுந்து தொழிற்சாலைகளை இழந்தது, அதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, அரசியல்வாதிகளின் இனவாத, ஊழல்நிறைந்த, தொலைநோக்கற்ற, நிதிப் பொறுப்பாண்மையற்ற இடதுசாரி நிர்வாகம், இனவாத, இன ஒடுக்குமுறைச் சூழல் ஆகியன டிட்ராயிட்டை வீழ்த்தின. இதனால் நடுத்தர மக்கள் வெளியேறினார்கள். அதில் பெரும்பான்மையினராக வெள்ளையினர் இருந்தனர். <br />
<br />
எந்த ஒரு நகரமும் ஊரும் பன்மைத்துவத்தைப் பேணுவது அதன் பொருளாதார நலனுக்கு நல்லதே. ஆகவே வெள்ளையினர் அல்லது மக்கள் பெருந்தொகையில் வெளியேறியது டிட்ரொயிட்டை கணிசமாகப் பாதித்து இருக்கும். ஆனால் இது சிலர் சிலர் சொல்லாமல் குறிப்பிடுவது போன்று வெள்ளையர்கள் நிர்வாக பொருளாதார அரசியல் மேன்மைத்துவத்தினால் அல்ல. அவ்வாறான வாதங்கள் இனவாதமே. <br />
<br />
<br />
</div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-19575185764971961132013-07-24T17:32:00.003-07:002013-08-08T21:06:28.501-07:00திராவிடம் தமிழியம் 1 - பகுத்தறிவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தொடக்கத்தில் திராவிடத்தின் அடிப்படைக் கொள்கையாக, முக்கிய கருவியாக பகுத்தறிவு இருந்தது. மூடநம்பிக்கைகளை, சாதியத்தை, பெண் அடிமைத்தனத்தை, சமயத்தின் மூடத்தனத்தை அறுக்கப் பயன்படும் ஆயுதம் பகுத்தறிவு. ஒரு கோட்பாட்டை தானே பரிசோதித்து, கோள்வி கேட்டு, விமர்சித்து, கூர்ப்படையப் பயன்படும் கருவி பகுத்தறிவு. வெறுமே வேதம்/சமயம் என்றும், அதிகாரம் கூறியது என்றும் ஏற்றுக் கொள்ளாமல் எமது பகுத்தறிவின் ஊடாக நிரூபித்து கண்டறியும் அறிவியல் முறையே உண்மையை அறிய மனிதர்களுக்கு இதுவரை இருக்கும் சிறந்த வழி. <br />
<br />
தமிழ்ச் சூழலில் பகுத்தறிவை விதைத்தவர் பெரியார்தான். அவர் கூறுகிறார் "என்னுடைய அபிப்பிராயங்களையும் நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன். ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளே!...நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்." என்று. <br />
<br />
ஆனால் இன்றைய திராவிடக் கட்சிகள் பகுத்தறிவை கருவறையில் வைத்து வழிபாடு செய்கிறார்களே ஒளிய கொள்கையாகவோ, கருவியாகவோ பயன்படுத்தவில்லை. பெரியாருக்கே மாலை போடுவது, பூசை செய்வது. சாமியார்களின் கால்களில் போய் விழுவது. கல்வியின்றி, நலமின்றி தவிக்கும் மக்களுக்கு இலவச தொலைக்காட்சிகளை வழங்குவது. புள்ளிவிபர, ஆய்வடிப்படையில் கொள்கை அமைக்காமல் எக் கொள்கை பிரபலமானதோ அக் கொள்கையைக் கொள்வது. குடும்ப அரசியலை செய்து குடும்பத்தை வளர்ப்பது, சமூகத்தை கொலை செய்வது. இதுதான் இன்றைய திராவிடம். இதில் எங்கே பகுத்தறிவு இருக்கிறது. பெரியார், அண்ணா ஆகியோரின் மறைவுக்கு பின்னரே நேர் எதிர்மாறான கொள்கைகளை அது ஏற்றுக் கொண்டுவிட்டது.<br />
<br />
திராவிடம் போன்றே கலக்கத்திலும் எதிர்ப்பிலும் தமிழியம் தோன்றியது. ஆனால் பகுத்தறிவு பற்றி தமிழியம் என்றும் விரிவாகப் பேசியது இல்லை. தமிழியத்தின் தோற்றுவாயகக் கருதப்படும் தனித்தமிழ் இயக்கம், தமிழ்த் தேசியம் ஆகிய இரண்டும் உணர்ச்சி அடிப்படையில் மக்களைத் திரட்டும் இயக்கங்கள். இவை தொழில் உத்திகை அணுகுமுறையை (technocratic approach) மிகுந்து கையாண்டாலும், பகுத்தறிவு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. தமிழியம் என்றும் சமயத்தை, கடவுளை எதிர்க்க துணிந்தது இல்லை. ஒரு வகையில் இவர்களின் அடித்தளம் ஐக்கிய அமெரிக்காவின் 6000 ஆண்டு உலகை நம்பும், படிவளர்ச்சியை எதிர்க்கும் சமய அடிப்படைவாதிகளை ஒத்தது. <br />
<br />
ஆக, தமிழ்ச் சூழலில் இன்று செல்வாக்குப் பெற்று இருக்கும் இரண்டு கோட்பாடுகளுமே பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் தரவில்லை. பகுத்தறிவை கருவாகக் கொள்ளாத எந்தக் கோட்பாடுமே தொலைநோக்கில் நிலைத்து நிற்க வாய்ப்பு இல்லை. </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9645319.post-85978653441429420532013-06-04T22:00:00.002-07:002013-06-04T22:13:07.019-07:00ஆங்கில வழிக் கல்விக்குப் பின்னால் இருக்கும் பண்பாட்டுப் பொருளாதாரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழ்நாட்டில் ஆங்கில ஆசிரியர்கள் தேவை. உடனே விண்ணப்பிக்கவும். தகுதி: ஆங்கில அறிவு, வெள்ளை நிறம், சரியான உச்சரிப்பு. வெகுமதி தங்குமிடம், உயர்ந்த சம்பளம், நீண்ட விடுமுறை. <br />
