<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, August 06, 2005

தமிழ்மணம், வலைப்பதிவு, வாசிப்பு - மீள்பதிப்பு

தமிழ்மணம் தமிழில் ஒரு புரட்ச்சி, மைல்கல் என்றால் அது மிகைப்படுத்தல் இல்லை. உலக பார்வையோடு, அழகிய வடிமைப்போடு, செழுமையான நுட்ப நிர்வாக கட்டமைப்போடு தமிழ்மணம் செயல்படுகின்றது. எளிமை, சுதந்திரம், திறமை ஆகிய பண்புகளை தமிழ்மணம் வெளிப்படுத்துகின்றது. தமிழ்மணத்தில் மனங்களை திறந்து மனிதர்கள் பேசுவது கேட்கின்றது. நகைச்சுவை, மகிழ்ச்சி பரவிகிடக்கின்றது. தகவல்கள் பரிமாடப்படுகின்றன. தேடல்கள், புரிதல்கள் நிகழுகின்றன. விமர்சனமும், எதிர் கருத்துக்களும் ஆரோக்கியமாக முன்வைக்கபடுகின்றன. தமிழ்மணம் யார் சொல்கின்றார்கள் என்பதை விட என்ன சொல்லபடுகின்றது என்பது வெளிவர களமாயிருக்கின்றது. தமிழர் பண்பாடு இதுவல்லவா என்பதற்க்கு தமிழ்மணம் ஒரு எடுத்துகாட்டு. இடையிடையே சிலர் வந்து தொந்தரவு செய்தாலும், அது தமிழ்மணத்தின் பண்பு இல்லை என்பதில் தமிழ்மணம் உறிதியுடன் நிற்க்கின்றது.

சமீபகாலமாக தமிழ்மணத்தை மேலும் மேன்படுத்தல், வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் மாற்றியமைத்தல், தமிழ்மணத்தின் எதிர்காலம் பற்றி பல உரையாடல்கள் நடக்கின்றன; அவற்றுள் பின்வருவன சில:

நவன் பகவதி-"வலைப்பதிவுகளில் வகைபிரித்தல்"
பத்ரி-"தமிழ்மணம் திரட்டியின் எதிர்காலம்"
செல்வராஜ்-"தமிழ்மணம்/வலைப்பதிவு குறித்த தொடர் சிந்தனைகள்"
"பொறுக்கி"-"தமிழ் வலைப்பதிவு குறித்து"
அருணா சீனிவாசன்-"வலைப்பதிவில் அவதூறு - தொடர்ச்சி..."

தமிழ்மணம் வகைபிரித்தும் திரட்ட வேண்டும் என்பது பதிவுகள் பெருக நிச்சியம் முக்கியமாகும். நவன் பகவதியின் முனைப்புக்கள் இதற்க்கு உதவ கூடும்.

மேலும் புதிதாக வலைப்பதிய வருகின்றவர்களாவது பின்வரும் வசதிகளை மென்பொருள் தெரிவில் வேண்டுவது நன்று.

1. வகைப்படுத்தல் வசதி
2. பொருள் விளங்கி தேடக்கூடிய வசதி
3. கருத்துரைத்தல் வசதி
4. பட, ஒலி. ஒளி கோப்புக்களை இலகுவில் வலையேறுதலுக்கான வசதி
5. செய்தியோடை வசதி
6. தமிழில் நேரடியாக கருத்துரைக்க வசதி (இதற்க்கு மேலதிக நிரல்கள் தேவைப்படும்)
7. புள்ளி விபர வசதி (விரும்பினால்)

தமிழ்மணம், வலைப்பதிவு நுட்பம் என்பவற்றில் பலர் சிந்தித்து செயலாற்றுகின்றார்கள். மகிழ்ச்சி. அதைப்பற்றி நிறுத்தி. நான் ஏன் வலைப்பதிகின்றேன், படிக்கின்றேன் என்பதை சிறிது பகிர்கின்றேன்.

மற்ற மனிதர்கள் என்ன செய்கின்றார்கள், எப்படி வாழ்கின்றார்கள், சிந்திக்கின்றார்கள், அனுபவிக்கின்றார்கள் என அறிய அனைவருக்கும் ஈடுபாடு உண்டு. இவ் ஈடுபாடே வலைப்பதிவின் அடிப்படை உந்திகளில் ஒன்று. மேலும், பல்வேறுபட்ட மனிதர்களோடு தொடர்புகளை தேடி நின்றாலும், எமது பின்புலத்தோடு, சிந்தனையோட்டத்தோடு, "அலைவரிசையோடு" தொடர்புடையவர்களோடு உரையாட முற்படுவது இயல்பே. ஆகையால்தான் தமிழ்மணம் நாடி நிற்க்கின்றேன்.

