<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, October 15, 2011

அமெரிக்க முதலாளித்துவம் சிக்கல் 1 - வேளாண்மை மானியங்கள்

ஐக்கிய அமெரிக்கா சுமார் 180 பில்லியன் வரையான டொலர்களை தனது விவசாயிகளுக்கும், வணிக வேளாண் நிறுவனங்களுக்கும் மானியமாக வழங்குகிறது. எந்தவித பொருளாதாரத் தேவையும் இல்லாமல் கூட நேரடி மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 2-3 % மக்கள் மட்டுமே வேளாண்மையைத் தங்கி இருக்கிறார்கள். அரசியல் மற்றும் பிற காரணங்களுக்காக இந்த வேளாண் மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகள் பலவும் இதையே செய்கின்றன.

ஒரு நாட்டின் உணவு மூலம் அந்த நாட்டின் சமூகப் பொருளாதார நலனுக்கு அடிப்படையானது. ஆகவே அவர்கள் தங்கள் வேளாண்மையை தக்க வைக்கும் நடவடிக்கைகள் மிக உகந்ததாகப் படலாம். ஆனால் இந்தக் கொள்கை அவர்கள் முன்வைக்கும் முன்னெடுக்கும் முதலாளித்துவம் அல்லது திறந்த சந்தைக் கொள்கைக்கு எதிரானது. மேலாக இது ஆப்பிரிக்க மற்றும் வளர்ந்துவரும் நாடுகளையே பெரிந்தும் பாதிக்கிறது.

உணவை உற்பத்தி செய்யும் ஒரு ஆப்பிரிக்க அல்லது இந்திய விவசாயி மானியம் பெறும் அமெரிக்க விவசாயியோடு போட்டி போட முடியாது. அமெரிக்க விவசாயி பல இந்திரங்களைப் பயன்படுத்தி அதிகமாக உற்பத்தி செய்து அதிக பணத்தை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறான். அதனால் சந்தையில் பொருட்கள் கூடி விலையைச் சரிக்கிறது. எனவே இந்திய அல்லது வளர்முக நாடுகளின் விவசாயிகள் தங்கள் உற்பத்திகாக தகுந்த பெறுமதியைப் பெறமுடியாமல் போகிறார்கள். ஆப்பிரிக்க இந்திய விவசாயிகளின் தொழில்நுட்ப வீச்சுக் குறைவு என்று கூறுவது உண்மையல்ல. உலக ஒழுங்கு முறையே அவர்களுக்கு எதிராக உள்ளது.

முன்னர் சுட்டியபடி 2-3 % அமெரிக்க மக்களே வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இப்போது குடும்ப வயல்கள் போய், கார்ப்பிரட் வயல்களே பெருகி உள்ளன. எனவே மானியம் அந்த வணிக நிறுவனங்களுக்கே பெரிதும் போகிறது. அவர்களுக்காக இந்தியாவின், ஆப்பிரிக்காவின், பிற வளர்முக நாடுகளின் பெரும்பான்மை மக்களின் நலத்தை பாதிக்கும் கொள்கையே அமெரிக்காவினது. இந்தக் கொள்கை அமெரிக்காவின் அனைத்து கட்சிகளாலும் முன்னெடுக்கப்படுவதுதான்.

எனவே அமெரிக்காவின் போதனைகளுக்கும் நிசத்துக்கும் பெரும் இடைவெளி உண்டு. உண்மையான திறந்த சந்தை இதுவல்ல. உண்மையான திறந்த சந்தை சாத்தியமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

Labels:

0கருத்துக்கள்

Post a Comment

<< Home