<br />
திரைப்படம், இசை, ஊடகம், பதிப்புத்துறை, உணவு, உடை, அரசு, சட்டம், நிகழ்வுகள் என ஒரு சமூகத்தின் அனேக கூறுகள் மொழியுடன் தொடர்புடையவை. ஒரு நாட்டு மொழியில் அதன் அரசு இருந்தால், ஊடகங்கள் செயற்பட்டால், கலைகள் படைக்கப்பட்டால் அந்த நாட்டில் தன்னிறைவான, தனித்துவமான ஒரு பொருளாதாரத்தை அவை ஊக்குவிக்கும். மாற்றாக வேற்று, ஆதிக்க மொழியில் அவை நிகழ்ந்தால், அவை எல்லாம் இறக்குமதிகளாக மாறிவிடும். இது உணர்ச்சிவசப்பட்ட ஒரு வாதம் இல்லை. மிகவும் யதார்த்தமான உண்மை நிலவரம்.<br />
<br />
அமெரிக்காவின் ஆதிக்கம் அதன் படைத்துறையை விட பண்பாட்டில் தான் என்பது பல ஆய்வாளர்களின் கருத்தாகும். தமிழ்நாட்டில் ஆங்கிலம் வந்தவுடன் தமிழ்நாட்டின் கோடம்பாக்கம் கோலிவுட் ஆகிவிடாது. ஆமெரிக்க திரைத்துறையுடம் பிற ஆங்கில நாட்டு திரைத்துறைகளே போட்டியுட முடியாது. அதனால் தான் கனடா போன்ற ஆங்கில மொழி நாடுகளில் கூட கனடிய உள்ளடக்கம் என்ற ஒரு சட்டம் ஊடகத்துறையில் உள்ளது. ஆகவே தமிழ்த் திரைத்துறை, இசை, அவை எல்லாம் தங்கி இருக்கும் எழுத்துத்துறை ஆகியன நலிவடைந்து அழிய ஆங்கிலவழிக் கல்வி உதவும். <br />
<br />
உள்ளூர் உணவுகளை விடுத்து மக்கடொலால்சையும் பிற்சாவையும் உண்டால், அதனால் ஒரு பெரும் பொருளாதாரப் பாதிப்பு வரும். சோறு, கறி, இட்லி, தோசை, கொத்து, பிட்டு, அப்பம் என்று இல்லாமல் இறக்குமதி உணவுகளாக அவை மாறும். இதன் பின்னால் இருக்கும் பொருளாதாரத்தை புகலிட நாடுகளில் நன்கு அவதானிக்க முடியும். முதலாம் தலைமுறைத் குடிவரவாளர்களின் ஒரு முதன்மை பொருளாதார மூலமாக அமைவது, தமிழ்க் கடைகள், தமிழ் உணவகங்கள், தமிழ் உணவு உற்பத்தி நிறுவனங்கள். சுவைப்பொருட்கள், நல்லெண்ணைய், தானியங்கள், பல வகை மாக்கள், அரிசிகள், தமிழர் மரக்கறிகள், மீன் என்று பெரும் நிறுவனங்கள் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளாத பொருட்களில்தான் நூற்றுக் கணக்கான தமிழ் வணிகங்கள் தங்கி இருக்கின்றன. இதையே தமிழ்நாட்டில் மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும். மக்டொலால்சும் பிற்சாக்களும் நிறைந்தால் உள்ளூர் பொருளாதாரம் என்னவாகும். இது வெறும் ஒப்பீடு இல்லை, எதிர்கூவலே. <br />
<br />
ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் அரச பணிக்கு தமிழ்த் துறை மாணவர்கள் சிறப்புத் தகுதி பெறுவார்கள். கனடாவில் பிரெஞ்சு மொழி தெரியாமல் பெரும்பான்மை அரச பணிகளில் அமர முடியாது. பிரெஞ்சு 20% மக்களால் மட்டுமே பேசப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டல் மட்டும் பிரெஞ்சு கற்பித்தல் இங்கு ஒரு பெரும் வணிகம். தமிழ்த் துறை மாணவர்களுக்கு மொழி மட்டும் தெரிந்து பணி கொடுக்க வேண்டும் என்று கூறுவது இதன் நோக்கமல்ல. மாற்றாக எவ்வாறு மொழி தொடர்பான அரச முடிவுகள் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதையே இங்கு சுட்ட விரும்புகிறேன்.<br />
<br />
இவை எல்லாவற்றையும் விட ஆங்கில மயமாக்கலின் பினால் ஆங்கில ரியூசன் நடுவங்களும், அனைத்துலக வணிக கல்வி நிறுவனங்களும் உள்ளன. அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து தமிழ்நாட்டின் பொதுக் கல்வி நிறுவனங்களை பயனற்றவை ஆக்கி விட்டாயிற்று. இப்பொழுது இவை நாயகன்கள் போல் வந்திறங்கியுள்ளார்கள். இதனால் கல்வியின் விலை மடக்கு வேகத்தில் உயரப் போகிறது. <br />
<br />
