<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, August 05, 2013

பணக்கார நாடுகளில் சம்பளம் (ஊதியம்) ஏன் அதிகம்?

இந்தியாவில் பேருந்து ஓட்டும் ஒருவரை விட சுவிட்சர்லாந்தில் பேருந்து ஓட்டும் ஒருவருக்கு 50 மடங்கு சம்மளம் கிடைக்கிறது.  இது எதனால்? சுவிட்சர்லாந்தில் பேரூந்து ஓட்டுபவர் இந்தியாவில் பேருந்து ஓட்டுபவை விட 50 மடங்கு திறமையாக ஓட்டுகிறாரா?  சந்தைப் பொருளாதாரமா, முதலாளித்துவமா இந்த வேறுபாட்டை விளக்கிறது? மேற்கண்ட கேள்வியைக் கேக்கிறார் பொருளியலாளர் ஃக-யூன் சங் (Ha-Joon Chang). 

நிச்சியமாக இது திறமை வேறுபாட்டினால் இல்லை என்கிறார் சங்.  ஏன் என்றால் சுவிட்சர்லாந்து பேருந்து ஓட்டுநர்கள் இந்திய ஓடுநர்களை விட 50 மடங்கு திறமையானவர்களாக இருக்க முடியாது.  மாற்றாக, இந்தியாவில் மிகுந்த வீதி நெருக்கடிக்குள் பேருந்து ஓட்டுபவர்கள் கூடிய திறமை பெற்றவராக இருக்கும் வாய்ப்பு அதிகம். 

அப்படியானால், எப்படி இந்த வேறுபாட்டை விளக்குவது.  இது உலக பொருளாதார அரசியல் அமைப்புச் சார்ந்த ஒரு விடயம்.  இந்தப் பொருளாதார அமைப்பில் சுவிட்சர்லாந்து ஒட்டுமொத்தமாக உயர்ந்த உள்கட்டமைப்பு, வசதிகள் கொண்ட ஒரு நாட்டை உருவாக்கியுள்ளது.  இதில் எந்த ஒரு தனிப்பட்ட பேருந்து ஓட்டுனரின் பங்களிப்பு மிகச் சிறியது.  ஆகவே ஒருவரின் சம்பளம் ஒட்டுமொத்த சமூகம் சார்ந்த விடயம் என்கிறார்.  இது குறைந்த சம்பளக் காரர்களுக்கு மட்டும் இல்லை, பெரும் சம்பளம், பணம் ஈட்டுபவர்களும் சமூகம் சார்ந்தே இருக்கிறார்கள். 

தீவர சந்தைப் பொருளாதார, முதலாளித்துவ ஆதரவாளர்கள் இந்த உண்மையை மறுத்து ஒருவரின் சம்பளம் ஒருவரின் திறமைக்கு மட்டும் சந்தையால் தரப்படும் வெகுமதி என்று வாதிடுகிறார்கள்.  சங்கின் எடுத்துக்காட்டு இந்தக் கூற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.  மேலும் சங், அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடிய திறந்த சந்தை என்று ஒன்று இல்லை.  எல்லா திறந்த சந்தைகளுமே அரசியல் பொருளாதார சூழலியல் விதிகளுக்கு (regulation) உட்பட்டவை.  எடுத்துக்காட்டாக சுவிட்சர்லாந்தில் தாராள குடிவரவு இருந்தால் அங்கு பேரூந்து ஓட்டுவதற்கு கூடிய போட்டி இருக்கும், ஆகவே ஒட்டுநர்களுக்கு 50 மடங்கு சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்புக் குறைவு என்கிறார்.

திறந்த சந்தையில் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படும் சிங்கப்பூரில் 85% வீடுகள் அரச நிறுவனத்தினால் வழங்கப்படுகிறது.  டென்மார்க்கில் உழவர் கூட்டுறவுகள் மிக முக்கிய பங்களிப்புச் செய்கின்றன.  அமெரிக்காவில் பெரும்பான்மையான அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் அரசினாலேயே செய்யப்படுகிறது.  இவை எதை எடுத்துக் காட்டுகின்றன என்றால் தூய திறந்த சந்தை என்ற வாதம் தூய பொதுவுடமை என்றதைப் போன்று தவறானது.

எடுத்துக்காட்டாக ரொறன்ரோ நகரில் உணவு வண்டி (Food Truck) விடுவதை எடுத்துக்கொள்வோம்.  அண்மைவரை இது முற்றாகத் தடை செய்யப்பட்டு இருந்தது.  பெரும்பாலும் உணவங்களின் வேண்டுதலினால்.  முதலில் உணவு வண்டி விடுவது என்று தீர்மானித்தது போது அது தொடர்பாக பல விதிகள் கொண்டுவரப்பட்டன.  எ.கா என்ன வகையான உணவுகள் விற்கப்படலாம், உணவுகளை நலப் பரிசோதனைக்கு உட்படுத்தல், எங்கே உணவு வண்டிகள் தரிக்கலாம், எத்தனை உணவு வண்டிகளை விடலாம், என்ன வரி போன்ற பல விதிகள்.  அதன் பின் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம் தோல்வியில் அடைந்தது.  இப்பொழுது இன்னுமொரு முன்னோடித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  ஆக இந்தச் சிறிய எடுத்துக் காட்டில் இருந்து ஒரு பொருளாதாரச் செயற்பாடு எந்தளவுக்கு அரசியலுடன் அல்லது சமூகத்துடம் ஊடாடுகிறது என்பதை உணர முடியும். 

இந்தக் கருத்துக்களை சங் "முதலாளித்துவம் பற்றி அவர்கள் உங்களுக்கு தெரிவிக்காத 23 விடயங்கள்" ("23 Things They Don't Tell You About Capitalism") என்ற நூலில் விரிவாகக் கூறியுள்ளார்.  இந்த நூலை இன்னும் படிக்கவில்லை, ஆனால் படிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

http://www.youtube.com/watch?v=56RndDFRnH4
http://www.youtube.com/watch?v=AuhKRgBwDgU
http://www.youtube.com/watch?v=wlXbnuS6adc
 

Labels: , ,

2கருத்துக்கள்

At 11:56 AM, Blogger Unknown said...

தகவலுக்கு நன்றி

 
At 9:39 PM, Blogger ssk said...

எப்படித்தான் இந்த ஏற்ற தாழ்வு நீங்குமோ ?
எந்த அடிப்படை வசதியும் இல்லாத நம் ஊரில் சிறு நகரங்களில் ஒரு வீட்டு மனையின் விலை பணக்கார நாட்டின் விலையை விட அதிகம்.
ஆனால் அடிப்படை தொழில்களில் சம்பளம் பன் மடங்கு குறைவு
இப்படி இரண்டும் எதிர் துருவங்களில் இருப்பதால் இங்கு வாழும் மக்களின் நிலை மிக சிரமமாக உள்ளது

 

Post a Comment

<< Home