<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Tuesday, June 04, 2013

ஆங்கிலக் கல்வியால் மலேசிய, இலங்கைத் தமிழர்களை தமிழ்நாடு விற்றுவிட்டது

தமிழ்நாடு அரசின் ஆங்கில வழி முன்னெடுப்பு மலேசிய, இலங்கைத் தமிழர்களைப் பார்த்து என்ன சொல்கிறது.  நீங்கள் எல்லாம் மடையர்கள்.  தமிழ் தமிழ் என்று ஏன் சாகிறீர்கள்.  பேசாமல் மலாய் மொழியை, சிங்கள மொழியை அல்லது எதாவது திணிக்கப்படும் மொழியை ஏற்றுக் கொள்ளுங்கள்.  அது உங்கள் அறிவை வழக்கிறதோ இல்லையோ, உங்களின் குறுகிய கால அடிமைப் பொருளாதாரத்தை வளர்க்கும். 

தமிழர்களின் உரிமைகளை மறுக்கும், மிகவும் இக்கட்டான சூழல்களிலும் கூட மலேசியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் தமிழ் வழிக் கல்வியை விட்டுக் கொடுக்கவில்லை.  ஆனால் முழுமையான உரிமைகள் இருந்தும், ஒரு வித குறுகிய பார்வையில் ஆங்கில வழிக் கல்வியை தமிழ்நாடு அரசு அமுல்படுத்துகிறது.  தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி இல்லாமல் போனால், அதனால் கணிசமான பாதிப்பு மலேசிய இலங்கை மாணவர்களுக்கு ஏற்படும்.  எ.கா தமிழில் கல்வி வளங்கள் உருவாக்கப்படுவதற்கு எந்தவித ஊக்கமும் தமிழ்நாட்டில் இல்லாமல் போகும்.  அந்தக் கல்வி வளங்கள் இலங்கை, மலேசிய மாணவர்களுக்கு கிடைக்காமல் போகும்.  இதுவல்ல மோசமான விளைவு. 

தமிழ்நாட்டின் இந்த முடிவை முன் உதாரணம் காட்டி இலங்கையோ மலேசியாவோ வேற்று மொழிகளை தமிழ் மாணவர்கள் கல்வி மொழியாக ஆக்க முயற்சி செய்யக் கூடும்.  ஏற்கனவே அனைத்துலக வணிக கல்வி நிறுவனங்களுக்கு இது ஒரு விளம்பரமாக அமையும். 

ஈழப் போராட்ட கால கட்டத்திலும் சரி, மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் சரி தமிழ்நாடு அரசு ஒரு முதுகெலும்பு இல்லாத டமில் அரசாவே இருந்து வருகிறது.  அயலகத் தமிழர்கள் பற்றி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கவலைப்படுவது போன்று காண்பிப்பது எல்லாம் பொது மக்களுக்காகப் போடும் ஒரு நாடகம் என்று அனைவரும் அறிந்து இருந்தாலும்.  இவ்வாறு அடி வயற்றில் கை வைப்பார்கள் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். 

தமிழ்நாட்டில் தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழிய அரசியலாளர்களுக்கும் மட்டும் இல்லை, அயலகத் தமிழர்களுக்கும் இது ஒரு பெரும் தோல்வி.  ஈழப் போராட்டம் போன்று மீள முடியாத ஒரு திருப்புமுனைக்கு இது இட்டுச் செல்லும். 

Labels:

0கருத்துக்கள்

Post a Comment

<< Home