<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, August 25, 2005

சித்தர்கள்

சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரன்பாடான உறவு வைத்திருப்பவர்கள்.


சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்ப்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல. "மெய்புலன் காண்பது அறிவு" என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.


சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏன் என்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்கும் சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.


சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறய உலக நோக்கு. பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பவன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.


சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுபவர்கள், கலைஞ்ஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்தி பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்.

முன்னர் சுட்டியது போல இவர்கள்தான் சித்தர்கள் என்ற தெளிவான வரைமுறை இல்லை. எனினும், தமிழ் மரபில் சித்தர்களாக கணிக்கப்பகூடியவர்களின் (சித்தர் பாடல்கள் என்ற நூலில் உள்ள பட்டியல்) விபரங்கள் பின்வருமாறு:

சிவவாக்கியர்
அவ்வையார்
பட்டினத்தார்
பத்திரகிரியார்
அகப்பேய்ச் சித்தர்
அழுகணி சித்தர்
இடைக்காட்டுச் சித்தர்
கடுவெளிச் சித்தர்
பாம்பாட்டிச் சித்தர்
குதம்பைச் சித்தர்
கொங்கணச் சித்தர்
பீர்முகம்மது
வாலைசாமி
எனாதிச் சித்தர்
காளைச் சித்தர்
நந்தீசுவரர்
இராமதேவர்
கருவூரர்
சேஷயோகியார்
திருவள்ளுவர்
சட்டைமுனி சித்தர்
கணபதி சித்தர்
அகத்திய சித்தர்
உரோமரிசி சித்தர்
திருமூலர்
சுப்பிரமணிய சித்தர்
வால்மீகச் சித்தர்
காகபுசுண்டர்சித்தர்
சூரியானந்த சித்தர்
பட்டினச் சித்தர்
காரைச் சித்தர்

யோகர் சுவாமி
குடைச் சித்தர்

2கருத்துக்கள்

At 8:43 PM, Blogger பரஞ்சோதி said...

நண்பரே!

சித்தர்கள் பற்றிய தொடரை எழுதுங்களேன்.

 
At 5:36 AM, Blogger rnatesan said...

நண்பரே,
நிறைய விபரங்களை தந்துள்ளீர்கள்!!சிந்தித்த கோணமும் பாராட்டிற்குறியது!!
ஏதேனும் ஆராய்ச்சி செய்தீர்களா!!

 

Post a Comment

<< Home