ராஜினி-"இனியும் அழுகைகள் வேண்டாம் சகோதரி"
கொலைகள் மறக்கப்படுவத்தில்லை. ராஜினி புரட்டாதி 21, 1989 அன்று கொல்லப்பட்டதற்க்கு இன்று நீதி கேட்கப்படுகின்றது. "No More Tears Sister"-"இனியும் அழுகைகள் வேண்டாம் சகோதரி" என்ற ராஜி்னியின் கொலையை மையமாக வைத்த விபரண படம் கனேடிய தேசிய திரைப்பட சங்கத்தால் வெளியிடப்படுகின்றது (மேலும் தகவல்களுக்கு: www.nfb.ca). இப்படம் இன்றும் (04/26/2005-09:45 PM) வியாழக்கிழமையும் (04/28/2005-07:30 PM) www.hotdocs.ca விபரண திரைபட விழாவில் திரையிடப்படவிருக்கின்றது. அங்கு விபரணபட குழுவும் சமூகம் தர இருக்கின்றது. இதைப்பற்றிய செய்த்தி குறிப்பு -"A human face on Tiger tragedy" Globe and Mailலும் வெளிவந்திருக்கின்றது.
யாழ் பல்கலைகழக ஆசிரியராக இருந்த ராஜினி ஆரம்ப காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இயங்கினார். பின்னர் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி, புலிகள், இலங்கை அரசு செய்யும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்பட்டார், ஆதாரங்களை திரட்டினார். அவர் பங்களிப்பு செய்த "முறிந்த பனைமரம்"-"The Broken Palmyra" 1983 இருந்து 1989 வரை இடம்பற்ற பல மனித உரிமை மீறல்களையும், வரலாற்றையும் பதிவு செய்தது.
ராஜினியை புலிகளே கொன்றார்கள் என பொதுவாக கருதப்படுகின்றது. அவரது மூத்த சகோதரி இக்கருத்தையே வலுப்படுத்துகின்றார். புலிகளும் என்றும் மறுப்பு தெரிவித்தது கிடையாது.
புலிகளில் ஒருவராயிருந்தவர், பின்னர் மனித உரிமைகளுக்காக இயங்கியவரை புலிகள் ஏன் கொன்றார்கள் என்ற கேள்விக்கு இவ் விபரணப்படம் விளக்கம் தரலாம். போராட்ட வழிமுறைகள் தீவர மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இத்தருணத்தில் இவ் விபரணப்படம் வன்முறை தவிர்ந்த மாற்றுவழிகளுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கலாம்.
சட்டத்தை மீறி வன்முறை வழியாக செயற்பட்ட புலிகள் சட்டத்தை உருவாக்கும் சக்தியாக பரிமானித்திருக்கும் இக்காலகட்டத்தில், அவர்களின் சட்டம் ஒரு பொதுமகளுக்கு நீதி தருமா?
வரலாற்றில் நாம் செய்த, பிறர் நமக்கு செய்த கொடுமைகளை மன்னித்து தென் ஆபிரிகா போன்று ஒரு புதிய பாதை தெரிவு செய்வோமையனால், ராஜினியின் ஆத்மா தன் கொலைகாரர்களை மன்னிக்கும்...
மாறி எமக்குள் கொலைகளையும், வன்முறையை பிறக்குவிக்கும் வன்முறையையும் மீண்டும் மீண்டும் தெரிவோமானால், ராஜினி் பேன்றோரின் கொலகள் எம் மன சாட்சிகளை உறித்திகொண்டே இருக்கும்.