<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, December 17, 2005

உறங்கி கிடக்கும் தமிழ் கணிமை தளங்கள்

உத்தமம்
உத்தமத்தின் தளத்தையே இப்பொழுத்து காணவில்லை. (தற்சமயம் அவ்முகவரி (www.infitt.org) சற்றும் தொடர்பில்லாத இணைப்புக்கு இட்டு செல்கின்றது. பல நல்ல கட்டுரைகள் இனி மீண்டும் எப்பொழுது இணையம் ஏற்றுப்படும்?) இவ்வருடம், இனி தமிழ் இணைய மாநாடு நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. வெளி வட்டத்தில் உள்ளவர்களுக்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றும் தெரியவில்லை. பாரிய பொறுப்பொன்றை ஏற்று, சிறப்பாகவே செயல்ப்பட்ட, அல்லது அப்படி தோன்றிய உத்தமம் திடீர் என மொளனமானது ஆர்வலர்களுக்கு கவலையே, எனினும் பலர் அலட்டி கொள்வதாக தெரியவில்லை.

தமிழ் லினிக்ஸ்
தமிழ் லினிக்ஸ் இல் முனைப்பாக செயல்பட்டுவந்த வெங்கட் அவர்கள் ழ பிரிவின் பின் சற்று ஓய்ந்து விட்டார் போல தெரிகின்றது. அக் குழுவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவ் வலைத்தளத்திலும் எந்த உயிர் துடிப்பும் இல்லை. (http://www.thamizhlinux.org/main/)

தமிழ் கணினி சங்கம்
பல மாணவர்களை உள்வாங்கி பல செயல்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவித்த தமிழ் கணினி சங்கத்தின் இணையதளமும் இன்று கணினியில் இல்லை. (http://www.kanithamizh.org/)

ழ கணினி - இணைய தளம் செயல்படுதாக தெரியவில்லை. (http://www.zhakanini.org/English/index.php)

தமிழா - தமிழா குழு தொடர்ந்து செயல்படுகின்றார்கள். ஆனால், அவர்களின் இணையத்தளம்தான்(http://thamizha.com/) இன்னும் இன்றைப்படுத்தப்படவில்லை. விளங்கிகொள்ளலாம்.


தமிழ் மின்நூலகங்களுக்கான ஒரு வலைப்பின்னல்
(http://bharani.dli.ernet.in/tadilnet/) - எந்த முன்னேற்றமும் அவதானிக்க முடியவில்லை.

சில காலங்களுக்கு முன்னர் நன்றாக செயற்பட்ட www.tamil.net, http://www.intamm.com/ அமைதியாகி விட்டது, அமைதியாகி பல காலம் ஆகிவிட்டது.

மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்டும், தகவல் செறிவாகவும் வெளிவந்த நுட்பம்(www.nudpam.com) இணைய சஞ்சிகையும் தற்சமயம் இணையத்தில் இல்லை.

கணினி விடயங்களை தாங்கி வந்த பிறதொரு தளம் http://www.digitalq.net, அதுவும் தற்சமயம் இல்லை.

தன்னாவலர்கள் எல்லோரும் ஒரேயடியாக ஓய்வுக்கு போய்விட்டார்களோ, அல்லது திரைமறைவில் இயங்குகின்றார்களா. தெரியவில்லை.

அல்லது, சுனாமி, அடைமழை அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பற்றி அலட்ட முக்கியம் இல்லைதானே, அவர்கள் அவ்வேலைகளில் இருக்கலாம்!

Friday, December 16, 2005

கொத்தடிமைகள்

தமிழ் சூழலில் (தமிழ் நாடு, இலங்கை) சாதி காரணமாகவோ, அல்லது தாழ்ந்த பொருளாதார நிலை காரணமாகவோ ஒரு தனி நபர், குடும்பங்கள், அல்லது சில சாதி குழுக்கள் பிற "உயர்" சாதி அல்லது உயர் பொருளாதார நிலையில் உள்ளவர்களுக்கு காலம் காலமாக வேலை செய்வது கொத்தடிமை எனலாம். பொதுவாக கொத்தடிமைத்தனம் தமிழ் சமூக அமைப்பின் ஒரு உள்ளற கட்டமைப்பே. எஜமானர்களை தவிர்த்து இவர்களுக்கென்று ஒரு தனி வாழ்வோ, அல்லது அப்படிப்பட்ட வாழ்வமைப்பதற்கான சூழ்நிலையோ இல்லை. அவர்களின் உள் மன சித்திரம் அடிமை வாழ்விற்க்கு ஒத்துபோவதற்க்கு ஏற்றமாறு பழகிவிட்டிருக்கின்றது.

வீடு சுத்தம் செய்தல், சமைத்தல், கழிவுகளை அகற்றுதல், வயல் வேலை, கல்லுடைத்தல், கட்டங்கள் கட்டும் வேலை, கைத்தறி போன்ற உடல் உழைப்பு பெரிதும் தேவைப்படும், அல்லது பிறர் செய்ய தயங்கும் வேலைகளை கொத்தடிமைகள் செய்ய பணிக்கப்படுவது வழக்கம். பொதுவாக இவர்களுக்கு உணவுவே பிரதான வேதனம். இவர்கள் ஒதுக்கப்பட்ட வசதிகள் அற்ற வதிவிடங்களில், அல்லது சேரிகளில் வசிப்பார்கள்.

கொத்தடிமைகள் இழி சாதிகளாகவோ அல்லது தீண்டாமை சாதிகளாகவோ கருதப்படும், சமூக படிநிலையில் மிகவும் பின் தங்கிய சமூகங்களில் இருந்து வருகின்றார்கள், அல்லது அச் சமூகங்களே அப்படி இருக்கின்றார்கள்.

கொத்தடிமைகள் வைத்திருப்பது மன்னர், காலனித்துவ ஆட்சிகளின் கீழ் வழமையா இருந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவிலோ, இலங்கையிலோ கொத்தடிமை வைத்திருப்பது ஒரு குற்றமுள்ள செயல். எனினும் இன்னும் கொத்தடிமைகள் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள்.

கொத்தடிமைகளை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்பவர்களில் இருந்து வேறுபடுத்தி காண வேண்டும். பொதுவாக கூலி வேலை செய்பவர்களுக்கு எவ் நேரத்திலும் வேலையிலிருந்து விலக சுதந்திரம் இருக்கும், ஆனால் கொத்தடிமைகளுக்கு அவ்சுதந்திரம் இருக்காது.

ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைகளாக அல்லது கொத்தடிமைகள் போன்று வேலைசெய்பவர்களும் இருக்கின்றார்கள். இவர்களையும், முழுமையாக கொத்தடிமைகளாக கொள்ள முடியாது.

இன்னும் கொத்தடிமைகள் இருக்கின்றார்கள் என்பது உறைக்கின்றது. அதேவேளை, நாம் அனைவரும் எதோ ஒரு வகையில் அடிமைகள்தானே?