<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, November 04, 2011

இலங்கையில் கொண்டுவரப்படும் நிலங்கள்/வணிகங்கள் அரசுடைமைக்கப்படும் சட்டம்

இலங்கை சமவுடமை, பொதுவுடமை வாதிகளுக்கு ஒரு பெரிய வெற்றி. எல்லாச் சொத்துக்களும் பொதுவுடமையாக்கப்பட வேண்டும் என்ற சமவுடைமைக் கொள்கையை இலங்கையின் சமவுடமை அரசு நிறைவேற்ற தொடங்கி உள்ளது. இலங்கைப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற ராசபக்ச குடும்பம் அங்கு வெற்றிகரமாக செயற்படாத அல்லது பயன்படுத்தப்படாத வணிகங்களையும் நிலங்களையும் அரசுடமையாக்கி உள்ளார்கள். இந்தச் சட்டத்தை முதலாளித்துவம் நசுக்க முடியாதவாறு ரகசியமாக உருவாக்கி, உயர் நீதி மன்றத்திலும் அனுமதி பெற்றாச்சு. ஐலண்ட் போன்ற வலதுசாரிப் பத்திரிகைகள் கொக்கரித்தாலும், இலங்கையின் பொதுவுடமைச் சிங்கம் ராசபக்ச நாட்டு நலன் கருதி இதைச் செயற்படுத்தி உள்ளார்.

இதுவரை 37 வணிகங்களும் நிலங்களும் இவ்வாறு அரசுடமைமையாக்கப்பட்டது என்று கூறினாலும், தமிழர்களின் சொத்துக்களை முதலே பட்டியல் போட்டாச்சு. அவற்றை இந்தச் சட்டத்துக்கு முன்னாலேயே எடுத்தாச்சு. இப்ப சிங்கள் ஆக்களிண்ட சில சொத்துக்களையும் நாட்டின் நலன் கருதி பொதுவுடமை ஆக்கி ஆச்சு. அவற்றை நாட்டுக்காக ராசபக்ச குடும்பம் திறமையாகப் பயன்படுத்தும். இது பற்றித்தான் ஐலண் பத்திரிகை சற்றுக் கவலை கொண்டு உள்ளது.

இலங்கை அரசு மேலும் மேலும் பலம் பெற வேண்டும். கல்வி, மருத்துவம், ஊடகம், வணிகம், பாதுகாப்பு, சமயம் என எல்லா விடயங்களையும் அரசே எல்லோருக்காகவும் சமமாக சரியாகப் பார்த்துக் கொள்ளும். அந்த நாள் வெகு தூரம் இல்லை. இலங்கையில் மலர்கிறது, சோவியர்கள் கனவு கண்ட பொதுவுடமைச் சொர்க்கம்.

Labels: , ,

0கருத்துக்கள்

Post a Comment

<< Home