இவ்வாறு அடுக்கிக்க் கொண்டே போகலாம். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலமயமாக்கம் என்பது தன்னியல்பாக நடக்கும் நிகழ்வன்று. அதற்குப் பின்னால் ஆதிக்கங்கள் உள்ளன. பிரித்தானியப் பேரரசின் போது அது வெளிப்படையாக நடந்தது. இப்பொழுது சூட்சமமாக நடக்கிறது. பண்பாட்டுப் பொருளாதார ஆக்கிரமிப்பு என்பது இதன் வடிவம். நாம் அடிமை ஆவது என்று தெரிவு செய்துவிட்டால், அதன் பின் எக் காரணங்களும் எதிர்ப்புக்குப் பயன்படா. </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9645319.post-91878995755027492132013-06-04T21:29:00.003-07:002013-06-04T22:16:16.146-07:00ஆங்கிலக் கல்வியால் மலேசிய, இலங்கைத் தமிழர்களை தமிழ்நாடு விற்றுவிட்டது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழ்நாடு அரசின் ஆங்கில வழி முன்னெடுப்பு மலேசிய, இலங்கைத் தமிழர்களைப் பார்த்து என்ன சொல்கிறது. நீங்கள் எல்லாம் மடையர்கள். தமிழ் தமிழ் என்று ஏன் சாகிறீர்கள். பேசாமல் மலாய் மொழியை, சிங்கள மொழியை அல்லது எதாவது திணிக்கப்படும் மொழியை ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் அறிவை வழக்கிறதோ இல்லையோ, உங்களின் குறுகிய கால அடிமைப் பொருளாதாரத்தை வளர்க்கும். <br />
<br />
தமிழர்களின் உரிமைகளை மறுக்கும், மிகவும் இக்கட்டான சூழல்களிலும் கூட மலேசியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் தமிழ் வழிக் கல்வியை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் முழுமையான உரிமைகள் இருந்தும், ஒரு வித குறுகிய பார்வையில் ஆங்கில வழிக் கல்வியை தமிழ்நாடு அரசு அமுல்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி இல்லாமல் போனால், அதனால் கணிசமான பாதிப்பு மலேசிய இலங்கை மாணவர்களுக்கு ஏற்படும். எ.கா தமிழில் கல்வி வளங்கள் உருவாக்கப்படுவதற்கு எந்தவித ஊக்கமும் தமிழ்நாட்டில் இல்லாமல் போகும். அந்தக் கல்வி வளங்கள் இலங்கை, மலேசிய மாணவர்களுக்கு கிடைக்காமல் போகும். இதுவல்ல மோசமான விளைவு. <br />
<br />
தமிழ்நாட்டின் இந்த முடிவை முன் உதாரணம் காட்டி இலங்கையோ மலேசியாவோ வேற்று மொழிகளை தமிழ் மாணவர்கள் கல்வி மொழியாக ஆக்க முயற்சி செய்யக் கூடும். ஏற்கனவே அனைத்துலக வணிக கல்வி நிறுவனங்களுக்கு இது ஒரு விளம்பரமாக அமையும். <br />
<br />
ஈழப் போராட்ட கால கட்டத்திலும் சரி, மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் சரி தமிழ்நாடு அரசு ஒரு முதுகெலும்பு இல்லாத டமில் அரசாவே இருந்து வருகிறது. அயலகத் தமிழர்கள் பற்றி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கவலைப்படுவது போன்று காண்பிப்பது எல்லாம் பொது மக்களுக்காகப் போடும் ஒரு நாடகம் என்று அனைவரும் அறிந்து இருந்தாலும். இவ்வாறு அடி வயற்றில் கை வைப்பார்கள் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். <br />
<br />
தமிழ்நாட்டில் தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழிய அரசியலாளர்களுக்கும் மட்டும் இல்லை, அயலகத் தமிழர்களுக்கும் இது ஒரு பெரும் தோல்வி. ஈழப் போராட்டம் போன்று மீள முடியாத ஒரு திருப்புமுனைக்கு இது இட்டுச் செல்லும். </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-14781074151416486562013-05-20T10:51:00.002-07:002013-06-04T22:00:49.110-07:00தமிழ்நாட்டில் சீன வழிக் கல்வி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சீன மொழியே உலகில் அதிக மக்கள் பேசும் மொழி. இன்று சீனா உலக வல்லரசாசிவிட்டது சீனாவின் பொருளாதாரம் இந்தியாவை விட பல மடங்கு பெருகி வளர்ந்துள்ளது. இதனால் சீன மொழி அறிந்த, மலிவான தொழிலாளர்களுக்கான பொருளாதார வாய்ப்பு மிகவும் வேகமாக வளச்சி அடைந்து வருகின்றது.<br />
<br />
இந்த மிகப் பெரிய பொருளாதார வாய்ப்பை தமிழ்நாடு அரசு முறையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அமைய தமிழ்நாட்டில் அடிப்படைக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கல்வி சீன வழியில் அமையும் என அதிமுக தலைவி செயலலிதா அறிவித்துள்ளார். இதன் முன் முயற்சியாக 320 பள்ளிகள் ஏற்கனவே சீன மொழியில் கல்வி முன்னெடுக்கப்படுகிறது. <br />
<br />
