மிருக உணவும் தாவர உரிமையும்
கோழி, ஆடு, பன்றி, மாடு, மீன் மற்றும் கடலுணவு ஆகியவை தொழிற்சாலை முறையில் உற்பத்தி செய்வது இன்று வழமை, அதுவே பரிமான பொருளாதார வளர்ச்சி என்றும் பொதுவாக கருதப்படுகின்றது. இவ் வியாபாரத்தில் மிருகங்கள் பல்வேறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றன, ஆனால் உற்பத்தியாளர்களோ, அரசோ, உண்பவர்களோ மிருகங்களின் உணர்வை பற்றி அதிகம் கவலைப்படுவது இல்லை. (http://www.veganoutreach.org/whyvegan/animals.html, http://www.meetyourmeat.com/) காரணம், உற்பத்தியாளர்கள் மிருகங்களை உயிர் அற்ற பொருட்கள்போலவே கருதி, அவ்வாறே கையாண்டு உணவு பொதியாக்கி விற்பனை முகவர்களுக்கு அனுப்புகின்றார்கள். அரசாங்கம் இச் செயற்பாட்டின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் உணவு தேவை கருதி மிருகவதை பற்றி அக்கறை காட்டுவத்தில்லை. உணவு உற்பத்தியில் இருந்து விலகி வாழும் மக்களுக்கு உணவு எப்படி தங்களை வந்தடைகின்றது என்பதில் அக்கறை இல்லை.
மனிதநேய அடிப்படையிலும், மிருக உரிமை நோக்கிலும் குமுகாயத்தின் இச் செயற்பாட்டை சிலர் எதிர்கின்றனர். இவ் ரீதியில் அவர்கள் தாவர உணவை ஆதரிக்கின்றனர். இவர்களிடம் முன்வைக்கப்படும் முதல் ஆட்சோபனை, நீங்கள் தாவரங்களை கொலை செய்கிறீர்களே என்பதுதான்? சிலர் அக்குற்றச்சாட்டை ஏற்று கொண்டு, தாங்கள் தாவரங்களை வதைத்து, கொலை செய்த்துதான் உண்கின்றோம் என்கின்றார்கள். காந்தி கூறியபடி மனிதன் அகிம்சையில் முற்றிலும் ஒழுங்க முடியாது, ஆனால் இயன்றவரை முயலவேண்டும் என்ற கருத்துப்பாட்டையே இவர்களும் முன்வைக்கின்றார்கள். (http://www.vegetus.org/essay/plants.htm, http://www.animalactivist.com/)
(மிருக உணவை மற்றவர்கள் மிருகங்களின் உயிருக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து உண்பதில் எனக்கு ஆட்சோபனை இல்லை. மிருகங்கள் துன்புறுத்தப்படுதலையும், தொழிற்சாலை முறையில் உற்பத்தி செய்யப்படுவதையுமே நான் எதிர்கின்றேன். மீனவன் மீன் உண்பதையோ, உழவன் கோழி உண்பதையோ அல்லது விற்பதையோ நான் எதர்க்கவில்லை.)
சிலர் மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் உணர்வு இருப்பதையே மறுக்கின்றனர். சிலர் மிருக-தாவர உணர்வை பொருட்படுத்த தேவையில்லை என்று கருதுகின்றனர். மேலும் சிலர் உலகில் மிருகங்களும் தாவரங்களும் மனிதனுக்காகவே படைக்கப்பெற்றன, ஆகையால் அவற்றை எப்படி பயன்படுத்தினாலும் தகும் என்கிறார்கள். எமக்கும் குரங்குகளுக்கும் இருக்கும் வித்தியாசம் மிகவும் சிறிது ("Gaps in the Mind") என்று விஞ்ஞானிகள் கூறிய பின்பும் எப்படி மிருகங்களுக்கு இருக்க கூடிய உணர்வை மறுப்பது, அல்லது பொருட்படுத்தாமல் விடுவது. முன்னர் மனிதன் தன்னையும் இப்பூமியையும் மையத்தில் வைத்து பார்த்துகொண்டிருந்தான், ஆனால் இப்பூமி பிரபஞ்சத்தில் மற்றும் ஒரு கிரணமே, அதில் மனிதன் ஒரு விலங்கே என்று அறிந்து கொண்டான். அப்படிப்பட்ட பிளையை மீண்டும் செய்யாமல், மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் மத்தியில் மனிதன் தன்னை ஏகாபத்தியாக கருதிகொள்ளாமல் அவற்றின் உணர்வுகளுக்கும், உயிர்களுக்கும், இருப்புக்கும் மதிப்பளிப்பு நடப்பதே நன்று.