<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, July 15, 2005

கொடுமை கொடுமை போர் கொடுமை

கொடுமை கொடுமை போர் கொடுமை
போரை இறைவன் படைத்தது கொடுமை
போரை தர்மமாய் வகுத்தது கொடுமை
போரை எம்மேல் திணித்தது கொடுமை

போதும் போதும் அழுகைகள் போதும்
ஆழ்கடல் பறந்து வந்தது போதும்
புதின உலகை பார்த்தது போதும்
ஜனனத்தை அலைச்சலில் துலைத்தது போதும்

வேண்டும் வேண்டும் விடுதலை வேண்டும்
மீண்டும் நம்கோர் புது வாழ்வு வேண்டும்
ஈழம் அமைதி பேண வேண்டும்
இலங்கையில் நீதி வெல்ல வேண்டும்

0கருத்துக்கள்

Post a Comment

<< Home