<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, March 11, 2012

தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் 2 - பல்லூடகங்கள்

இப்போதும் இராமயண கதையின் பாகங்களை வாசிக்கச் சொல்லி, கேள்விக்கு பதில் எழுதச் சொல்வதே தமிழ் கற்ப்பிப்பவர்களின் மூல உக்தியாக இருக்கிறது. பத்தி வாசித்து கேள்விக்கு பதில் எழுதுவதற்கு ஒரு இடம் இருக்கு இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் மொழிக் கல்விக்கு அதைத் தவிர வேறு பல வழிகள் உள்ளன.

தமிழ்மொழிக் கல்வியின் ஒரு முக்கிய நோக்கம் ஒருவர் தமிழ் மொழி ஊடாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆற்றலை உருவாக்குதல் ஆகும். இதற்கு மாணவர்களை ஈர்க்கும் ஒரு வழியாக பல்லூடகங்கள் அமைகின்றன.

ஒரு நிகழ்படத்தை, குறும்படத்தை, ஆவணப்படுத்தை உருவாக்கும் பயிற்சி ஒன்றை வழங்கலாமே. அதைப் பின்னர் யுடீப் போன்ற தளங்களில் உலகத் தமிழ் மொழி மாணவர்களோடும் பிறரோடும் பகிரலாமே. அத்தகையைப் பகிர்வில் கிட்டும் மறுமொழிகள் மாணவர்களுக்கு ஊக்கமாக அமையும் அல்லவா. பிற தமிழ் கற்கும் மாணவர்களோடு ஒரு உறவுப் பாலமாக இவை அமையும் அல்லவா. ஒரு வலைப்பதிவை, அல்லது ஒரு சமூக வலைப்பின்னலில் ஒரு குழுவைத் தொடங்கலாமே. வானொலி நிகழ்சியைத் தயாரிக்கலாம். ஒரு பாட்டு நிகழ்படத்தை உருவாக்க கேக்கலாம். ஒரு அசைபடத்தை தமிழில் உருவாக்கக் கேக்கலாம். ஊடகங்களை மீள்கலப்புச் செய்ய கோரலாம். விளம்பரங்கள் தயாரிக்கலாம். முதியோர்களை நேர்காணலாம். அந்த அந்த நாட்டு தமிழ் ஊடகங்களை பயிற்சியில் பயன்படுத்தலாம்.

ஊடகவியல், பல்லூடகங்கள் எந்த ஒரு மொழிக் கல்வியிலும் ஒரு முக்கிய பங்காற்ற வல்லவை, பல்லூடகப் பயிற்சியால் மாணவர்களுக்கு மொழிப் பயிற்சி மட்டும் அல்ல, ஊடகவியல் பயிற்சியும் கிடைக்கிறது. இதை ஏன் தமிழ் மொழிக் கல்வியின் ஒர் அங்கமாக ஆக்கக் கூடாது.

Labels:

0கருத்துக்கள்

Post a Comment

<< Home