<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, October 24, 2010

தற்பால்சேர்க்கையாளர் ரொறன்ரோ மேயர் வேட்பாளரை எதிர்த்து சிரிபிசி விளம்பரம்

தற்பால் சேர்க்கையாளர் ரொறன்ரோ மேயர் வேட்பாளரை (யோர்ச் சிமித்தர்மன்) எதிர்த்து சிரிபிசி (கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - http://www.ctbc.com/) விளம்பரம் ஒன்றை ஒலிபரப்பி உள்ளது. அதை நீங்கள் இங்கு கேக்கலாம் http://www.youtube.com/watch?v=8-4Q-gdDwCo. விளம்பரம் என்று கூறி ஒலிபரப்பினாலும், யார் ஒலிபரப்பினார்கள் என்று கூறவில்லை. இந்தச் செய்தி அனைத்து மைய ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து பகிரப்படுகிறது. இது மொத்த தமிழ்ச் சமூகத்துக்கு கேடான ஒரு பெயரைப் பெற்றுத் தந்துள்ள ஒரு வெக்கக் கேடான செயலாகும். சொற்ப விளம்பர பணத்திற்காக, எந்த வித வானொலி அறமும் இல்லாமல் இதை ஒலிபரப்பு செய்தது, கனடாவின் மூத்த முதல் முழு நேர ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு ஒரு வரலாற்றுக் கறையாகும்.

இந்து விழுமியங்களை துணைக்கு இழுத்திருப்பது, இந்த விடயத்தில் பிற சமயங்களிலும் பார்க்க ஒரு நெகிழ்ந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்து சமயத்துக்கும் ஒரு இழுக்கு ஆகும். எங்கட கலாச்சாரமாம், மண்ணாங்கட்டியாம்...காலம் காலமாக் பல கலந்துரையாடல்களில் பண்பாட்டை பரிசீலிக்க வேண்டும், சூழலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்று கூறி வந்த வானொலியின் இன்றை வெளிபாடு இது. என்ன பம்மாத்து. ஊருக்கெல்லோ உபதேசம், எமக்குகில்லையே.

கனடாவிலும் உலகெங்கும் தமிழ்ச் சமூகம் இனவேறுபாட்டால், வர்க்க வேறுபாட்டால், சிறுபான்மை இனம் என்பதால் பல பாதிப்புகளைச் சந்தித்து வந்துள்ளது. இதனால் நாம் ஏணையோரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் முழுமையான மதிப்புத் தந்து இயங்க வேண்டும். சாதியத்தால், பெண் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட நாம், தற்போது மீண்டும் மேலும் ஒரு சங்கிலியால் எம்மை பிணைந்து உள்ளோம்.

தற்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிராக இந்த வானொலி மட்டும் அல்ல, கீதவாணி வானொலியிலும் பல தடவைகள் மிக மோசமான எதிர்ப்புக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. ஒரு பல்லினப்பண்பாட்டு சூழலில் வாழும் தமிழர்கள் இன்னும் எவ்வளவு பிற்போக்கான விழுமியங்களைக் கொண்டுக்கிறார்கள் என்று எண்ணுகையில் நான் வெக்கிக்கிறேன்.

இந்த விளம்பரத்தில் குடிவரவாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிக்கும் ஃபோர்ட்டை ஆதரித்து கருத்து கூறி இருக்கிறார்கள். ஆனால் இதை எந்த ஒரு மைய ஊடகமும் ஒலிபரப்பி இருக்க மாட்டாது. ஏன் என்றால் அவர்கள் எம்மளவு பிற்போக்கானவர்களைக் கொண்டிருக்கா. இதை விட கவலைக்கிடமான நிலை என்னவென்றால், இந்த விளம்பரத்தால் கவரப்பட்டு பல தமிழர்கள் ஃபோர்ட்டுக்கு ஓட்டுப் போடப் போவதுதான்.

நாம் வேட்பாளர்களின் நிதி, சூழலியல், நிர்வாகம், வரி, போக்குவரத்து, உள்கட்டுமானம், கழிவு அகற்றல் போன்ற கொள்கைகளை ஆராய்ந்து விமர்சிக்கலாம். ஆனால் அவர்களுக்கு இயற்கையால் நிர்பந்திக்கப்பட்ட பாலியலை முன்வைத்து விமர்சிப்பது அறம் அற்றது, அறிவற்றது. சிரிபிசி வானொலி முழுமையாக இந்த விளம்பரத்தை நிராகரித்து, மன்னிப்புக் கோர வேண்டும். இதை உடனே செய்ய வேண்டும்.

1கருத்துக்கள்

At 5:48 AM, Blogger Unknown said...

iyappa swami eapadi piranthaar enru evarkaluku theriyatho poole... thamilar thangalukullaeyae aduthavan urimaiyai mathipathillai.......

ipadiyana nilaipaduhal palathin velipadae inraiya ilangai thamilarin nilai...

 

Post a Comment

<< Home