சீன மொழி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கடினமாக இருக்கின்றது என்றும், தாய் வழிக் கல்வியே சிறந்தது என்றும் அறிவியலாளர்களும் கல்வியாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். சீனம் இரண்டாம் மொழியாக திறனையாகக் கற்பிக்கப்படலாம் என்றும், தேவைப்படுபவர்களுக்கு கூடிய மொழிக் கல்வி ஆதரவு வழங்கலாம் என்றும் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு சீன வழிக் கல்வி இன்றைய பொருதாரத் தேவை என்றும், தமிழ்நாடு வேகமாகப் பொருதார வளர்ச்சி பெற இது அவசியம் என்று வாதிடுகிறது. சீனா இந்தியாவை ஆக்கிரமித்தால், சீன வழிக் கல்வி இன்னும் கூடுதலாகப் பயன்படும் என்றும் கூறியுள்ளது.</div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9645319.post-19730285004579884882013-05-20T10:28:00.002-07:002013-06-04T22:01:00.671-07:00தமிழ்நாட்டில் எங்கும் தமிழில்லை, எதிலும் தமிழில்லை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அரச கல்வி ஆங்கில மயமாக்கவுடன் திராவிட கருத்தியலின் இறுதி மூச்சும் அடங்கிவிடும். எதைக் கூறி, எதை வைத்து ஆட்சிக்கு வந்தார்களோ, அதையே புதைத்துவிட்டு புதிய கடவுள்களுக்கு அடிப்பணிந்து விட்டார்கள். தமிழ்ப் பற்று, தமிழ் வளர்ச்சி என்று யாரும் இனி பேச, சொத்தமொழி மாநாடுகள் நடத்த இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. <br />
<br />
சமசீர் கல்வி பரிந்துரைக்கப்பட்ட போது தாய்மொழிக் கல்வி பரிந்துரையை திமுக கருத்தில் கொள்ளவில்லை. தமிழ் ஒரு பாடம் ஆகக் கூட தமிழ்நாட்டில் கொண்டுவர முடியவில்லை. தமிழ்நாட்டு வலைத்தளங்களில் கூட தமிழை முழுமையாக பயன்படுத்த முயற்சிக்கவில்லை. <br />
<br />
அதிமுக ஆங்கிலத்தை அரச பள்ளிகளில் கல்வி மொழியாக ஆக்கி தமிழின் அடி ஊற்றுக்கே வேட்டு வைத்துள்ளது. மேல் நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்று போலிக் கோசம் போடுகிறார்கள். சட்டம் மக்கள் புரியும் மொழியில் இருக்க வேண்டுமாம். உண்மைதான். அப்படியானால் அடிப்படைக் கல்வி மக்கள் மொழியில் இருக்கத் தேவை இல்லையா. <br />
<br />
1850 களிலேயே யாழ்ப்பாணத்தில் தற்கால மருத்துவம் தமிழில் சொல்லித் தரப்பட்டது. கலைச்சொற்கள், கலைக்களஞ்சியங்கள், பாடத்திட்டங்கள் என்று ஒன்றரை நூற்றாண்டாக ஆய்த்தங்கள் செய்துமுடிந்த பின்பும் மருத்துவக் கல்வி தமிழில் இல்லை. ஏன் அரச குடியாட்சிப் பணிகளில் கூட தமிழ் முறையாக அமுலில் இல்லை. என்ன கேட்டுக்கு ஆட்சி மொழிச் சட்டம். <br />
<br />
தமிழை ஆட்சிமொழியாக, கல்வி மொழியாக, சட்ட மொழியாக ஆக்க திராவிட கட்சிகளால் முடியவில்லையா. அப்படியானால் இவர்கள் திறமை அற்றவர்கள், வல்லமை இல்லாதவர்கள். விரும்பவில்லையா, அப்படியானால் இவர்கள் போலிகள். இரண்டுமே இல்லையா, அப்புறம் எதற்கு இவர்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று கத்த வேண்டும். <br />
<br />
கல்வி இல்லாத மொழி மொழியல்ல. அது வெறும் எலும்புக் கூடும். ஒருவனால் தமிழில் அறிவியல் பேச முடியாது எனில், சமூகவியல் பேச முடியாது எனில், தொழில்நுட்பம் பேச முடியாது எனில் வேறு என்ன பேசி என்ன பயன். <br />
<br />
ஈழத்தில் தமிழ் திட்டமிட்டு கொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழை தற்கொலை செய்கிறார்கள். ஆங்கிலக் கல்வி நிறைவேறினால் தமிழியமும் திராவிடமும் இணைய முடியாத திசைகளில் பயணிக்கும். </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-35767862312099334532013-05-18T19:20:00.001-07:002013-06-04T22:01:10.413-07:00தமிழ்நாட்டில் அரச பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தமிழ் வழிக் கல்விக்கு மரண அடி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அதிமுக அரசு தமிழிநாட்டு அரச பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி விரிவாக்கவுள்ளது. தாய் வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை கல்வியாளர்கள், உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள் எவ்வளவு எடுத்துரைத்தும் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது. அரச முறையாக தரமான கல்வி வழங்கத் தவறியதை எதோ ஒரு வகையில் மறைக்கவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. <br />
