<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, May 20, 2013

தமிழ்நாட்டில் சீன வழிக் கல்வி

சீன மொழியே உலகில் அதிக மக்கள் பேசும் மொழி.  இன்று சீனா உலக வல்லரசாசிவிட்டது  சீனாவின் பொருளாதாரம் இந்தியாவை விட பல மடங்கு பெருகி வளர்ந்துள்ளது.  இதனால் சீன மொழி அறிந்த, மலிவான தொழிலாளர்களுக்கான பொருளாதார வாய்ப்பு மிகவும் வேகமாக வளச்சி அடைந்து வருகின்றது.

இந்த மிகப் பெரிய பொருளாதார வாய்ப்பை தமிழ்நாடு அரசு முறையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.  இந்தத் திட்டத்துக்கு அமைய தமிழ்நாட்டில் அடிப்படைக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கல்வி சீன வழியில் அமையும் என அதிமுக தலைவி செயலலிதா அறிவித்துள்ளார்.  இதன் முன் முயற்சியாக 320 பள்ளிகள் ஏற்கனவே சீன மொழியில் கல்வி முன்னெடுக்கப்படுகிறது. 

சீன மொழி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கடினமாக இருக்கின்றது என்றும், தாய் வழிக் கல்வியே சிறந்தது என்றும் அறிவியலாளர்களும் கல்வியாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.  சீனம் இரண்டாம் மொழியாக திறனையாகக் கற்பிக்கப்படலாம் என்றும், தேவைப்படுபவர்களுக்கு கூடிய மொழிக் கல்வி ஆதரவு வழங்கலாம் என்றும் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.  ஆனால் தமிழ்நாடு அரசு சீன வழிக் கல்வி இன்றைய பொருதாரத் தேவை என்றும், தமிழ்நாடு வேகமாகப் பொருதார வளர்ச்சி பெற இது அவசியம் என்று வாதிடுகிறது.  சீனா இந்தியாவை ஆக்கிரமித்தால், சீன வழிக் கல்வி இன்னும் கூடுதலாகப் பயன்படும் என்றும் கூறியுள்ளது.

Labels: ,

1கருத்துக்கள்

At 7:45 PM, Blogger ttpian said...

u know lot of chineese persons are in India:most of them are RICH in wealth& wisdom

 

Post a Comment

<< Home