அனுபவ பகிர்வு, தகவல் பகிர்வு, சுட்டி பகிர்வு, சீரிய கட்டுரைகள், "இலக்கியம்", துணுக்குகள், உரையாடல்கள், நகைச்சுவை, ஆள்மாறாட்டம், புத்தக மீமீ என பல தரப்பட்ட பதிவுகள் பதியப்படுகின்றன. அவற்றை ரசிக்கின்றேன். நூற்கள், சஞ்சிகைகளிலும் பார்க்க பதிபவருக்கும் வாசிப்பவருக்கும் இருக்கும் இடைவெளி குறைவு, அது வாசகனை உற்சாகபடுத்துகின்றது. வலைப்பதிவர்கள் பலர் நான் தான் சரி என்ற மனப்பான்மையில் எழுதாமல், ஒரு வித திறந்த மன பண்போடுதான் எழுதுகின்றார்கள். தான் பிழை, அல்லது தான் நோக்கிய விதத்தை தவிர மாற்று பார்வைகள் உண்டு என்பதை சுட்டும் பொழுது ஏற்கும் பக்குவம் பலருக்கும் இருக்கின்றது.

சில கருபொருள்களே மீண்டும் மீண்டும் சர்க்கையாக்க படுகின்றன என்று நான் நினைக்கின்றேன். ஆகையால், வலைப்பதிவுகளில் சில கருபொருள்களுக்கு தடை போட்டால் நன்று :-)

1. தமிழ்
2. பிராமணியம்...ஆஆஆஆ
3. சாதி
4. ஈழம் (சார்பு, எதிர், நடுநிலை எல்லாவித கருத்துக்களுக்கும்)
5. அந்நியன், சந்திரமுகி
6. கட்சி சண்டைகள் (பா.ம.க, தி.மு.க, அ.தி.மு.க, தலித், ...)
7. எழுத்தாளர்கள் (சுஜதா, ஜெயகாந்தன், ...)
8. ஜோர்ச் புஸ்
9. பெண் உரிமை, பெண்ணியம்
10. ஒன்று கூடல்கள்

("சும்மா" தான் சொன்னேன், அப்புறம் எல்லாரும் வண்டி கட்ட வேண்டியதுதான்.)

ரொரன்ரோவில் வலைப்பதிவாளர்கள் ஒன்று கூடிய பொழுது யார் யாரை படிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. நான் வலை வலம் வரும் பொழுது தலைப்பு ஈர்ப்பாக இருந்தால் அப் பதிவை படிப்பேன் என்றேன். ஒருவரின் சில படைப்புக்கள் கவர்ந்து விட்டால் அவரின் முந்தய படைப்புக்களையும் படிப்பது வழக்கம். எனினும் சில பதிப்புக்கள், வலைப்பதிவாளர்கள் உடனடியாக யாபகம் வருகின்றன.

மயுலாடு துறை சிவா அவர்கள் எழுதிய "பாட்டிக்கு ஒர் கடிதம்" நான் எழுதாத ஒரு கடுதம் போல் இன்றும் மனதினுள் நிற்க்கின்றது.

ஒன்பது தொட்டு தொண்ணூறு தொள்ளாயிரம் என்ற குளப்பத்தை முன்நிறுத்திய முத்து.

மயூரன் எழுதும் பொழுது எப்பொழுதும் ஒரு வேகமும், நேரடியான உண்மையும் தெரியும்.

-/பெயரிலி அவர்களின் இரு பதிப்புக்கள் யாபகத்தில் இருக்கின்றன, ஒருவர் எந்த கண்னோட்டத்தில் சொல்ல வருகின்றார், எங்கே ஒருவரது கருத்து சறுக்குகின்றது என்பதை சுட்ட வல்லவர்.

ஒரு பொடிச்சி முதலில் வாசித்த் பொழுது ஒரு தெறிப்பு இருந்தது, கருத்துக்களை துணிவுடன் முன்வைக்கிறார்.