<br />
ஆங்கிலக் கல்வியே எங்கும் இருக்கிறது என்பது ஒரு மாயை. யேர்மனி, யப்பான், பிரான்சு, சீனா, உருசியா, இலங்கை போன்ற தாய்மொழிக் கல்வி நாடுகளே பெரும்பான்மை. இந்த நாடுகள் தாய் மொழிக் கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு தடை இல்லை என்பதை நிரூபித்து உள்ளன. இந்தியாவில் கூட தாய் மொழிக் கல்வி வலுவாக உள்ள கேரளா ஒரு சிறந்த முன் எடுத்துக் காட்டு. அங்கு அவர்கள் தாய் மொழிக் கல்வியை விரிவாக்கவே நடவடிக்கை எடுக்கிறார்கள். <br />
<br />
தமிழ் வழிக் கல்வி ஆங்கில மொழி அறிவுக்கு தடை என்பதும் ஒரு நியாமான வாதம் இல்லை. ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாக கற்றுக் கொள்ளலாம். அதன் பரந்த ஊடகங்கள் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம். ஆங்கில மொழியை மட்டும் அல்ல சீனம், அரபு, எசுபானியம் என்று மேலும் பல மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். <br />
<br />
தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியை பொது மக்கள் விரும்புகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். அரச கல்லூரிகள் கல்வித் தரத்தை அடிமட்டமாக்கி விட்டு, தனியார்மயமாக்கம் ஊடாக கல்வியை வியாபாரம் ஆக்கி விட்ட சூழலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
ஆங்கில வழிக் கல்வியால் தமிழ்நாடு அரச பள்ளிகளில் தாமாக தரம் உயர்ந்து விடப் போததில்லை. தமிழ்நாட்டில் பெரும்பான்மையானோர் கோல் சென்ரரில் வேலை பார்க்க தகுதி பெற வேண்டும் என்று அரசு நினைத்தால், அது ஒரு வேளை நிறைவேறலாம். இவ்வளவு காலம் பன்னாட்டு கம்பனிகளுக்கு வேலை செய்தும் இந்தியா தனாக ஒரு புத்தாக்கச் சூழலையோ, சொந்த அறிவு மூலங்களையோ கொண்டிருக்கவில்லையே என்று காரணம் தேடினால், தமிழ்நாட்டின் அரச மனப்பான்மையில் பதில் கிடைக்கும்.<br />
<br />
இலங்கையில், மலேசியாவில் மிகவும் சிக்கலான பாதகமான சூழல்களில் தமிழ் வழிக் கல்வி முன்னெடுக்கப்படும் போது தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்படுவது மிகக் கவலை தருவது. <br />
<br />
இது தமிழ் மொழி, பண்பாடு சமூகத்தைப் பொறுத்த வரையில் பாரிய விளைவுகளைத் தரப் போகிறது. முதலாவதாக , தமிழ் வழிக் கல்வியின் மரண அடி இதுவாகத்தான் இருக்கும். இரண்டாவதாக தமிழில் அறிவு வளர விடாமல் தடுத்து. ஒரு அறிவற்ற சடங்கு மொழியாக ஆக்கும். மேற்குநாடுகளில் தமது மொழிகளை இழந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். முதற்குடிகளை, கறுப்பினத்தவர்களை, அவர்கள் எவ்வளவு தூரம் தமது அடையாளத்தை, அறிவைத் துலைத்து உள்ளார்கள். இன்று வரை அவர்களால் முழுமையாக மீள முடியவில்லை.<br />
<br />
இந்த நகர்வுடன் திராவிட இயக்கம் தமிழ் சமூகத்தை முற்றிலும் விலைக்கு வித்தவிட்டது என்பது தெளிவு. பகுத்தறிவைத் முதலில் தொலைத்தார்கள். சமூக நீதியை பின்னர் மறந்தார்கள். இப்பொழுது தமிழையும் புதைத்து விட்டார்கள். இதில் திமுக, அதிமுக எல்லோருமே சம பங்கு. </div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9645319.post-34563712412209516322013-03-26T19:46:00.002-07:002013-03-26T19:46:37.647-07:00போராட்டம் சிங்களவர்களுக்கோ, இலங்கைக்கோ எதிரானது அல்லசிங்களவர்கள் எமது பக்கத்து வீட்டார், நெடும் வரலாற்றுப் பயணத் தோழர்கள். உறவினர்கள், நண்பர்கள். இலங்கைத் தீவு ஈழத்தமிழர்கள் உட்பட்ட இலங்கையர்களின் தாயகம். இலங்கையோ, சிங்களவர்களோ எமது எதிரிகள் அல்ல. எதிரிகளை உருவாக்குவதோ, சித்தரிப்பதோ எமது போராட்டத்தின் நோக்கமாக அமையாது. மாற்றாக எமது நியாமான அனைத்து மக்களுக்கும் உரித்தான உரிமைகளை நிலைநாட்டுவது, சமூக நீதியைக் கோரிவது ஆகியனவே எமது போராட்டத்தின் இலக்குகளாக அமைய முடியும். ஆகவே இலங்கை, சிங்கள என்ற பொதுப்படையாக விமர்சிப்பதை முன்வைப்பது தவறானது.