<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, April 09, 2006

றோய்யன் போர்

றோய்யன் போரே (Trojan War) கோமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட் மற்றும் ஓடிஸிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட் பத்து ஆண்டு நிகழந்த றோயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிஸி றோயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடியஸ் நாடு திரும்பையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.

கிரேக்க காப்பியங்கள் கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் என பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதை புலங்களை கொண்டவை. எனினும் றோய்யன் போரை கெலன் என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.

கிரேக்க நாட்டின் ஒரு நகரம் ஸ்பாற்ரா ஆகும். ஸ்பாற்ராவை ரின்டர்யஸ் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு கெலன் என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். கெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் ரின்டர்யஸ் அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்க பயந்தான், ஏன் என்றால் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்துவிடுவார்கள் என்பதால். இவர்களில் ஒர் இளவரசன், ஓடியஸ் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு யோசனையை ரின்டர்யஸ்சுக்கு சொன்னான். கெலனை மணக்க விரும்புகின்றார்களிடம் இருந்து ஒரு சத்தியம் பெறும்படி கேட்டான். யார் யார் எல்லாம் கெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு சுயம்வரத்தில் அவள் தேர்ந்த இளவரசனனூடான திருமணத்தை மதித்து பாதுகாப்பார் என்பதுவே. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்த இளவரசர்களும் இணங்கினர். கெலன் மெனெலஸ் என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலஸ் ஸ்பாற்ராவின் அரசுரிமையை பெற்றான். ஒடியஸ்சின் உதவிக்கு கைமாறாக தனது உறவினியான பெனலிப்பி என்ற பெண்ணை மணம் செய்ய ரின்டயர்ஸ் ஒடியஸ்சுக்கு உதவினான். ஒடியஸ் தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழ தொடங்கினான்.

இச்சமயம் பரிஸ் என்ற றோய் நாட்டு இளவரசன் ஸ்பாற்ராவிற்கு வந்தான். பரிஸ் கெலனை ஒரு வரமாக அஃறோடைரி என்ற காதல் தேவதைக்கு சார்பாக ஒரு தீர்ப்பு சொன்னதன் பலனாக பெற்றிருந்த்தான். பரிஸ் கெலனை கவர்ந்து றொய்க்கு மீட்டு சென்றான்.

கெலனின் தெரிவையும் திருமணத்தையும் பாதுகாக்க சத்தியம் செய்திருந்த கிரேக்க இளவரசர்கள் அனைவரும் அவளை மீட்பதற்காய் றோய் சென்றனர். இதனையே "ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு" என்று கிறிஸ்ரபர் மார்லொவ் பின்னர் விபரித்தான். கிரேக்கத்திற்கும் றோய்க்கும் அதன் நேச நாடுகளுக்கும் இடம்பெற்ற போரே றோயன் போராகும். இப்போரில் கிரேக்க படைகள் வென்று, றோய் அழிந்து போனது.

இப்போர் அல்லது இப்போர் ஒத்த வரலாற்று போர் உண்மையில் இடம்பெற்றதா, அல்லது றோயன் போர் ஒரு கதை அம்சமா என்பது நோக்கி எந்த வித தெளிவான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. ஆனால், இப்போரின் விபரணமும், இப்போரை பின்புலமாக வைத்து இயற்றப்பட்ட பல கிரேக்க காப்பியங்கள், தொன்மவியல் கதைகளும் இப்போரை மேற்கத்தைய இலக்கியத்தில், பண்பாட்டில், வரலாற்றில் ஒர் முக்கிய நிகழ்வாக ஆக்கியிருக்கின்றன.

றோய்யன் போர் - தமிழ் விக்கிபீடியா

தங்கக் கன்று

பைபிள் தொன்மவியல் கதைகளில் தங்கக் கன்று (Golden Calf) உருவச்சிலை ஒன்றை மையமாக வைத்து ஒரு முக்கிய கதை இருக்கின்றது. இஸ்ரேலிஸ் (இஸ்ரேல் மக்கள்) அடிமை வாழ்வை விட்டு எகிப்த்திலிருந்து வெளியேறி அவர்களுடைய நீண்ட யெரூசலம் நோக்கிய பயணப் பாதையில், சினைய் மலையடிவாரத்தில் இக்கதை நிகழ்கின்றது. கதையின் படி மோசஸ் இறைவனிடம் இருந்து 10 கட்டளை பெற சினைய் மலை உச்சி நோக்கி பயணித்து இருந்தார். பல நாட்கள் சென்றும் மோசஸ் திரும்பாததை கண்ட இஸ்ரேலியர்கள், அரோனிடம் தமக்கு கடவுள்கள் உருவாக்கி தரும்படி கேட்டனர். அதற்கு இணைந்த அரோன், அவர்களிடம் இருந்த தங்கத்தை பெற்று உருக்கி ஒரு தங்கக் கன்று உருவச்சிலை ஒன்றை உருவாக்கி ஒரு பீடத்தில் உயர்த்தி வைத்தான். அத்தங்கக் கன்றை கடவுள் என்று கூறி இஸ்ரேலியர்கள் நிவேதனம் மற்றும் பலி கொடுத்து வணங்கினர். மேலும் அவர்கள் பல விதமாக கொண்டாடினார்கள்.


ஆத்திரம் கொண்ட இறைவன் இஸ்ரேலியர்கள் தங்கள் ஒழுக்க நெறியில் இருந்து தவறிவிட்டதாகவும், ஆகையால் அவர்களை அழிக்கப்போவதாகவும் மோசஸ்டம் சொன்னார். மோசஸ் அவர்களை மன்னித்துவிடும்படி கெஞ்சினார். இறைவனும் அவரின் கோரிக்கைக்கு இணங்கினார். மோசஸ் 10 கட்டளைளோடு சினைய் மலையில் இருந்து இறங்கிய போது, அவரும் இஸ்ரேலியர்களின் ஒழுக்கமீறல்களை கண்டார், கோபம் கொண்டார். கோபத்தில் 10 கட்டளைகள் எழுதப்பட்டிருந்த கல்வெட்டுக்களை கீழே போட்டுடைத்தார். தங்கக் கன்றின் உருவச்சிலையை போட்டு எரித்து, அதன் சாம்பலை இஸ்ரேலியரை பருக வைத்தார். அரோனிடம் என்ன நடந்தது என்பதை கேட்டறிந்து, லெவியின் மகன்களை கூட்டி தவறுகளுக்கு தலைமை வகித்த 3000 ஆண்களை கொல்லும்படி உத்தரவு இட்டார். அதன் பின்னர் ஒரு கொடிய கொள்ளை நோய் இஸ்ரேலியர்களை வாட்டியது. மீண்டும் இறைவனிடம் சென்ற மோசஸ் இறைவனிடம் தன்னை தண்டிக்கும்படியும், மக்களை மன்னிக்கும் படியும் வேண்டினார். இறைவன் அவரவர் தம்முடைய குற்றங்களை தாமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மோசஸ்ஸை மீன்டும் சென்று இஸ்ரேலியருக்கு தலைமை தாங்குமாறு கூறி மீண்டும் 10 கட்டளைகளை அளித்தார்.

தங்கக் கன்று - தமிழ் விக்கிபீடியா