கறுப்பி, டிசே, வசந்தன், சுந்தரவடிவேல், மாயவரத்தான் பதிவுகளும் பின்னூட்டங்களில் செய்யும் கூத்துக்களும் ரசிக்க கூடியவை.

சுந்தரவடிவேல் தனது இளைய கால டயரியின் சில குறிப்புக்களை பதிவில் போட்டிருந்தார், பல விதமான தேடல்களை அடையாளம் கொள்ள கூடிதாக இருந்தது.

தங்கமணி-பலர் புத்தக மீமீ க்களில் இவரை ஒரு நூலகம் என்று வருணித்துள்ளார்கள்.

செல்வராஜ் நன்றாக விபரித்து, தெளிவாக எழுதுவார்.

ரவி ஸ்ரிநிவாஸ் பதிவுகளில் பல விதயங்கள் ஆழமாக ஊடுவி பதியப்பட்டிருக்கும்.

காசியின் எளிமை, எடுத்துக்காட்டுக்கள் என்றுமே நல்ல முன்மாதிரி.

ஈழம் என்றாலே உயிர் துடிக்கும் ஈழநாதனை யார்தான் தமிழ்மணத்தில் அறியாது இருக்க முடியும்.

வன்னியனின் ஈழ போர் பதிவுகள் சில ஈழத்துக்கே அழைத்து செல்ல வல்லன.

பத்ரி எங்கும் ஆழுமையுடன் பரவி நிற்க்கின்றார்.

கிஸோ, சினேகிதி பதிவுகளில் கனடா வாழ்க்கை வெளிப்பட்டு நிற்க்கின்றது.

மதி முன்னெடுக்கும் திட்டங்கள் எத்தனை எத்தனை...எப்படி நேரம் கிடைக்கின்றது.

இராம்.கி அவர்களின் பதிப்பை ஒரு பாடமாகவே படிப்பதுண்டு.

அல்வாசிட்டிகள் என்றாலே நகச்சுவை அல்லது கிண்டல்தான்.

ஜீவா அவர்களின் வலைப்பூவின் தலைப்பு self-checkout என் பதிவுகளுக்கு பொருந்தும் என்று நினைக்கின்றேன்.

பாலாஜி புத்தக மீமீ என்னை அழைத்திருந்தார். இனித்தான் பதிய வேண்டும். சற்று பிந்திவிட்டதுதான்.

தமிழ் பித்தன் - யாழ்பாணத்தில் இருந்து பதியும் ஒரு இளைஞ்ஞர்.

வெங்கட் - அறிவியலாளர், மைக்ரோ சோவ்ற் உடன் எப்பவும் சண்டைதான்.

காஞ்சி பிலிம்ஸ் படங்கள் போட்டிகள் என்றும் அசத்தல்தான்.

அண்ணா கண்ணன் - எழுத்து நடை கட்டுரைகள் மிகவும் நன்று.

வலைப்பதிவுகளின் ஆரம்பத்தில் மிகவும் அமர்களப்படித்தியவர் இட்லிவடை, இப்பொழுதும் அதே பகிடி இருக்கின்றது ஆனால் பதிவுகளின் எண்ணிக்கைதான் குறைந்து விட்டது.

இப்படி இப்படி பலருடை பதிவுகளை வாசிக்கின்றேன். எல்லோரை பற்றியும் இங்கு குறிப்பிடமுடியவில்லை.

இந்த வாரம் கூட ஐவர் புதிதாக வலை பதிய வந்திருக்கின்றார்கள்.

நெல்லை மைந்தன் - நெல்லை மாவட்டம் பற்றிய தவல்களை, படங்களுடன் பகிர்கின்றார்.
தார்சன் - நல்ல சுட்டிகளையும், கணனி தகவல்களை பகிர்வதகும் என பதிவு ஆரம்பித்திருக்கின்றார்.
அனிதா-நல்ல ரசனையுள்ள திரைப்பட பாடல்களை (எழுத்தில்) தருகின்றார்.
மூக்குகண்ணாடி-பல பார்வைகள் கொண்ட "கலவையான" பதிவு என்கின்றார், கனமாகவும் இருக்கின்றது.
கயல்விழி - சிறு கதைகள் பல பதிவில் இருக்கின்றன.

இறுதியாக, எனது வாசிப்புக்களும் பதிவுகளும் பல திசைகளின் விரிய உதவிய தமிழ் பட்டியல், தமிழ்மணம், வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

0கருத்துக்கள்

Post a Comment

<< Home