<br /><br />ஆயுதப் போராட்டத்தின் போது இயக்கங்கள் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது மேற்கொண்ட சில வன்முறைகள் சிங்களப் பொதுமக்கள் பலர் ஈழப் போராட்டத்தின் நியாங்களைப் புரிந்து கொள்ள பெரும் தடையாக அமைந்தது. இலங்கை அரசு மேற்கொண்ட, மேற்கொள்ளும் வன்முறையோடு ஒப்புடையில் இவை மிகச் சிறிய அளவில் இருந்தாலும் அவற்றை மறுத்துவிட முடியாது. அதையும் மீறி 1983 இலும் சரி, 2009 இலும் சரி தமிழர்களைப் பாதுகாப்பதிலும், இனப்படுகொலை ஆதரங்களை வெளிக்கொணர்வதிலும், நீதிக்கான போராட்டங்களை முன்னெடுப்பதிலும் சிங்கள மக்கள் பலரின் பங்களிப்பு மிக முக்கியமானது. போராட்டத்தின் உண்மையான வெற்றி சிங்களப் பொதுமக்களிடம் எமது சிக்கல்களைப் புரிந்து கொள்ள வைப்பதில்தான் இருக்கிறது. <br /><br />இலங்கையின் பேரினவதா அரசு, குழுக்களை அடையாளப்படுத்தி, அவர்களில் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவதற்கு நாம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் அதே வேளை சிங்களப் பொதுமக்களை நாம் அன்னியப்படுத்தலாகது. பாட்டுக்களிலும் சரி, பாதகைகளிலும் சரி சிங்கள என்று பொதுமையாக விமர்சிப்பது தவறு, எமது இலக்குகளுக்கு எதிரான விளைவையே அது தரும். மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் நாம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருத்தல் முக்கியம். நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-82247470841661457132013-03-20T21:28:00.001-07:002013-03-20T21:31:56.390-07:00சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தாதீர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அறவழியிலான எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கி இருப்பது மிகவும் வரகேற்கத் தக்க ஒன்று. சுயமாக சிந்திக்கத் தெரிந்தவர்கள், படித்தவர்கள், துணிவானவர்கள், விலைபோகாதவர்கள் கையில் போராட்டம் இருப்பது மிகச் சரியே. <a href="http://www.youtube.com/watch?v=cLtMjcgKEko" target="_blank">சேம்பியனின்</a> கருத்தில் இருக்கும் சிந்தனைச் செறிவு, தெளிவு, தொலைநோக்கு, கொள்கைத் தூய்மை மிகவும் மதிக்கத் தக்கது. <br />
<br />
ஆனால் அண்மையில் தொடக்கப் பள்ளி மாணவர்களை வைத்து பெரியவர்கள் நடத்திய ஒர் அணிகுப்பு பற்றிய படங்கள் வெளியாகி இருந்தன. இது மிகவும் மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்றாகும். ஈழப்பிரச்சினை போன்ற மிகவும் சிக்கலான விடயங்கள் தொடர்பாக சுயமாக சிந்திக்க, முடிவெடுக்க முடியாதவர்களை வைத்து போராட்டம் நடத்துவது ஒரு வகை child abuse தான். ஏன் அக்காமார்கள், அண்ணாமார்கள், பெரியவர்கள் போராடுகிறார்கள் என்பதை விளங்கப் படுத்த முயற்சிக்கலாம், நடந்த விடயங்கள் தொடர்பாக அக்கறைப் பட வைக்கலாம், ஆனால் கோசங்களைக் கூறியவாறு அணிவகுக்க வைப்பது தவறு. உங்கள் சிறுபிள்ளைத் தனத்தைதான் நிரூபிப்பீர்கள். <br />
<br />
குழந்தைகளை/சிறுவர்களை சமயம் சார் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதும் இது போன்ற ஒரு child abuse என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலே சுட்டியபடி சமயங்கள், இறைமறுப்பு, ஐயுறவியல் போன்றவற்றைப் பற்றி அறிவை வழங்கலாம். ஆனால் இது கடவுள் அது சாத்தான், இதற்கு அடிப்பணி, பூசை செய், வணங்கு என்பது போல செய்வது ஒரு வகை child abuse தான். தயவு செய்து குழந்தைகளை இவ்வாறு பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.</div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9645319.post-24193935820067775582012-11-28T20:05:00.002-08:002012-11-28T20:18:40.678-08:00யாழ் பல்கலையில் உணர்தலும் துணிதலும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
போராளிகளை, போர்வீரர்களை மதித்தல் நினைவுகூறல் என்பது அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாலானது. இதுவே எல்லா நாடுகளிலும், எல்லாச் சமூகங்களிலும் உள்ள வழமை. உணர்வுகளாலும் இலட்சியங்களாலும் மட்டுமே உந்தப்பட்டு உயிரையும் உடல் உறுப்புகளையும் மனங்களையும் இழந்து நிற்பவர்களுக்கு நாம் செய்யக் கூடிய மிகச் சொற்பமான கடமை இதுவேயாகும். <br />
<br />
உணர்தல், சிந்தித்தல், நினைவுகூறுதல் ஆகியன அடிப்படை மனித இயல்புகள், அடிப்படை மனித உரிமைகள். சிந்திப்பதற்கான சுதந்திரம் (freedom of thought), பேச்சுரிமை (freedom of speech), கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் (freedom of expression), ஊடகச் சுதந்திரம் (freedom of the press), கூடல் சுதந்திரம் (freedom of assembly) என்று அடிக்கிக் கொண்டே போகும் மனித உரிமைக் கூற்றுக்கள் இந்த உரிமைகளை உறுதிப்படுத்துகின்றன. இதை மறுப்பது என்பது ஒருவர் மனிதராக இருப்பதை மறுப்பது ஆகும். இன்றைய இலங்கையில் தமிழரின் நிலை இதுவே ஆகும். <br />
<br />
ஒரு புறம் மனித உரிமைகளைப் பேண தாம் பல நடவடிக்கைகளை எடுப்பது போலக் காட்டிக் கொள்ளும் சிங்களப் பேரினவாத அரசு, மறுபுறம் அந்த உரிமைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறியளவிலான செயற்பாடுகளைக் கூட அனுமதிப்பதில்லை. மிகக் கொடுமையாக நீ என்ன உணர்கிறாய் சிந்திக்கிறாய் என்ற நிலை வரை அவர்கள் மக்களை வன்முறையாகக் கட்டுப்படுத்துகிறார்கள். மிகப் பெரும் தமிழின இனப்படுகொலைக்குப் பின்பு, முற்றும் முழுதான படைத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈழத்தில் இருந்து அரசின் இக் கொடும் கட்டுப்பாடுகளை மீறி யாருக்கும் குரல் கொடுக்கத் துணிவு வரும் என்று யாரும் எண்ணி இருக்க மாட்டார்கள். அதனால்தான் <a href="http://ta.wikinews.org/s/5ba" target="_blank">யாழ் பல்கலையில் மாணவர் செய்த எதிர்ப்புப் போராட்டம்</a> என்னை அதிச்சியடைய வைத்தது. <br />
<br />
உனது அடிமனது உணர்ச்சிவரை கண்காணித்து, வேவுபாத்து, கோரமாக அடக்கும் அரசை எதிர்ப்பதை நிச வாழ்க்கையில் காண்கையில், நான் அப்படிச் செய்து இருப்பேனா என்றால். அனேகமாக இல்லை. வந்தோமா, படித்தோமா என்ற மனநிலையில் வளக்கப்படும் ஈழத்தவர்களில் ஒருவராகவே இருந்திருப்பேன். இந்த மாணவர்களின் பெற்றோர்களும் இதைத்தான் அவர்களுக்கு இன்று செல்வார்கள் என்று நினைக்கிறேன். இந்த பொளதீக, அரசியல், பண்பாட்டு சூழலில் சிந்திக்கையில்தான் இவர்களின் எதிர்ப்பும், உணர்வும், துணிவும் பல மடங்கு கனமாய் இருக்கிறது.<br />
<br />
ஈழத்தவர்களின் அரசியல் உரிமைகளை ஈழத்தில் வசிப்பவர்களே முடிவுசெய்ய வேண்டும் என்பது மிகச் சரியே. ஆனால் அந்த எதிர்ப்புப் போராட்ட மாணவர் கூறியது போல அவர்களின் உரிமைகளைக் கேக்க அவர்களுக்கு யாருமே இல்லை, எந்தச் சுதந்திரமும் இல்லை. அவர்கள் எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்கிறார்கள்.</div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9645319.post-49106411475142625062012-11-01T17:16:00.002-07:002012-11-01T17:26:47.381-07:00தமிழரல்லாதவருக்கு தமிழ் கற்பித்தல் அனுபவங்கள் - 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ரொறன்ரோவின் ஒரு சிறப்பியல்பு அதன் பல்லினப் பண்பாடுதான். பிற நகரங்களிலும் பார்க்க உணவைக் கடந்து ஒரு பண்பாட்டைப் புரிந்துகொள்ள, பங்கெடுக்க, ஆராய ரொறன்ரோ பல வாய்ப்புக்களைத் தருகிறது. அவ்வாறு, திறன் பகிர்வகம் ஊடாக ஒரு சீன நாட்டவரும் நானும் இருவருக்கும் அவரவருக்குத் தெரிந்த மொழிகளைக் (சீனம் - தமிழ்) கற்றுக்கொடுப்பது என்று உடன்பட்டோம். இவ்வாறு தொடங்கியதுதான் எனது தமிழரல்லாதவருக்கு தமிழ் கற்பித்தல் வகுப்புகள். <br />
<br />
எனது சீன நண்பர் ஒர் ஆவணப்பட பதிவாளர். பல சமூக அக்கறை உள்ள விடயங்களைப் பற்றி ஆவணப்படங்களும், குறுந் திரைப்படங்களும் எடுத்துள்ளார். இந்த ஆவணப்பட ஈடுபாடுகளினால் அவருக்கு தமிழ்நாட்டிலும் சில தொடர்புகள் உண்டு. அதன் நீட்சியாகவும், ஓர் இந்திய மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகவும் அவருக்கு தமிழ் கற்கும் ஆர்வம் ஏற்பட்டது. எமது முதல் வகுப்பில் தமிழ் மொழியைப் பற்றிய ஒரு பொதுவான அறிமுகத்தை வழங்கினேன். தமிழ் எங்கு எங்கு எல்லாம் பேசப்படுகிறது, எத்தனை பேரால் பேசப்படுகிறது, அதனைப் படிப்பதால் கிடைக்கும் பயன்கள், அதன் தற்போதைய, எதிர்கால நிலை போன்ற விடயங்களை எடுத்துரைத்தேன். தமிழின் தொன்மை, தொடர்ச்சி, பரவல் பற்றி அவர் அவ்வளவு அறிந்திருக்கவில்லை. எனவே தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவை உறுத்திப்படுத்தின.<br />
<br />
நானே முறையாகத் தமிழ் கற்காதவன். அந்த வகையில் தமிழை கற்பிப்பது தொடர்பாக பாடத் திட்டம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. இவர் ஒரு முதிர்த்த, பலத்த கல்விப் பின்புலம் உள்ள மாணவர். பிற மொழிகளைக் கற்ற அனுபவமும், மொழியல் கூறுகளைப் பற்றிய ஒரு விரிவான புரிதலும் கொண்டவர். எனவே இவருக்கு தமிழ் கற்பிக்கும் முறை நிச்சியமாக பிற சூழ்நிலைகளில் இருந்து வேறுபடுகிறது. குறிப்பாக தமிழ் மரபுவழி மாணவர்கள் ஓரளவாவது தமிழை கேட்டிருப்பார்கள், சில சொற்களை அறிந்திருப்பார்கள், அவர்களுக்கு தமிழ் பேச வாய்ப்புக்கள் அதிகம், எனவே அவர்களின் சூழலில் இருந்தும் இவரின் நிலை மாறுபடுகிறது. <br />
<br />
எனினும் எனது தமிழ்ப் பாடங்களையும் தமிழ் அரிச்சுவடியில் இருதே தொடங்கினேன். ப, ட, ச போன்ற சில எளிமையான எழுத்துக்களில் இருந்தும், பட்டம் போன்ற சில எளிமையான சொற்களில் இருந்தும் தமிழ் எழுத்துக்களைத் கற்பிக்கத் தொடங்கலாம் என்பது சிலரின் கருத்து. எனினும் நான் உயிர் எழுத்துக்களையும், பின்னர் ஒவ்வொரு வரிசையாக மெய், உயிர்மெய் எழுத்துக்களையும் கற்றுக்கொடுப்பது என்றே முடிவுசெய்தேன். தமிழ் உயிர் எழுத்துக்கள் ஆங்கில உயிர் எழுத்துக்களோடு ஒப்பிட்டும், குறில் நெடில் வேறுபாடுகளைச் சுட்டியும் விபரித்தேன். இதில் அவருக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. அடுத்து உயிர் எழுத்துக்கள்களும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து எவ்வாறு உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன என்று விபரித்து ஒவ்வொரு வரிசையாகப் படித்தோம். இவ்வாறு விளக்கியபின் அவருக்கு 247 எழுத்துக்கள் என்று இருந்த பயம் சற்றுக் குறைந்தது. ஒவ்வொரு வரிசைகளை எழுதப் பயன்படும் எழுத்து வடிவங்களையும், தோரணத்தில் உள்ள விதிவிலக்குகளையும் படித்தோம். ஒவ்வொரு வரிசை படித்த முடித்த பின்பும் அந்த எழுத்துக்களைப் பயன்படுத்தும் பின்னரும் சில எளிய சொற்களையும் கற்றுக் கொடுத்தேன். <br />
<br />
இந்த எழுத்துக்களை கற்றுக் கொடுக்கும் போதுதான் எனக்கு ஒரு விடயம் புரிந்தது. அவரைப் பொருத்த வரையில் அனைத்து எழுத்துக்களும் ஒரே பயன்பாடு கொண்டவை. அதாவது தமிழில் மிக அரிதாகப் பயன்படுத்தப்படும் எழுத்துக்களையும் ஒரே முக்கியத்துவம் கொடுத்து நினைவில் வைத்துக் கொள்ள முயற்சித்தார். இது தேவையற்றது என்று எடுத்துரைத்துன். எ.கா ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙௌ, ஞௌ, டௌ, ணௌ போன்றவை. <br />
<br />
தமிழ் ஆங்கிலம் போலே எழுத்துக் கூட்டலுக்கும் உச்சரிப்பிற்கும் பெரிய வேறுபாடுகள் கொண்ட மொழி அன்று. ஆனால் ஒரே எழுத்து ஒரு சொல்லில் எங்கே வருகிறது என்பதில் இருந்து அந்த எழுத்தின் உச்சரிப்பு சில சொற்களுக்கு வேறுபடுகிறது. இதை நான் கவனிக்கவில்லை. எ.கா காகம் என்ற சொல்லை உச்சரிக்கும் போது நாம் காஹம் என்றே உச்சரிக்கிறோம். இதை அவர் இலகுவாகக் கவனித்துவிடுகிறார். உச்சரிப்பில் மறைந்திருக்கும் இத்தகைய எழுத்துக்கள் பற்றி எனக்குப் போதிய விளக்கம் இல்லாதது ஒரு தடையாக இருந்தது. <br />
<br />
எழுத்துக்கள் வகுப்புக்களின் இறுதியில் பயன்பாட்டில் உள்ள ஸ், ஹ, ஜ ஆகிய கிரந்த எழுத்துக்களையும் அவருக்கு கற்றுக் கொடுத்தேன். <br />
<br />
(தொடரும்)<br />
<br /></div>
நற்கீரன்http://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com0